Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: நிழல் நண்பன்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1

    நிழல் நண்பன்

    துருப்பிடித்த இரும்பாய்
    துடுப்பிழந்த படகாய்
    காலத்தின் கனலில்
    எங்கெங்கோ எரிக்கப்பட்டு

    இழுத்துச் செல்லப்பட்டு
    இழந்து நிற்கிறேன்....
    என்னையே நான்
    கொஞ்சம் கொஞ்சமாய்..!!

    இழந்தவையோ இருக்கின்றன
    இன்னும் அணையாமல்
    நினைவெனும் நினைவிடத்தில்..!!

    நிதர்சனத்தின் நீண்ட
    பயணத்தில் நீங்காது
    நீள்கின்றன........
    ஆறாத ரணங்களாய்
    அன்றைய நினைவுகள்..!!

    காலச்சுழற்சியில் கனவுகளும்
    கலைந்துப்போக ஏனோ
    நினைவுகள் மட்டும்....
    நிலையாய் நிற்கின்றன..!!

    உணர்வுகள் உருக்குலைய
    உறவுகள் உடைந்துபோக
    நிர்கதியான என்னை
    நித்தம் கொல்கின்றன
    நியாயமான நினைவுகள்..!!

    வலித்தாலும் வதைத்தாலும்
    வருத்தப்பட ஏதுமில்லை....
    இறுதிவரை இணைபிரியாமல்
    வாழ்வில் வழித்துணையாய்
    வருவது நினைவெனும்
    நிழல்நண்பன் மட்டுந்தானே..?!
    Last edited by சுகந்தப்ரீதன்; 09-06-2008 at 02:15 AM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    அருமை தம்பி,
    கவிதை அருமை,

    பல நேரங்களில் நம்மை நாமே தேற்றிகொள்ள
    நமது நினைவுகள் நமக்கு வழிவகுக்கும்.
    சமயங்களில் நினைவுகளுடன் கற்பனைகளும் கலந்து
    நம்மை தேற்றும்.

    வாழ்த்துக்கள்

    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நினைவுகள் சில நேரம் சுகம் சில நேரம் சுமை. ஆனால் தனிமைக் கொடுமைக்கு அவைதானே உற்ற நன்பன். அழகான வரிகள் சுபி. வாழ்த்துகள்!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    சுகந்தப்ரீதா??
    இதெல்லாம் எப்படீப்பா முடியுது?



    ஒரு நிலைக்கு பின் எந்தக்கண்ணத்திலும் எம்முடன் ந்நின்று ஆறுதல் சொல்லும் நண்பனை பற்றிய கவிதை.

    அசத்திவிட்டீர்கள்.
    பாராட்டுக்கள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    அட... எப்படி சு.பி.... இன்னிக்கி மதியம் சாப்பாட்டு வேளையில் நடந்த ஒரு உரையாடல்..... அதை முடித்துவிட்டு வந்து மன்றம் திறந்தால் உனது கவிதை... இதோ அந்த உரையாடல்....
    நானும் என்னுடன் பணிபுரிபவரும் அமர்ந்து அருந்திக் கொண்டிருக்கையில் அதே மேசையில் வந்தமர்கிறார் இன்னொரு நண்பர் சற்று வயதானவர்.
    ஒருவர் : வாங்கண்ணா உக்காருங்க...
    வந்தவர் : எப்படிருக்கீஙக ரொம்ப நாளாச்சு பார்த்து
    ஒருவர் : ஆமாங்க... இப்பல்லாம் இங்க வரதில்ல அவ்வளவா...
    ............... (இப்படி சில விசாரிப்புகள்)..............
    ஒருவர் : சரி வாழ்க்கை எப்படி போகுது....
    வந்தவர் : தனிமையில ஏதப்பா இனிமை...
    ஒருவர் : அட என்னங்க இப்படிச் சொல்லுறீங்க தனிமையில தானே நிறைய பேரு இனிமை கண்டிருக்கிறாங்க...
    வந்தவர் : அதெப்படி.....
    ஒருவர் : சித்தர்களையும் யோகிகளையும் பாருங்க தனிமையைத்தான் பல புதிய சிந்தனைகளுக்கு உபயோகப் படுத்திக்கிட்டாங்க... ஏன் புத்தரை எடுத்துக் கொள்ளுங்கள்.... அவரும் தனிமையில் தான் ஞானம் பெற்று கவலையை விட்டாராம்.
    இன்னும் நிறைய எழுத்தாளர்கள் சிறையில் இருக்கும் போது எழுதிய பல பல புகழ்பெற்ற புத்தகங்கள் நிறைய இருக்கின்றன.
    வந்தவர் : அது சரி.....
    ஒருவர் : தனிமைய சாதாரண களிமண் மாதிரி சொல்லலாம்...
    ஒரு குயவனை கூப்பிட்டு களிமண்ண கொடுத்தா அவன் அதை பானையாக்குவான்...
    ஒரு சிற்பிகிட்ட களிமண்ண குடுத்தா அவன் அதை சிலையாக்குவான்
    ஒரு குழந்தைகிட்ட குடுத்தா வச்சு விளையாடிட்டுருக்கும்
    அதே களிமண்ண இன்னொருத்தன் வச்சிட்டு என்னடா இது களிமண்ண குடுத்துருக்காங்கண்ணு புலம்பிட்டுருப்பான்...
    இன்னொருத்தர் : ஏலேய் இப்போ அவரு சாப்பாடு எடுத்திட்டு வந்திருக்காரு சாப்பிட விடுறியா? இல்லியா?
    நான்.......... எஸ்கேப்...................
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by Mano.G. View Post
    அருமை தம்பி,
    கவிதை அருமை,வாழ்த்துக்கள்
    மனோ.ஜி
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அழகான வரிகள் சுபி. வாழ்த்துகள்!
    வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி மனோ.ஜி மற்றும் சிவா.ஜி அண்ணா..!!
    Quote Originally Posted by விராடன் View Post
    சுகந்தப்ரீதா??
    இதெல்லாம் எப்படீப்பா முடியுது?
    எப்படி என்றால் எப்படி அண்ணாச்சி..?!
    அப்பப்ப தனிமையில அவனோடத்தான உறவாடிட்டிருக்கோம்..!!
    அவனுக்கு நன்றிசொல்லனும்ன்னு தோனுச்சி அதான் அண்ணாச்சி..இப்படி..!!
    Quote Originally Posted by செல்வா View Post
    அட... எப்படி சு.பி.... நான்.......... எஸ்கேப்...................
    நல்ல கருத்துள்ள உரையாடல் செல்வா...!! அப்ப இனி உங்களை "சிந்தனை செல்வா" ன்னு நாங்க சொல்லலாம்தானே.?!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நன்றி சுபி.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    நல்ல கருத்துள்ள உரையாடல் செல்வா...!! அப்ப இனி உங்களை "சிந்தனை செல்வா" ன்னு நாங்க சொல்லலாம்தானே.?!
    செல்வா என்றழைத்தாலே போதும் என் சிந்தை குளிருமே.... எதற்காக சிந்தனை என்ற நிந்தனை ....

    உங்கள் கவி அருமை சுகந்தன்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by பூமகள் View Post
    நன்றி சுபி.
    நன்றி யாருக்கு எனக்கா..?? என் நண்பனுக்கா..பூ..??
    எங்கள்ல யாருக்கா இருந்தா என்ன.. உனக்கு என்னோட நன்றி..!!
    Quote Originally Posted by செல்வா View Post
    செல்வா என்றழைத்தாலே போதும் என் சிந்தை குளிருமே.... எதற்காக சிந்தனை என்ற நிந்தனை ....
    உங்கள் கவி அருமை சுகந்தன்.
    மிக்க நன்றி செல்வா..!!
    அடைமொழி அழகா பொருந்தி வருதேன்னு சொன்னேன்..!!
    சரி...உங்களுக்கு வேண்டாம்ன்னா இனி செல்வான்னே சொல்வோம்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    காலத்தை வெள்ளம் என, சுழல் என வாசித்ததுண்டு..

    ப்ரீதன் இங்கே கனல் எனச் சொன்னதிலேயே
    வெப்பம் விளங்கி விட்டது...

    எரிந்தவை சேகரம்..
    இன்று எரிபவை நாளைக்காகும்...

    நாம் எரியும்நேரம் எல்லாக்
    கணக்கும் நிலுவை தீரும்..

    செல்வாவின் பொருத்தமான பின்னூட்டம் - அருமை..


    பாராட்டுகள் ப்ரீதா!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    நன்றி யாருக்கு எனக்கா..?? என் நண்பனுக்கா..பூ..??
    சில விசயங்கள்.. நம்மை பிரதிபலிப்பதாக அமைந்துவிடுவதுண்டு.. சுகு.. அப்போது.. விமர்சிக்க வார்த்தைகள் கிடைப்பதில்லை...

    அவ்வகை உணர்வை உனது இக்கவி எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது... அதனால் சிறிது நேரத்துக்கு என்னால் நன்றி தவிர எதை எழுதுவது என்றே புரியவில்லை..

    அவ்வகையில்.. நன்றியும் பாராட்டுதல்களையும் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்...

    அழகான வார்த்தைக் கோவை.. அருமை சுபி... மனமார்ந்த பாராட்டுகள்..
    இன்னும் பல கவிதைகள் அடிக்கடி எழுத வேண்டுமென்று செல்லமான கட்டளை..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by இளசு View Post
    எரிந்தவை சேகரம்..
    இன்று எரிபவை நாளைக்காகும்...

    நாம் எரியும்நேரம் எல்லாக்
    கணக்கும் நிலுவை தீரும்..!
    அற்புதம் இளசு அண்ணா..!! (நல்லாயிருக்கீங்களா..??)
    அழகா பட்டுன்னு நெஞ்சுல பதியுறமாதிரி சொல்லிட்டீங்க..!!
    இதுக்குமேல எதுக்கு விளக்கம்..?! மிக்க நன்றியண்ணா..!!
    Quote Originally Posted by பூமகள் View Post
    இன்னும் பல கவிதைகள் அடிக்கடி எழுத வேண்டுமென்று செல்லமான கட்டளை..!!
    மன்னிக்கவும்..பூ..!! அவசரப்பட்டு புரிந்துக் கொள்ளாமல் பதில் பதிவிட்டு விட்டேனோ..?? பரவாயில்லை.. மிக்க மகிழ்ச்சி..பூ..நீங்களும் தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •