நீ இல்லாத இரவில்
கனவுகளின் வரவு இல்லை
தூக்கத்தினோடு எனக்கு உறவு இல்லை!
உன் நினைவுகளின்
சுமை ஏந்தி இமைகளில் வீக்கம்
இரவுகளில் எனக்கேதடி தூக்கம்!
அம்மா வீடென்ன அயல்நாட்டிலா இருக்குது
ஐந்துநாள் பிரிவு என்னை இங்கு உருக்குது
ஏக்கத்தில் தவிப்பது
தூக்கத்துக்கல்ல பெண்னே
நீ வந்துவிட்டால் மட்டுமென்ன
தூங்கவா போகிறேன் கண்னே!
Bookmarks