Page 5 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 LastLast
Results 49 to 60 of 98

Thread: நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!!

                  
   
   
  1. #49
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    முடிவில என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு புரியிற மாதிரி சொல்லிடுவீங்கதானே..?
    ஜார்ஜ் அண்ணே....

    இந்த நீலவேணியை நீங்க ஏன் பூமியா நினைக்கக் கூடாது???

    தீவு - பிரபஞ்சம்
    நீலவேணி - பூமி
    சிந்தனாவாதிகள் - மனிதர்கள்

    இப்படியும் இருக்கலாம்.... ஆனால் இதுமட்டுமே அர்த்தமில்லை!!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #50
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஆதவா View Post
    மக்களே, இந்த கதைச் சுருக்கத்தைப் படித்துவிட்டு, இதுதான் கதை என்று முடிவுசெய்தால் உங்களுக்கு கதையே புரியாது.. ஆகவே முதலிலிருந்து படிக்க... (படித்து முடித்தவர்களுக்கு இது....)

    கதை சுருக்கம்.

    தன்னந்தனித் தீவு, இயற்கை வளமை மிகுந்த அத்தீவை ஆட்சி செய்வதாக நினைத்துக் கொண்டிருப்பவள் நீலவேணி. (மனுஷியாக நினைப்பது உங்கள் கையில்!!) ஒருநாள் சிறு படகொன்று அத்தீவினுள் நுழைந்தது. அதில் நான்கு சிந்தனாவாதிகள் இருந்தனர். அவர்களை வரவேற்த்தாள் நீலவேணி. குடிசை கட்டி வாழ்ந்த சிந்தனாவாதிகளின் பொழுதுகளில் நீலவேணி நிறைந்திருந்தாள். ஒருநாள் தீவினுள் மாற்றம் நிகழ்கிறது. நம்மை பின்வருபவர்கள் வணங்கவேண்டும் என்று நினைத்தார்கள். இப்படியே இருப்பதைவிட ஏதாவது செய்வோம் என்று முடிவு செய்தார்கள். தங்களது சிந்தனைகளை விதைத்தார்கள். ஆனால் இதனால் நீலவேணியின் உதவி வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் விதைத்தால் மட்டும் போதுமா? அதை உண்டு அதன் ருசி பார்க்க ஆள்வேண்டாமா என்று மேலும் சிந்தித்தார்கள் இந்த நால்வர். இதனால் அவர்களுக்கு பலவித யோசனைகள் வந்தன. அந்த தீவை சுற்றுலா மையமாக்க முடிவு செய்தார்கள். தனிமையிலேயே வாழ்ந்து பழகிவிட்ட நீலவேணிக்கு இதெல்லாம் புரியாத புதிராக இருந்தது. அதனால் தன்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தாள். அழுதாள். அதன் விளைவுகளால் சிந்தனாவாதிகள் பதறினர்.
    ------------

    இக்கதையை படிக்கும் பொழுது கதையின் போக்கில், நீலவேணி நீலவேணியே அல்ல என்பது புரிகிறது. ஆனால் ஆரம்பத்தில் அது நீலவேணியை மையம் கொண்டேதான் ஆரம்பிக்கப்பட்டது. அல்லது அப்படி ஆரம்பிக்கப்பட்டதாக வாசிக்கப்பட்டது.



    தண்ணீர்தான் பிம்பங்களைக் காட்டிக்கொடுக்கும் துரோகி.... நீலவேணியின் ருத்ரதாண்டவத்தில் உணர்ச்சி பீய்ச்சிய நீர், ஒவ்வொருவரின் மனபிம்பத்தை நன்கு காட்டிக் கொடுத்துவிட்டது இல்லையா??

    ம்ம்.... இப்பொழுது கதையின் பாதை மாறிவருகிறது. அடுத்தது என்னவோ???
    கதைச் சுருக்கத்திற்கு நன்றி ஆதவா.. ஆனால் கதையையும் சுருக்கத்தையும் படிச்சா ஒரு முக்கிய உணர்விழை, இந்தக் கதையைப் பிண்ணிய இழை மிஸ்ஸிங்..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #51
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஆதவா View Post
    ஜார்ஜ் அண்ணே....

    இந்த நீலவேணியை நீங்க ஏன் பூமியா நினைக்கக் கூடாது???

    தீவு - பிரபஞ்சம்
    நீலவேணி - பூமி
    சிந்தனாவாதிகள் - மனிதர்கள்

    இப்படியும் இருக்கலாம்.... ஆனால் இதுமட்டுமே அர்த்தமில்லை!!!
    இதெல்லாம் நீலவேணி நம்முள்ளே இருக்கும் போதும் கேட்பவரின் உள்ளே இருக்கும்போதும் விவரித்தால் தெள்ளத்தெளிவா விளங்கும்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #52
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    கதைச் சுருக்கத்திற்கு நன்றி ஆதவா.. ஆனால் கதையையும் சுருக்கத்தையும் படிச்சா ஒரு முக்கிய உணர்விழை, இந்தக் கதையைப் பிண்ணிய இழை மிஸ்ஸிங்..
    அடுத்தடுத்த இழைப்பின்னல்கள்லதானே உலகமே இயங்குது!!! விட்டு பிடிப்போம்!!!

    Quote Originally Posted by தாமரை;
    இதெல்லாம் நீலவேணி நம்முள்ளே இருக்கும் போதும் கேட்பவரின் உள்ளே இருக்கும்போதும் விவரித்தால் தெள்ளத்தெளிவா விளங்கும்

    இப்போ நீங்க நீலவேணிய பொங்க விட்டிருக்கீங்க..
    நம்முள்ளே இருந்தா தண்ணியா போவும்.... அடங்கினத்துக்கப்பறமா பார்ப்பொம்!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #53
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    இதெல்லாம் நீலவேணி நம்முள்ளே இருக்கும் போதும் கேட்பவரின் உள்ளே இருக்கும்போதும் விவரித்தால் தெள்ளத்தெளிவா விளங்கும்
    புரிந்து கொண்டேன்
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  6. #54
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    ஜார்ஜ் அண்ணே....

    இந்த நீலவேணியை நீங்க ஏன் பூமியா நினைக்கக் கூடாது???

    தமிழ் மன்றமாகக் கூட நினைத்துப்பார்க்கலாம் [நினைப்புக்கு என்ன வந்தது?]
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  7. #55
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    அண்ணா கதையால் வானத்தை அளக்கும் முயற்சியோ ?

    அப்புறம் பொந்துக்குள் பாம்பு வாலோ எலி வாலோ என்றது வால்நட்சத்திரத்தையோ ?

    நீலவேணி சிலநேரம் பூமியா ? சிலநேரம் வானமா ? சிலநேரம் கடலா ? சில நேரம் நம் வாழ்க்கையா ? தெரியுறா ?

    மறுவாசிப்பிலாவது கருசிக்குதானு பாக்குறேன்..
    அன்புடன் ஆதி



  8. #56
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    அந்தக் கப்பல் தரைதட்டிப் போயிருந்தது. இரவு முழுக்கப் பெய்த பேய் மழை சூறாவளிக் காற்றில் எங்கோ போய்க்கொண்டிருந்த கப்பல் திசை தடுமாறி தீவுப் பக்கம் ஒதுங்கி இருந்தது.

    அதற்கு முன்னும் அது எங்கோ போய்க் கொண்டிருந்த கப்பல்தான். ஒரு வியாபாரக் கப்பல். எங்கிருந்தோ புறப்பட்டு சரக்குகளை எங்கோ இறங்கி விட்டு எங்கோ சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது அது.

    வழியில் படகுகள் எதிர்பட்டன. 20 படகுகள் இருக்கலாம். அதில் சிலர் இருந்தார்கள். படகுகள் எதுவும் இயங்கவில்லை. எல்லாம் மிதந்து கொண்டிருந்தன.

    அங்கங்கே மிதந்த படகுகளில் பலர் கவிழ்ந்து கிடந்தார்கள். உயிர்துடிப்பு இருக்கிறதா என்று மேலிருப்பவர்களுக்கு தெரியாமல் இருந்தது. ஏணிகள் இறக்கப்பட்டு படகுகளில் இருந்தவர்கள் சேகரிக்கப் பட்டார்கள். சோர்ந்து கிடந்த அவர்கள் முகமும் வயிறு போலவே வற்றிக்கிடந்தது. எந்த வீட்டிலிருந்தோ ஏதோ ஒரு மருமகள் கொடுமையால் விரட்டப்பட்ட ஏழைத்தாய் போல வற்றிக் கிடந்தார்கள்.

    அவர்களை ஏற்றிய கப்பல்தான் புயலில் சிக்கி அந்தத் தீவின் ஓரம் கரை தட்டி இருந்தது..

    மேகப் போர்வையை விலக்கிப் பார்த்த சூரியனுக்கு அந்தத் தீவில் நடந்த உரிமைப் போராட்டம் தெரிந்தது. கப்பலில் இருந்தவர்கள் கீழே இறங்கினர். இப்போதைக்கு எதையாவது கொண்டு சில நாட்கள் வாழவேண்டும். மீட்புக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    பல பசுமரங்கள் உணர்ச்சி வேகத்தில் மாரடைப்பு வந்து சாய்ந்து இருந்தார்கள்.. வளர்ந்த புற்களும் கொடிகளும் அவர்கள் மீது சாய்ந்து அழுது கொண்டிருந்தார்கள்.

    பாறை இடுக்கிலிருந்து சிந்தனாவாதிகள் வெளிப்பட்டிருந்தனர். அவர்களைச் சோர்வு பீடித்திருந்தது. மெல்ல இறங்கி தாகம் தீர்த்துக் கொள்ள நீலவேணிக் கரையோரம் வந்தார்கள்.

    நீலவேணி ஆவேசம் சற்றே குறைந்தவளாய் இருந்தாள். இன்னும் கோபத்தில் உடல் வீங்கி இருந்தாள். கரைகளை மீறி புரண்டு கொண்டிருந்தாள்.

    வீழ்ந்து கிடந்தவர்களின் சொத்துக் கனிகளை வாழ்ந்து கிடந்தவர்கள் பறித்துக் கொண்டு பசியாறினார்கள். சிந்தனாவாதிகளின் கனவுகளுக்கும் நிஜத்திற்கும் இடையில் கண்ணீர்..

    வெளிப்பட்ட அவர்கள் கடலை நோக்கி நடந்தனர். அவர்களின் நாவாய்,, வெளி உலகுக்கும் அவர்களுக்கும் இருக்கும் ஒரே தூதன் சிதறிக் கிடந்தது.

    நீலவேணியின் மறுகரையில் மற்றும் பலர் இருப்பதை சிந்தனாவாதிகள் அறியவில்லை. எல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்கப் படவேண்டும் என்பது சலிப்பைத் தருவதாக இருந்தது.

    போக்கிடம் இன்றி மீண்டும் வந்தார்கள் நீலவேணியருகில்.

    எல்லாம் போனது.. எல்லாம் போனது முதலாம் சிந்தனாவாதி முணுமுணுத்தார்.

    எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு.. எதை கொண்டு போகப் போகிறோம் பெறுவதற்கு இரண்டாம் சிந்தனாவாதி நிமிர்ந்தார்.

    வருவதற்கும் போவதற்கும் இடையில் இருத்தல் இருக்கிறதே மூன்றாம் சிந்தனாவாதி கேள்வியுடன் நிமிர்ந்தார்.

    இருத்தல்.. பதியும்படி இருத்தல் இதுதானே நம் இலட்சியம் நான்காம் சிந்தனாவாதி சொன்னார்...

    மௌனம் மீண்டும் அங்கே கொஞ்சநேரம்..

    இதோ இந்த ஆற்றைப் பாருங்கள்.. இதில் இருந்து சிலவற்றை நாம் கற்றுக் கொள்ளலாம் என்றார் முதலாம் சிந்தனாவாதி..

    நீலவேணிக்கு சிலீரென உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு வந்தது.

    மறுகரையில் கப்பலில் வந்த உழைப்பாளிகளும் வியாபாரிகளும் நீலவேணியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

    தொடரும்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #57
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஆதன் View Post

    மறுவாசிப்பிலாவது கருசிக்குதானு பாக்குறேன்..
    கரு அவ்வளவு எளிதில் சிக்காது...

    ஏன்னா எழுதுற எனக்கே இன்னும் பிடிபடலையே...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #58
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    கரு அவ்வளவு எளிதில் சிக்காது...

    ஏன்னா எழுதுற எனக்கே இன்னும் பிடிபடலையே...
    அன்புடன் ஆதி



  11. #59
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    அப்படி என்ன பாடம் இருக்கிறது - இரண்டாம் சிந்தனாவாதி கேட்டார்..

    இதை ஆழப் பார்த்தால் நமக்கு அவ்வப்பொழுதுக்கு தேவையான ஆலோசனைகள் கிடைக்கக் கூடும் - முதலாம் சிந்தனாவாதி கேட்டார்.

    இப்பொழுது நமக்கு என்ன பாடம் கிடைத்தது? மூன்றாம் சிந்தனாவாதி கேட்டார்..

    கஷ்டங்களில் நமது வலிமை பன்மடங்காக பெருக வேண்டும். அதுதான் வாழ வழி என்றார் முதலாம் சிந்தனாவாதி..

    வலிமை எப்படி பெருக்குவது? நான்காம் சிந்தனாவாதி கேட்டார்.

    அங்கே பாருங்கள் பல சிற்றோடைகள்.. மலை உச்சியைக் காட்டினார். முதலாம் சிந்தனாவாதி..

    சிற்றோடைகள் ஆமாம் அதனால் என்ன கேட்டார் மூன்றாம் சிந்தனாவாதி..

    அது போல சிலரின் உதவியை நாம் பெறவேண்டும் என்றார் முதலாம் சிந்தனாவாதி...

    சிலரா? இது ஆள் அரவமற்ற தன்னந்தனித் தீவு என்றார் நான்காம் சிந்தனாவாதி..

    அதற்குத்தான் ஆற்றைப் பாருங்கள் என்றேன் என்றார் முதலாம் சிந்தனாவாதி...

    அனைவரும் ஆற்றைப் பார்க்க.. அக்கரையில் மனித நடமாட்டம் தெரிந்தது..

    இவர்கள் யாராக இருக்கக் கூடும்.. இரண்டாம் சிந்தனாவாதி கேட்டார்...

    நமக்கு முன்பிருந்தே இங்கிருப்பவர்களா? எங்கே வசித்தார்கள் தெரியவில்லையே மூன்றாம் சிந்தனாவாதி பலமாக யோசித்தார்.

    இல்லை போலத் தெரிகிறது. அவர்கள் நடையில் வலிமையோ உற்சாகமோ தெரியவில்லை. தள்ளாட்டம் தான் தெரிகிறது.

    அப்படியென்றால்..

    இவர்கள் வழி தவறி வந்தவர்களாக இருக்கலாம்.

    வழி தவறி வந்தவர்கள் எப்படி நமக்கு உதவ முடியும்?

    பல வாய்ப்புகள் இருக்கின்றன. போவோம் போய்ச் சந்திப்போம் வாருங்கள் முதலாம் சிந்தனாவாதிதான் கிளம்பினார்..

    முதலில் குரல் கொடுப்போம்.. அவர்கள் நம்மை வரவேற்பார்களா தெரியவில்லையே என்றார் இரண்டாம் சிந்தனாவாதி..

    ஜாக்கிரதையாய் இருப்பதில் நஷ்டமில்லை என்றார் மூன்றாமவர்.

    ஓஹோஹோ உரக்கக் குரல் எழுப்பினர் சிந்தனாவாதிகள்

    அக்கரையில் இருந்தவர்களுக்கு வியப்பு.. ஆளில்லா தீவில் மனிதக் குரலா.. நிமிர்ந்த அவர்களின் கண்ணில் வியப்பு..

    எப்படியும் இந்தத் தீவிலிருந்து சொந்த ஊர் போய்விடலாம்.. வியாபாரிகளின் முகத்தில் மகிழ்ச்சி..

    அவர்களும் கையசைத்து குரல் எழுப்பினார்கள்.

    ஆற்றின் கரைவழியே சென்று ஆழம் குறைந்த இடத்தில் ஆற்றைக் கடந்தார்கள் சிந்தனாவாதிகள்..

    என்ன மொழி பேசுவார்களோ மூன்றாம் சிந்தனையாளர் கேட்டார்..

    ஒன்று ஆங்கிலம் அல்லது தமிழ்.. இரண்டாம் சிந்தனையாளர் சொன்னார்..

    எப்படிச் சொல்கிறீர்கள் கேட்டார் நான்காமவர்..

    ஆங்கிலம் உலகை ஆளத் துடித்து எங்கெங்கும் சென்று கொண்டிருக்கிறது.

    தமிழ் உலகெங்கும் விரட்டி துரத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது...

    அதனால்தான்
    - இரண்டாமவர் சொன்னார்..


    வாருங்கள்.. வாருங்கள்.. வெல்கம்.. வெல்கம்..

    கூவியபடியே சென்றார்கள் சிந்தனைவாதிகள்.

    தொடரும்
    Last edited by தாமரை; 27-08-2010 at 04:11 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #60
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    கதை புரியுது. சுவாரசியமாகவும் இருக்குது. பலவிடையங்கள் வாசகர்களின் சிந்தனையை தூண்டுகிறது என்பதில் எனக்கு கதை பிடிச்சிருக்கு... நீலவேணி என்கிற நதியின் எண்ணத்தையும் யதார்த்தத்தையும் தொகுத்துக்கொண்டு கதை போகிறதாக நான் உணர்கிறேன். (நான் நினைப்பது சரியா தெரியவில்லை) கதையின் அடுத்த அடுத்த வரியில் என்ன இருக்கப்போகிறது என்ற அழவில் எதிர்பார்ப்பு.. வாசிக்கும் போது மனதில் அழுத்தம் கூடிக்குறையுது. அதனால தான் அன்று புரியுது. ஆனா புரியல என்றேன். இப்பவும் அதே நிலை தான். நான் நினைப்பது சரி என்ற எண்ணம் எனக்கு வரும் வரை ............................................
    இதுதான் மனித குணம்.. நாம் தெரிந்து கொண்டதை வைத்து மிச்சம் இருப்பதை அனுமானிப்பது...

    அனுமானிக்க முடியாதது தானே இயற்கை.. அதனால்தான் கோட்பாடுகள் மாற்றி மாற்றி எழுதப்படுகின்றன. அப்போதைய அறிவிற்கு அந்தக் கோட்பாடு சரியெனவே தோன்றும்..

    இதுவரை கதைக் கருவை நான் ஐந்து முறை மாற்றிவிட்டேன். அதனால் கரு கிடைச்சிடும் என்று யோசிக்காதீங்க, கதை கரு கிடைச்சிட்டா எதிர்பார்ப்பு குறைஞ்சிடுமில்ல..

    பார்ப்போம் அன்றன்று இருக்கும் என் மூடுக்கேத்த மாதிரி கதை பயணிக்குது....

    அதாவது .......

    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 5 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •