உறவுகள்
இயற்கையாய் நடந்தது இது எல்லாம்
விதை சிறு துளிர் விட்டது
துளிர் மெல்ல தளிர் விட்டது
தளிர் பின் குறுஞ்செடியாய் ஆனது
காலம் கூடியதும் மொட்டுக்கள் பிறந்தன
வண்ண மொட்டுக்கள் பூவாய் பூத்தன
பூ காயாக , காய் பழமாக
விதைகள் வெடிக்க விழுந்தது பழம்
செடிகள் காய்த்து ஓய்ந்த பின்
சருகாகி காணாமல் போனது மண்ணுக்குள்
என்னடா விதிஎன்று ஏங்கி தவிக்கையிலே
மீண்டும் விதை சிறுதுளிர் விட்டது.
இது எல்லாம் இயற்கை என்று
ஏற்றுக்கொள்ளும் மனம் - இடையில்
காம்பை பிரிந்த பூவை பார்த்து
பட்டி மன்றம் வைப்பது ஏன் ???
Bookmarks