Results 1 to 5 of 5

Thread: தத்தளிக்கும் ஓடம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    தத்தளிக்கும் ஓடம்

    முட்களாய் நீ என்னைக் குத்த
    மலராய் உன் நினைவுகள்
    என்னை வருடிச் செல்கின்றன....

    நீ தந்த அழகிய உயிரற்ற
    பரிசுப்பொருட்கள் அனைத்தும்
    உயிர்பெற்றென்னை தள்ளுகின்றன
    சோகக்கடலிலே.....

    காதல் என்னும் வானத்தில்
    நிலவாய் ஜொலிக்கும் உன்னை
    மீண்டுமடைய காற்றை நூலாக்கி
    விரைகின்றேன் உன் கரம் பிடிக்க
    மின்னலாய் வந்து அறுத்தெறிந்து
    செல்கின்றாய் என்னை....

    மேகமாய் இருக்கும் என்
    சோகத்தை காற்றாய் மாறி
    கலைப்பாயென நானிருக்க
    இயற்கையில் இருக்கும் பசுமை
    போல் நிலைக்கச் செய்து விட்டாயே
    சோகத்தை என்னுள்....

    உன் பிரிவை மறக்க கவிதை
    என்னும் விதையை என்னுள்
    விதைத்தேன்.மரமாய் வளர்ந்தது
    கவிதை மட்டுமல்ல உன்னால்
    ஏற்பட்ட ரணங்களும் தான்...

    நினைவை மறக்க நிழலை
    என்னுள் திணித்தேன் − நிழலே
    உன் உருவமாய் நிழலாட
    என் உயிர் ஓடமாய் தத்தளிக்கின்றது
    நடுக்கடலிலே....
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    Quote Originally Posted by இனியவள் View Post

    உன் பிரிவை மறக்க கவிதை
    என்னும் விதையை என்னுள்
    விதைத்தேன்.மரமாய் வளர்ந்தது
    கவிதை மட்டுமல்ல உன்னால்
    ஏற்பட்ட ரணங்களும் தான்...

    கவிதை ஒரு இனிமையான, அமைதியான உலகம். அதில் ரசனைகள் தோன்றும் ரணங்கள் போதி மரங்களாகும்போது,

    அரும்மையான கவிதை! வாழ்த்துக்கள் இனி.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    உயிரற்றவை எல்லாம்
    உணர்வுகளை தூண்ட
    உணர்வை திருடிச்சென்றான்.
    உயிரானவன்..

    திருடியது உணர்வானாலும்
    உதித்தது கவிதை
    தைக்கும் ரணங்களாய்...

    பாராட்டுக்கள் இனியவள்...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by murthykmd View Post
    கவிதை ஒரு இனிமையான, அமைதியான உலகம். அதில் ரசனைகள் தோன்றும் ரணங்கள் போதி மரங்களாகும்போது,
    அரும்மையான கவிதை! வாழ்த்துக்கள் இனி.
    நன்றி மூர்த்தி

    அமைதியான உலகத்தில்
    பறவை போல் சஞ்சரித்து
    சிறக்கடித்துப் பறக்கின்றோம்
    கவலைகளை மறந்து
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    உயிரற்றவை எல்லாம்
    உணர்வுகளை தூண்ட
    உணர்வை திருடிச்சென்றான்.
    உயிரானவன்..
    திருடியது உணர்வானாலும்
    உதித்தது கவிதை
    தைக்கும் ரணங்களாய்...
    பாராட்டுக்கள் இனியவள்...
    நன்றி அமர்......

    உதித்த உணர்வுகளை
    கவிதையாக வடிவமைத்து
    தைக்கும் ரணங்களை
    புன்னகை என்னும்
    மருந்து கொண்டு பூசி
    மறைக்கின்றோம்....
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •