Results 1 to 8 of 8

Thread: காணாமல் போனவைகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0

    காணாமல் போனவைகள்

    காணாமல் போனவைகள்

    பயமூட்டும் ஜந்துக்கள்
    மிளகாய், இஞ்சி, மிளகு
    ஒரு காலத்தில்.

    அப்போதெல்லாம்
    தண்ணீர்
    பல சொம்புகள்
    தேவைப்படும்,
    சிறு வெங்காயத்துக்கே.

    இளம் நாவின்
    சுவை மொட்டுக்கள்
    புத்தம் புதியனவாய் இருந்தபோது
    எனைக் கண்கலக்கி
    உடல் பதற வைத்திருக்கிறது
    எண்ணெயில் பொறித்தெடுத்த
    பிஞ்சு மிளகாயின் சிறுநுனிகூட .

    வியந்திருக்கிறேன்
    பச்சை மிளகாயை
    இயல்பாய்க் கடித்துத் தின்போரை,
    அவர்கள் எதையோ
    அடிவேர்வரை இழந்து விட்டிருக்கிறார்கள்
    என்பதை அறியாமலே.

    கால ஓட்டத்தில்
    எரிச்சல் தரும் பச்சை மிளகாய்
    வெள்ளரிப் பிஞ்சாகியிருப்பது
    எனக்கு
    வசதியாய்த்தான் இருக்கிறது.

    என்றாலும்
    எனக்குப் புரியவே இல்லை.

    சீரகத்தின் காரத்துக்குக்
    குடம்குடமாய்க்
    கண்ணீர் விடுவோரைப் பார்த்தால்
    புன்னகை வராமல்
    ஏன் எனக்கு
    அவர்கள்மேல்
    இப்போதெல்லாம்
    பொறாமை ?.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    முத்து... உங்களுக்கு வயதாகிறதுன்னு சொல்லாம சொல்றீங்களா..? தொடர்ந்து கவிதை வழங்கவும்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by முத்து
    காணாமல் போனவைகள்

    சீரகத்தின் காரத்துக்குக்
    குடம்குடமாய்க்
    கண்ணீர் விடுவோரைப் பார்த்தால்
    புன்னகை வராமல்
    ஏன் எனக்கு
    அவர்கள்மேல்
    இப்போதெல்லாம்
    பொறாமை ?.
    சீரகத்தின்
    காரத்துக்கேவா......
    கண்ணீர்........
    வரும்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மிளகாய்க்குக் கலங்குவது மட்டுமல்ல-
    ஐஸ்க்ரீமுக்கு அடிமையாக்குவதும்
    இளவயதின் அதிகப்படி சுவைநரம்பு மொட்டுகள்தான்..

    ஒரு உடலியல் உண்மையை
    சுவையான கவிதையாக்கிய
    அன்புத்தம்பி முத்து
    இப்போது எங்கே? நலமா முத்து?
    Last edited by இளசு; 22-04-2007 at 08:25 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    வித்தியாசமான கவிதை. எடுத்துக் கொண்டு கரு என்னை மிகவும் வியக்க வைக்கிறது. வாழ்த்துகள் முத்து. தொடருங்கள் உங்கள் வித்தியாச பார்வையை
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நல்ல கரு, கவிஞ்சனுக்கு காண்பதெல்லாம் கவிதையின் கருவாம்.
    இன்று படித்து காண்கிறேன்.

    மிக்க நன்றி முத்து அண்ணா
    Last edited by ஓவியா; 24-04-2007 at 03:00 AM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    பால்ய காலத்தை திரும்பிப் பார்ப்பதில் இது சுவை நிறைந்த புது வகை..

    முத்து மீண்டும் வரவேண்டும்...
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by poo View Post
    முத்து மீண்டும் வரவேண்டும்...
    உண்மைதான் அண்ணா!

    காணாமல் போனவை என்று அருமையான கவியைத் தந்துவிட்டு அவரும் காணாமல் போய் விட்டாரே அண்ணா!!

    மீண்டும் வாருங்கள் முத்து,
    வந்து உங்கள் முத்தான கவிகளை மீண்டும் தாருங்கள்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •