Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: தினச்செய்தி (சிறுகதை)

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6

    தினச்செய்தி (சிறுகதை)

    தினச்செய்தி (சிறுகதை)

    தினச்செய்தி தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலே மிகவும் பிரபலமான தமிழ் நாளிதழ். நகரம், கிராமம்,குக்கிராமம், மலைகிராமம், சந்து,இண்டு,இடுக்கு என்று அனைத்து இடங்களிளும் தினச்செய்தி நாளிதழ் தான். எந்த டீக்கடையாக இருந்தாலும் பால், பாய்லர், டீ மாஸ்டர் இருப்பதுப் போல கண்டிப்பாக தினச்செய்தி நாளிதழும் இருக்கும். மழையாக இருந்தாலும் சரி, புயலாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி, தினச்செய்தி கண்டிப்பாக மக்களை சேரும். மக்களும் தினச்செய்தியை காலையில் படித்தால் தான் அன்றைய தினம் அவங்களுக்கு தொடங்கும். அந்த அளவிற்க்கு தினச்செய்தி மக்களுடன் பல வருடங்களாக ஒன்றி விட்டது.

    08/08/08 காலை 7.00 மணி

    முகுந்தன் காலையில் எழுந்து காபியுடன் தினச்செய்தியை படிக்க துடங்கினான்.

    தினச்செய்தி
    08/08/08

    காதலி உல்லாசத்திற்கு மறுத்ததால், கள்ளக்காதலன் தற்கொலை

    கைக்குழந்தையுடன் இருக்கும் காதலியிடமும், கணவனிடமும் போலீஸ் விசாரனை.

    சென்னை 08’

    நேற்று மதியம் பல்லாவரம், தினகரன் நகர்-ஐ சேர்ந்த குமாரசாமி (வயது 55) என்பவருடைய மகன், வேல்(வயது 28), என்னும் வாலிபர், தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக் கொண்டார். போலீஸாருக்கு தகவல் சொல்லி, அவர்கள் வந்து பிணத்தை அப்புறபடுத்தினார்கள், போலீஸார் இறந்தவரின் பிரேதத்தை சோதனை செய்ததில், அவரின் சட்டை பாக்கெட்டில் ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. அந்த பெண்ணைப் பற்றி விசாரித்ததில், அவள் பெயர் கங்கா என்றும் திருமணம் ஆனவர் என்றும், மீனம்பாக்கத்தை சேர்த்தவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்து இருக்கும் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. அந்த கங்காவையும் அவரது கணவரையும், போலீஸ் விசாரனைக்கு உட்படுத்தியுள்ளனர். இன்னும் தற்கொலை பற்றிய திடிக்கிடும் காரணங்கள்
    போலீஸ் விசாரனைக்கு பிறகு தெரியவரும். கங்காவுக்கு கைகுழந்தை? இருப்பது குறிப்பிடத்தக்கது.


    முகுந்தன் “ச்சீ என்ன பொம்பளப்பா இது”, ரம்யா கண்ணா குளிக்க தண்ணி ரெடியா” என்று பேப்பரை வைத்து குளிக்கச்சென்றான்.


    08/08/08 மாலை 6.00 மணி

    கங்காவும் அவரது கணவனும் வீட்டுக்குள் நுழைந்தனர். கங்காவின் மாமியார் கதவை திறந்து விட்டாள். வீட்டில் மயான அமைதி, வீடே இருட்டாக இருந்தது. குழந்தை தூளியில் தூங்கிக் கொண்டு இருந்தது, விஷ்வா அமைதியாக கீழே உக்கார்ந்தான், கங்கா சுவரின் மூளையில் உக்கார்ந்தாள். மாமியார் மெல்ல பேச்சை எடுத்தாள்,

    “டேய் விசுவா என்னடா ஆச்சு” என்றாள் கண்ணீருடன்.

    “என்ன ஆச்சு மானம் போச்சு, இன்னும் என் உயிர் தான் பாக்கி” என்றான் கலங்கி கண்களுடன்.

    “அய்யோ விசுவா அப்படி சொல்லாதடா, நீ இல்லனா நாங்க என்னடா பண்ணுவோம், விசுவா.....” என்றாள் தாய். ஓரத்தில் கங்கா நொறுங்கிப் போய் உக்கார்ந்து இருந்தாள்.

    “என்ன ஆச்சு விசுவா யார்ரா அந்த பாழாப் போனவன், போலீஸல சொன்னாங்களா டா”

    முகத்தை துடைத்துக் கொண்டு விஷ்வா பேச ஆரம்பித்தான்.

    “அம்மா அவன் நம்ம கங்கா கூட காலேஜ்-ல படிச்சி இருக்கான், அப்போ இவளை காதலிக்கிறேன்னு பின்னாடியே சுத்தி இருக்கான், காலேஜ் முடிஞ்சது, அதுக்கப்புறம் அவனை காணவில்லை, ஆனால் இப்போ அவன் செத்து எல்லோரையும் சாவடிக்கிறான், பேப்பர்ல அசிங்கமா கள்ளக்காதல்ன்னு எழுதி இருக்காங்க, நாளைக்கு போட்டோ வேற வருமா, ..............பசங்க மனசாட்சியில்லாம எழுதறாங்க” என்று அழுதான்.

    “விசுவா அழாதடா, அவனுங்களுக்கு நல்ல சாவே வராதுடா” என்று தாயும் அழுதாள்.

    “இல்லமா பேப்பர்ல கங்காவுக்கு ஒரு கை குழந்தைன்னு போட்டு அது பக்கத்துல கேள்விக்குறி போட்டு இருக்காங்கமா, அதான் என்னால தாங்க முடியிலமா” என்று மேலும் அழுதான்.

    “ஏண்டா விசுவா, அப்படி போட்டா என்னடா அர்த்தம்”

    “ ...........அ........அந்த குழ....குழந்தை எனக்கு பிறந்ததா இல்ல, கள்ளகாத......பிறந்........” என்று மேலே சொல்ல முடியாமல் அழுதான்.

    “பாவிங்களா ஏண்டா இப்படி ஏழைங்கள சாவடிக்கிறீங்க, பெருமாளே, இது பத்தாதுனு நாளைக்கு போட்டோ வேற போடப் போறாங்களாமே, அய்யோ......” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள்.

    இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த கங்கா வீறுட்டுனு எழுந்தாள் தூளியில் அழுதுக் கொண்டு இருந்த குழந்தையை எடுத்தாள், தன்னுடைய
    ரவிக்கையை தளர்த்திக் கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்தாள், பிறகு குழந்தையை தூளியில் போட்டாள், அறைக்கு போய் கதவை சாத்திக் கொண்டாள்.


    09/08/08 காலை 7.00 மணி

    முகுந்தன் காலையில் எழுந்து காபியுடன் தினச்செய்தியை படிக்க துடங்கினான்.

    தினச்செய்தி
    09/08/08


    கள்ளக்காதலன் இறந்த துக்கம் தாளாமல், காதலியும் தற்கொலை
    அதே நாளில், அதே வழியில் இவளும் இறந்தாள்.

    சென்னை 09,

    ”கள்ளக்காதலன் இறந்த துக்கம் தாளாமல்...........................”



    முகுந்தன் “ச்சீசீ இப்படியும் ஒரு ஜென்மம் இருப்பாளா, சாவட்டும் சனியன்”, ஏய் ரம்யா குளிக்க தண்ணி வச்சாச்சா, டையம் ஆகுது எனக்கு”
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    ஒரு படத்தைப்பார்த்தாலோ அல்லது ஒரு கதையை வாசித்தாலோ
    அந்த கதையின் அல்லது படத்தின் தாக்கம் அந்த நாள் முளுதும்...
    ஏன் அடுத்தடுத்த நாட்களுக்கும் தொடரனும், அபோதுதான்
    அது சிறந்த கதையாக இருக்குமென்று சொல்ல கேட்டுள்ளேன்...

    அதைப்போல இந்தக்கதையும் இருக்கும் என்று தெரிகின்றது...
    உண்மையாகவே மனதை கணக்க வைத்த கதை....

    அதை நீங்கள் சொன்ன விதம் மிக்க அருமை

    தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் எழுத்துக்கள் நாளுக்கு நாள் வலம் பெருகின்றது.

    மன்றத்துக்கு சமீபத்தில் கிடைத்த சிறந்த கதாசிரியர் நீங்கள்....
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    நன்றி நாரதரே
    உங்கள் அனைவரின் நடுநிலையான விமர்சனங்கள் தான் காரணம் நண்பரே, மீண்டும் நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அசத்திட்டீங்க மூர்த்தி....
    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செய்திகள் திரித்து தருவது பல செய்தி ஊடகங்களுக்கு பழக்கமாகிவிட்டது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நினைத்துப் பார்ப்பார்களா தெரியவில்லை..!

    நல்ல கதையமைப்பு.. சிறந்த நடை..
    தினமும் ஒரு கதை எழுதறீங்க.. எப்படி தான் புதுசு புதுசா எழுதத் தோன்றுகிறதோ?

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by மதி View Post
    அசத்திட்டீங்க மூர்த்தி....
    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செய்திகள் திரித்து தருவது பல செய்தி ஊடகங்களுக்கு பழக்கமாகிவிட்டது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நினைத்துப் பார்ப்பார்களா தெரியவில்லை..!

    நல்ல கதையமைப்பு.. சிறந்த நடை..
    தினமும் ஒரு கதை எழுதறீங்க.. எப்படி தான் புதுசு புதுசா எழுதத் தோன்றுகிறதோ?
    நன்றி மதி
    அப்பா பயந்துக் கொண்டே இருந்தேன் என்ன சொல்லப் போறீங்களோன்னு, நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கதை சொன்ன விதம் புதுமை. கதையில் கையாண்ட கருவும் அருமை. எழுத்தும் கருத்தும் கதைசொல்லிக்கு சேர்க்கிறது பெருமை.

    வாழ்த்துகள் மூர்த்தி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    கதை சொன்ன விதம் புதுமை. கதையில் கையாண்ட கருவும் அருமை. எழுத்தும் கருத்தும் கதைசொல்லிக்கு சேர்க்கிறது பெருமை.

    வாழ்த்துகள் மூர்த்தி.
    கவிதையான பாராட்டுக்கு நன்றி திரு.சிவா
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    காவல்துறை, பத்திரிக்கைதுறை போன்றவற்றில் காணப்படும் களையப்படவேண்டிய குறைகளை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது கதை.

    ரம்யாக் கண்ணு, ஏய் ரம்யா என்றானது இன்னொரு செய்தியை உருவாக்கும் கருவாக இருக்கலாம்.

    ஆண்களில்தான் எத்தனை வகை என்பதுக்கு முகுந்தன் விசுவா உதாரணம்.

    பாராட்டுகள் மூர்த்தி - கீர்த்தி பெரிதான கதையை தந்தமைக்கு

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    புதுமைகளுடன் அழகான கதை..

    வலிகள் மட்டும் இன்னும் நெஞ:சோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது..

    தொடருங்கள்...வாழ்த்துக்கள்
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by அமரன் View Post
    ரம்யாக் கண்ணு, ஏய் ரம்யா என்றானது இன்னொரு செய்தியை உருவாக்கும் கருவாக இருக்கலாம்.
    நன்றி அமரன்
    நீங்கள் கதையை முழுமையாக படித்தீர்கள், புரிந்துக் கொண்டீர்கள் என்பதுக்கு உங்களின் இந்த வார்த்தைகளே உதாரணம், ஒரு வாசகர் கதையின் கருவை முழுமையாக புரிந்து கொண்டால், அந்த கதை சொல்லிக்கு அதைவிட பெரிய சந்தோஷம் இருக்க முடியாது, எனக்கு அந்த சந்தோஷத்தை தந்தமைக்கு நன்றி திரு.அமரன்
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by shibly591 View Post
    புதுமைகளுடன் அழகான கதை..

    வலிகள் மட்டும் இன்னும் நெஞ:சோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது..

    தொடருங்கள்...வாழ்த்துக்கள்
    நன்றி நண்பரே
    என் கதைகளை படித்தவுடனே ஊக்கவிக்கும் ஆச்சர்யம் நீங்கள்
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் MURALINITHISH's Avatar
    Join Date
    21 Mar 2008
    Posts
    161
    Post Thanks / Like
    iCash Credits
    25,471
    Downloads
    1
    Uploads
    0
    என்னடா இது ஒரு பத்திரிக்கை பற்றி இவ்வளவு பெருமையாக எதற்காக ஆரம்பித்து எழுதியிருக்கிறார்கள் என்று படித்தால் கடைசியில் புரிந்தது இப்படிதான் எருதுடைய வலி குத்தி எடுக்கும் காக்கை தெரியாது
    அனைவரையும் நேசிப்போம்
    அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை



Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •