Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: பவழவாய் திறந்துவிடை பகருவாயே!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0

    பவழவாய் திறந்துவிடை பகருவாயே!

    அன்பார்ந்த இனிய தமிழ்மன்ற நட்புள்ளங்களே!

    நான் இங்கே அறுசீர் மண்டில வடிவில் எழுதும் விடுகதைகளை எந்த விடுகதை நூலிலிருந்தும் எடுத்து எழுதவில்லை.

    நெடுநாட்களாக விடுகதைகளைப் பல பெரியவர்களிடமிருந்தும் உறவுகளிடமிருந்ததும் கேட்டறிந்து குறித்து வைப்பதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

    என் அன்பிற்குரிய காலஞ்சென்ற (தமிழறிந்த) தாய்மாமன் ஒருவர் விடுகதையை அறுசீர்மண்டில வடிவில் தருவது குறித்து எனக்கு அறிமுகப் பயிற்சி அளித்திருந்தார்.

    அதைக் கொண்டே இங்கு விடுகதை எழுதிப் பழகிக் கொண்டிருக்கிறேன்.

    இவ் விளக்கத்தையே, விடுகதை நூலின் பெயர் உரையாளர் பற்றி வினவிய அன்பு நண்பர் ஆதி அவர்களுக்கும் தெரிவித்தேன்.

    இப்போது, அனைவரும் அறிய கூறிவிட்டேன்.
    நன்றி.

    இனி,

    அடுத்த விடுகதை :

    பவழவாய் திறந்துவிடை பகருவாயே!


    கட்டிகளம் போர்புரியும் வீரனில்லை!

    கடந்திடுமே இருவாழ்க்கை பெண்ணுமில்லை!

    திட்டமுடன் இதைவளர்ப்பார் பிள்ளையில்லை!

    தெள்ளருளில் நமைவளர்க்கும் தாயுமில்லை!

    விட்டும்உயிர் விலங்கொன்றின் உணவுமாகும்!

    வீணானால் மக்களைப்போல் பதருமாகும்!

    பட்டழகு நல்லெழிலிப் பாவையேஉன்

    பவழவாய் திறந்துவிடை பகருவாயே!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    நெல்!
    அன்புடன் ஆதி



  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    நெல்!
    அதுவேதான் ஆதி

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நெல் மாதிரிதான் தெரியுது. ஆனால் ஐந்தாவது வரி எந்த விலங்கைச் சொல்கிறது. எலியா?

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    நெல் மாதிரிதான் தெரியுது. ஆனால் ஐந்தாவது வரி எந்த விலங்கைச் சொல்கிறது. எலியா?
    பசு மற்றும் காளையை குறிக்கிறதண்ணா
    அன்புடன் ஆதி



  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    நெல் பயிர் என்றுதான் எனக்கும் தோன்றுகின்றது
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆதியின் விடை பொருத்தமானதாகப் படுகிறது.

    குணமதி...!

    உங்கள் தமிழ்ச்சுவையும் நீங்கள் தரும் பதிவுச்சுளையும் ஒப்புமை அற்றவை. குறிப்பாக ஒரு சொல்லில் விடை தருகவில் உங்கள் விடைகளின் விசுவரூபமும் கேள்விகளின் வீரியம் என்னை அதிகம் கவர்ந்தவை. இவ்`விடம் பொல்லாப்பில்லா`விடம்.

    உங்கள் தாய் மாமன் உங்களை உருவாக்கினார். நீங்கள் ஏன் பலரை உருவாக்கக் கூடாது..

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    அனைவர்க்கும் நன்றி.

    சரியான விடை நீங்கள் கூறியபடியே-

    நெல்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    ஆதியின் விடை பொருத்தமானதாகப் படுகிறது.

    குணமதி...!

    உங்கள் தமிழ்ச்சுவையும் நீங்கள் தரும் பதிவுச்சுளையும் ஒப்புமை அற்றவை. குறிப்பாக ஒரு சொல்லில் விடை தருகவில் உங்கள் விடைகளின் விசுவரூபமும் கேள்விகளின் வீரியம் என்னை அதிகம் கவர்ந்தவை. இவ்`விடம் பொல்லாப்பில்லா`விடம்.

    உங்கள் தாய் மாமன் உங்களை உருவாக்கினார். நீங்கள் ஏன் பலரை உருவாக்கக் கூடாது..

    மனமார்ந்த நன்றி அமரன்.

    உண்மையில் எனக்குத் தெரிந்ததைச் சொல்லவே தமிழ்மன்றத்தில் பதிவிடுகிறேன்.

    இந்த விடுகதைப் பாடல்களைப் பொருத்தவரை, -
    இதுவரை பார்த்து வருகின்ற, ஓரளவு ஆசிரிய மண்டிலம் எழுதத் தெரிந்தவர்கள், எப்படி எழுதப்படுகிறது என்பதை - அந்த உத்தியை - எளிதில் தெரிந்து கொண்டிருப்பார்கள் என்றே கருதுகிறேன்.

    எனினும், நீங்கள் பதிவிட்டதற் கொப்ப, இன்னும் கொஞ்சம் விளக்கிக் கூறினால் பலருக்கும் பயன்படும் என்பதால், அடுத்த விடுகதைப்
    பாடலை எழுதும் முறையை விளக்கிச் சொல்லி எழுதுகிறேன்.

    உங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் மறுபடியும் நன்றி.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஆசிரிய மண்டிலம் / அறுசீர் மண்டிலம் என்றால் என்ன என்று ஒரு தனி திரி தொடங்கி விளக்கமாக பதியுங்கள். என்னைப் போன்ற தமிழ் தெரியாதவர்களும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    ஆசிரிய மண்டிலம் / அறுசீர் மண்டிலம் என்றால் என்ன என்று ஒரு தனி திரி தொடங்கி விளக்கமாக பதியுங்கள். என்னைப் போன்ற தமிழ் தெரியாதவர்களும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
    அரேன் உங்கள் கதையை பார்த்தால்; "ஒன்றும் தெரியாத பாப்பா பத்து மணிக்கு போட்டாளாம் தாப்பாள்" அப்படிஎல்லோ இருக்கின்றது
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by ஜனகன் View Post
    அரேன் உங்கள் கதையை பார்த்தால்; "ஒன்றும் தெரியாத பாப்பா பத்து மணிக்கு போட்டாளாம் தாப்பாள்" அப்படிஎல்லோ இருக்கின்றது
    எனக்கு சாதாரணமாக தமிழில் எழுதத்தெரியும் நண்பரே. ஆனால் இந்த மாதிரியான இலக்கண இலக்கிய விஷயங்கள் எதுவும் தெரியாது. அதனால்தான் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •