மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
நன்றி...
தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765
கார் வைத்திருந்தால் 50,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை சர்வீஸ் செய்கிறோம். இரண்டு சக்கர வாகனம் வைத்திருந்தால் சர்வீஸ் செய்கிறோம். அதே போல அனைத்துப் பொருட்களையும் துடைத்து, தூய்மைப்படுத்தி வைத்திருக்கிறோம். ஆனால் உடம்பை மட்டும் ஏன் கவனிக்க மறக்கிறோம்? நம் உடம்பிற்கு இன்பம் தரத்தான் மற்ற பொருட்களை வாங்குகிறோம். அந்த பொருட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் நம் உடலுக்கு கொடுக்க மறுக்கிறோம்? அதற்கு பெயர்தான் மடத்தனம் என்பது.
மனித உடம்பிற்கு என்று சில உணவுப் பொருட்கள் மட்டுமே ஏதுவானது. அக்காலப் படங்களைப் பார்த்தீர்கள் என்றால் பழங்களையே தட்டு நிறைய கொண்டு வந்து வைப்பார்கள். அதையே ஹீரோ சாப்பிடுவார். பழ உணவுகள் மட்டுமே மனித உடம்புக்கு எந்த வித எதிர் விளைவுகளையும் கொடுக்காத உணவு. பிற உணவுகள் அனைத்தும் உடம்பிற்கு கேடுகளை வரவைக்கும். அது காய்கறிகள் என்றாலும் கூட.
உடம்பிற்கு ஒவ்வாத உணவுகள் உண்ணப்படுகையில், உடம்பு அதை கிரகிக்க தன் சக்திகள் அனைத்தையும் செலவழிக்குமாம். பெரும் போராட்டத்தினை செய்து உடம்பைத் தன் பழைய நிலைக்கு கொண்டு வருமாம். இப்படி தினம் தோறும் போராட்டங்களை தொடரும் உடம்பின் பாகங்கள் ஒரு காலத்தில் ஓய்வடையும் போது, நோய்கள் எட்டிப்பார்க்கின்றன.
உங்களுக்குத் தெரியுமா? அரிசி நமக்கு தேவையற்ற உணவு. ஆனால் நாம் அதை அதிகம் உண்கிறோம். ஜப்பானியர்களைப் பாருங்கள். ஒரு கை பிடி அளவு சாதத்தைத்தான் சாப்பிடுவார்கள். அவர்களின் புத்திசாலித்தனத்திற்கு எதிரே, வாழை இலையில் கோபுரம் கட்டி, வித விதமான குழம்புகள், பொறியல்களுடன் சாப்பிடும் நம் புத்திசாலித்தனம் போட்டி போட முடியுமா?
ஒவ்வொரு வகை உடம்பிற்கும் உணவுகள் வேறுபடும் என்பதெல்லாம் சும்மா. எல்லா உடம்பிற்கு ஏற்ற உணவு பழங்கள். முடியாவிட்டால் காய்கறிகள், கீரைகள். சிக்கன், மட்டன், மீன் போன்ற உணவுகள் உடம்பினைக் கெடுக்கும் விஷங்கள். அது விஷமென்று தெரியாமலே உண்ணும் நாமெல்லாம் படித்தவர்களா என்ன?
:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்
=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே
http://thangavelmanickadevar.blogspot.com/
அனுபவ மருத்துவம் அருமை!
ஆனால் இந்தளவுக்கு நேரம் வசதிப்படுவது எனக்குக் கடினம்.
நேரத்தை மாற்றிக் கொள்ளுங்கள் அமரன். நம் உடம்பிற்கு எந்த உணவு நோய்களைத் தராதோ அந்த உணவினைச் சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் சாப்பிட வேண்டுமோ அப்போதெல்லாம் சாப்பிடலாம். எந்த உணவுகள் உடலுக்கு கேடு என்பதை அறிந்து கொண்டால் போதும்.
:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்
=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே
http://thangavelmanickadevar.blogspot.com/
எடையைக் குறைப்போருக்கு மிகவும் பயனுள்ள தகவல்.
வணக்கங்களுடன்
தமிழ்ச்சூரியன்
"தமிழுக்கு நிகர் தமிழே"
நானும் என்னென்னவோ யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன், ஆனால் எதுவுமே இதுவரை நடைமுறைப் படுத்தமுடியவில்லை.
முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றே தெரிகிறது.
உங்கள் வெற்றி எங்களுக்கும் ஒரு ஊந்துகோலாக இருக்கட்டும். முயற்சி செய்கிறேன்.
சூப்பர் நண்பரே...
அந்த பவுடர், இந்த பவுடர்னு கண்ட கண்ட வழிமுறைகளை கடைபிடிக்காமல் உணவு பழக்கத்தின் மூலம் குறிப்பிட்ட மாற்றத்தை கண்டிருக்கிறீர்கள்... உடற்பயிற்சியையும் கொஞ்சம் இதில் இணைத்துக்கொள்வது இன்னும் கூடுதல் நன்மை தரும் என்று எண்ணுகிறேன்.
நன்றி நண்பரே.. பகிர்ந்தமைக்கு!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks