Originally Posted by
அமரன்
ஓவியன் காதலின் ஓவ்வொரு நிமிட வேதனைகளையும் இனிமையையும் அழகாகக் சொல்லியுள்ளீர்கள்.
காத்திருக்கும் போது
வேகமாக நகாராது கொல்கின்றது.
களித்திருக்கும் போது
வேகமாய் நகர்ந்து கொள்கின்றது.
கொல்லும் நிமிடங்களை
கொன்று விடுவோம்.
அழகான சிந்தனை. கவிச்சமர் இதுபோன்ற கருக்களை தருகின்றது. அப்படிக் கிடைத்த கருவுக்கு அழகாக வர்ணஜாலம் செய்து கவிதையாக்கிய கவி ஓவியருக்கு பாராட்டுகள்.
காத்திருக்கும் நிமிடங்கள் பற்றி கவிச்சமரில் நானெழுதிய கவிதை ஒன்று ஞாபகத்துக்கு வருகின்றது.
காத்திருக்கும் வேளையில்
நிமிடங்கள் மெதுவாக
அலாரம் அடிக்குதடி
லப் டப்
விரைவாக காத்துக்கொள்
எதிர்காலத்தை.
Bookmarks