Results 1 to 12 of 12

Thread: உறவுகள்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Post உறவுகள்




    உறவுகள்

    இயற்கையாய் நடந்தது இது எல்லாம்
    விதை சிறு துளிர் விட்டது
    துளிர் மெல்ல தளிர் விட்டது
    தளிர் பின் குறுஞ்செடியாய் ஆனது

    காலம் கூடியதும் மொட்டுக்கள் பிறந்தன
    வண்ண மொட்டுக்கள் பூவாய் பூத்தன
    பூ காயாக , காய் பழமாக
    விதைகள் வெடிக்க விழுந்தது பழம்

    செடிகள் காய்த்து ஓய்ந்த பின்
    சருகாகி காணாமல் போனது மண்ணுக்குள்
    என்னடா விதிஎன்று ஏங்கி தவிக்கையிலே
    மீண்டும் விதை சிறுதுளிர் விட்டது.

    இது எல்லாம் இயற்கை என்று
    ஏற்றுக்கொள்ளும் மனம் - இடையில்
    காம்பை பிரிந்த பூவை பார்த்து
    பட்டி மன்றம் வைப்பது ஏன் ???
    Last edited by இளசு; 06-04-2010 at 06:33 PM.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    கணிப்பொறியியல் படிப்பின் கடைசி வருட படிப்பை முடிக்கும் தருணத்தில் இறந்த நண்பரின் நினைவாக இந்த கவிதை
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உதிர்ந்தப் பூவை எண்ணி செடி அழுவதில்லை, முறிந்தக் கிளையை எண்ணி மரம் கண்ணீர் விடுவதில்லை....ஆனால் மனிதன்....வளர்த்த மீன் இறந்தாலும் மனம் வருந்துகிறான். தோற்றமும், மறைவும் இயற்கையென்றாலும்.....இழப்பை அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

    பூவும், கிளையும் தன் எந்த நினைவையும், செடியிடமும், மரமிடமும் விட்டுச் செல்வதில்லை....ஆனால் உறவுகள்...???

    உங்கள் நண்பருக்கு என் அஞ்சலிகள் ரவீ.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஒவ்வொரு வினாடிகளிலும்
    மரணம் தேடித்
    தேடாமலே செல்லுவதுதான்
    நம் வாழ்வு...

    காலக் கழியலில்
    மரணத்தை நெருங்குவதைத்
    தவிர்க்க முடியாது...
    இதனை நினைத்து
    மரணம் மனதை நெருக்குவதைத்
    தவிர்த்திடாவிட்டால்
    தினமும் முட்படுக்கைதான்...

    மரண அளவீடு
    எதனடிப்படையில் என்பது புதிர்தான்...
    ஆயுளின் அடிப்படை
    எது என்பதற்கு விடை இல்லைதான்...

    மரணம் வரும்போது வரட்டும்.
    அதுவரைக்கும்
    மனங்கள் சந்தோஷிக்கட்டும்...

    மொட்டவிழும் தருணத்தில்,
    பூ ஒன்று இறைவன் சந்நிதானத்தில்...
    அங்கு இதழ்விரித்து,
    மாறா மணம்பரப்பி,
    வாடாதிருக்கும்...

    நம்புவோம்... பிரார்த்திப்போம்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Lightbulb மறதி என்ற மருந்து காயங்களை குணமாக்கும் .

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    தோற்றமும், மறைவும் இயற்கையென்றாலும்..... இழப்பை அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

    பூவும், கிளையும் தன் எந்த நினைவையும், செடியிடமும், மரமிடமும் விட்டுச் செல்வதில்லை....ஆனால் உறவுகள்...???

    உங்கள் நண்பருக்கு என் அஞ்சலிகள் ரவீ.
    ஆறறிவு என்று நமக்கு ஆண்டவன் வைத்த ஆப்பு அதுதானே சிவா . மறதி என்ற மருந்து ஒன்றே இழப்பு என்னும் காயங்களை குணமாக்கும் .
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Lightbulb சிந்தனையை எளிமையாக கொடுத்ததற்கு நன்றி

    Quote Originally Posted by அக்னி View Post

    காலக் கழியலில்
    மரணத்தை நெருங்குவதைத்
    தவிர்க்க முடியாது...
    இதனை நினைத்து
    மரணம் மனதை நெருக்குவதைத்
    தவிர்த்திடாவிட்டால்
    தினமும் முட்படுக்கைதான்...

    மரண அளவீடு
    எதனடிப்படையில் என்பது புதிர்தான்...
    ஆயுளின் அடிப்படை
    எது என்பதற்கு விடை இல்லைதான்...




    நம்புவோம்... பிரார்த்திப்போம்...
    அருமையான எழுத்துக்கள் , ஆழமான சிந்தனையை எளிமையாக கொடுத்ததற்கு நன்றி அக்னி
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நீலவானம் படத்தில் ஒரு வசனம் வரும் :

    ஆறிலும் சாவு.... நூறிலும் சாவு..
    ஆனால் இருபதில் சாவு?



    சூஃபி, புத்தர் கதைகளில் இந்த அகால மரணம் எழுப்பும்
    அபஸ்வரக் கேள்விகள் இன்னும் பதிலின்றி தொக்கி நிற்கின்றன.


    அப்பன் சாவான் - அவன் பின்னே
    மகன் சாவான்... - அவன் பின்னே
    அவன் மகனும்..


    இந்த வரிசை தப்பும்போதெல்லாம்
    இயற்கை மேல் கோபம் வரும் எனக்கு.



    ஆழ்ந்த சோகத்தைப் பகிர்கிறேன் ரவீ..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    கனியுதிரலாம்
    காயுதிரலாமா?
    பிஞ்சுதிரலாமா?
    பூவுதிரலாமா?
    மொக்குதிரலாமா?

    உதிர்ந்தால் தாங்குமா மனம்...?

    உங்கள் நண்பரின் பிரிவிற்கு அஞ்சலிகள்.

    சோகச் சுமைதாங்கி....கனமான கவிதை...
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    நீலவானம் படத்தில் ஒரு வசனம் வரும் :

    ஆறிலும் சாவு.... நூறிலும் சாவு..
    ஆனால் இருபதில் சாவு?



    சூஃபி, புத்தர் கதைகளில் இந்த அகால மரணம் எழுப்பும்
    அபஸ்வரக் கேள்விகள் இன்னும் பதிலின்றி தொக்கி நிற்கின்றன.


    அப்பன் சாவான் - அவன் பின்னே
    மகன் சாவான்... - அவன் பின்னே
    அவன் மகனும்..


    இந்த வரிசை தப்பும்போதெல்லாம்
    இயற்கை மேல் கோபம் வரும் எனக்கு.



    ஆழ்ந்த சோகத்தைப் பகிர்கிறேன் ரவீ..

    அருமையான மேற்கோள் இளசு , நண்பரை என்னும் போது எல்லாம் கண்களின் ஓரத்தில் ஒரு துளி நீர் என்னை அறியாமல்
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    கனியுதிரலாம்
    காயுதிரலாமா?
    பிஞ்சுதிரலாமா?
    பூவுதிரலாமா?
    மொக்குதிரலாமா?

    உதிர்ந்தால் தாங்குமா மனம்...?

    உங்கள் நண்பரின் பிரிவிற்கு அஞ்சலிகள்.

    சோகச் சுமைதாங்கி....கனமான கவிதை...
    நன்றி செல்வா என் சோகங்களை உங்கள் தோள்களில் வாங்கி கொண்டதற்கு
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    நெகிழ்ச்சியான கவிதை.
    வாழ வேண்டிய வயதில் உதிர்ந்த உங்கள் நண்பரின் முடிவை எண்ணிக் கலங்குகின்றது நெஞ்சம். காலம் தான் உங்கள் மனத்துயரை ஆற்றும்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    கலை நண்பரின் பெற்றோர்களை நினைத்தால் தான் மனம் ரொம்ப கஷ்டப்படுகிறது . அவர் அவனுக்காக வீடு தொழில் என்று எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து வைத்தார். இப்போது அவைகள் மட்டும் அவர்கள் பார்வையில்
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •