Page 2 of 7 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 80

Thread: என் ஊர்....!!!!!

                  
   
   
  1. #13
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    காலத்தின் கட்டாயத்தால் தத்தம் ஊர்களைப் பிரிந்து வாழ்ந்தாலும், அவற்றின் நினைவுகளின் பெரும்பாரம் சுமந்து தவிக்கும் பலரையும் இளைப்பாற்றும் வகையில் ஓர் அருமையானத் திரியைத் துவங்கியிருக்கும் சிவாஜி அண்ணாவுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும்.

    அனைவரது ஊர்களைப் பற்றியும் அனைவரையும் அறியச் செய்யும் அற்புத முயற்சி இது.

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அரியதோர் பதிவு நினைவலைகளின் தொகுப்பினை இந்த தொகுப்பு தொகுக்கின்ற வேளையில் நானும் சேர்ந்தே அவர்களின் நினைவலைகளிநூடே பயணிக்கிறேன் ....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கலையரசியின் ஊர்நினைவுகள் , நம்மை அந்த ஊருக்கே அழைத்துச் செல்கின்றன.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #16
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கலையரசி மேடத்தின் எழுத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? அதுவும் மனதுக்கு நெருக்கமான தான் வளர்ந்த ஊரைப்பற்றி எழுதும்போது பாவாடைக் கட்டிய சிறுமியாகவே மாறித்தான்...வார்த்தைகளை வடித்திருப்பார்.

    சொந்த ஊர் நினைவு என்பது நம்ம நாம் வாழ்ந்த அந்தக்காலத்துக்கே கொண்டுபோய்விடும் மந்திரவித்தை....அதே மந்திரவித்தையோடு மந்திரக்கோலை எழுதுகோலாய் பிடித்து எழுதியதைப்போன்ற எழுத்து. அனைத்தையும் நினைவுபடுத்தி, இடையில் நகைச்சுவையாய் தனக்குத்தோன்றிய ‘கோவிலுள்ள ஊரில் குடிருக்க வேண்டாம்’ என புதுமொழியை குறும்பாய் தெளிக்கும் எதார்த்தம்.

    இடையில் பிரிந்த தோழி..நிரந்தரமாய் பிரிந்ததை வாசித்து மனம் வேதனையடைந்தது.

    இன்னும் சொல்லுங்கள் மேடம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #17
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    வாழ்வின் காற்றுப்போக்கில், எங்கெங்கோ புலம்பெயர நேர்ந்தாலும், சொந்த ஊர் நினைவுகள் சுகமாய், சோலைப்பசுமையாய், என்றென்றும் நெஞ்சில் தித்திக்கும்..

    அத்தகைய ஒரு ஆனந்த அசைபோடலுக்கு களம் அமைத்துத் தந்திருக்கும் எங்கள் சிவாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி..!
    மிக மிக உண்மை ராஜா சார்....உலகின் எங்கோ ஒரு மூலையில் சந்திக்கும் யாரோ ஒருவர் நானும் உங்கள் ஊர்தான் எனச் சொல்லும்போது ஏற்படும் ஆனந்தத்துக்கும், அந்நியோந்யத்துக்கும் அளவில்லை.

    உங்கள் பதிவையும் இத்திரி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி ராஜா சார்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #18
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ரொம்ப நன்றிம்மா கீதம் தங்கையே....இத்திரியில் உங்கள் நினைவலைகளையும் காணும்போது இன்னும் மகிழ்வேன்.

    அனைவரின் எண்ணங்களையும் இங்கே ஆனந்தத் தொகுப்பாய்க் காண வேண்டுமென்ற பேராவல் எனக்கு.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கலையரசி View Post
    இத்திரியைத் துவங்கி எழுதச் சொன்ன சிவாஜி சாருக்கு என் மனமார்ந்த நன்றி.

    இரண்டு மூன்று பக்கங்களுக்குள் முடித்து விட நினைத்தால் அது நீண்டு கொண்டே செல்கிறது. அடுத்த பதிவில் முடிக்க முயல்கிறேன்.

    இனி என் ஊருக்குச் செல்வோம்.

    ................................... தெப்பக் குளத்தின் நீர்க்குமிழி போலவே, அவளது வாழ்வும் புற்று நோய் காரணமாக அற்பாயுசிளில் முடிந்து போன விஷயம் தெரிய வந்த போது மனம் மிகவும் வேதனைக்குள்ளானது.

    (தொடரும்)
    அருமை...!!! தொடருங்கள் சகோதரி.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கலையரசியின் சொந்த ஊர் வர்ணனை என்னை அந்த ஊருக்கே அழைத்துச் சென்று மெய்யாக அனுபவிக்கும்படிச் செய்தது. மிக நல்ல ஊர். மிகத்துல்லிய வர்ணனை.. எழுத்துத் திறமையை தங்களிடம் கற்கவேண்டும் கலையரசி.. வியந்து நிற்கிறேன்.

    தொடருங்கள்..!!

  9. #21
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அழகான வர்ணனையில் திருநள்ளாறு நம் கண்முன்னே விரிகிறது. மேலும் தொடருங்கள் அக்கா உங்கள் நினைவுகளை.!

  10. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    ’என் ஊர்’ தொடர்ச்சி.

    தெப்பக் குளத்தைத் தாண்டி இன்னும் கொஞ்ச தூரம் போனால் ஒரு சினிமா கொட்டகை. அது தான் எங்களுக்கு அவ்வூரிலிருந்த ஒரே பொழுது போக்கு. நடுவில் தடுப்பு ஒன்றிருக்க, ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் மறுபுறமும் அமர்ந்து பார்ப்பார்கள். மணலை நன்கு குவித்து மேடாக்கி அதில் அமர்ந்து பார்ப்பது வழக்கம். படம் வெளியாகி ஐந்தாறு மாதங்கள் கழித்து நகரங்களில் எல்லாம் சுற்றி அரதப் பழசான பின்னரே இவ்வூருக்கு வரும்.

    வார இதழ்களில் வரும் திரை விமர்சனங்களை ஏற்கெனவே படித்துப் பார்த்து, ’நல்ல படம், குடும்பத்தோடு பார்க்கலாம்,’ எனத் தீர்மானித்து வைத்திருப்பவற்றை மட்டுமே வீட்டில் பார்க்க அனுமதிப்பார்கள். அக்காலத்தில் ‘A’ சான்றிதழ் பெற்ற படங்களைக் குழந்தைகள் பார்க்க அனுமதி கிடையாது. இப்போது ஊடகங்கள் வாயிலாக எவ்விதத் தணிக்கையும் இன்றி, மட்டரகமான படங்கள், வீட்டின் நடுக்கூடத்தில் இறக்குமதி யாவதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை.

    மாலை வேளையில் இக்கொட்டகையிலிருந்து ஒலிபெருக்கியில் திரையிசைப் பாடல்கள் ஒலித்த வண்ணமிருக்கும். போதுமான கூட்டம் வந்து கொட்டகை நிரம்பும் வரை, பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். அது முடிந்து தில்லானா மோகனாம்பாள் படத்தின் பொன்னுசாமி குழுவினரின் நாதஸ்வர இசை ஒலித்தால், படம் துவங்கப் போகிறதென்று அர்த்தம். அன்றைய தினம் படம் பார்க்க எண்ணியிருப்பவர்கள், அந்த இன்னிசை முடிவதற்குள், அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுவார்கள்.

    கொட்டகையில் திரைப்படம் மாறியவுடன், மாடு பூட்டிய கட்டை வண்டியின் வெளிப்பக்கத்தில் புதுத் திரைப்படத்தின் பெரிய பெரிய போஸ்டர்களை ஒட்டியவண்ணம், தெருவில் போவோர் வருவோர்க்கெல்லாம் துண்டுச்சீட்டு கொடுத்துக் கொண்டு செல்வர். அதில். கதையின் சுருக்கத்தை வெளியிட்டு நம் ஆர்வத்தை அதிகப்படுத்தி, ’மீதியை வெள்ளித் திரையில் காண்க,’ என்று முடித்திருப்பர்.

    அக்காலத்தில் சினிமா என்றால் மூன்று மணி நேரம் எல்லோரும் ஒன்றாய் அம்ர்ந்து அளவளாவுதல், உடன் கொண்டு சென்றிருக்கும் நொறுக்குத் தீனி, தின்பண்டங்களைக் காலி பண்ணுதல், படம் முடிந்து நடந்து வீட்டுக்கு வரும் வரை படத்தின் நிறைகுறைகளை அலசி ஆராய்தல் எனக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய்க் கூடிக் குதூகலிக்கும் ஒரு நிகழ்வாயிருந்தது. இன்றைக்கோ நமக்குப் பிடிக்கும் படங்களைப் படு அறுவை என்கின்றனர் நம் பிள்ளைகள்! அவர்களுக்குப் பிடித்தவற்றை நம்மால் ரசிக்க முடியாமல், தலைமுறை இடைவெளி தடுக்கிறது.

    பள்ளியின் வலப்பக்கம் கொஞ்ச தூரம் நடந்து சென்றால், ’நளன்குளத்துக்குச் செல்லும் வழி,’ என்று ஒரு வளைவு வரும். கோவிலுக்குச் செல்லுமுன் இக்குளத்தில் குளித்துச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். எனவே சனிப்பெயர்ச்சி திருவிழாவின் போது இவ்வூருக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் தலையில் எண்ணெய், சீயக்காய் வைத்துக் கொண்டு இக்குளத்தில் மூழ்கி எழுவர். விழா முடிந்த பின் இக்குளத்தைப் பார்த்தால், எண்ணெய்க்கிணறு போல் காட்சியளிக்கும்!

    உயர்நிலைப்பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் தேனூருக்குத் தான் போக வேண்டும். அக்காலத்தில் ரிக்ஷாவோ, ஆட்டோவோ கிடையாது. திருநள்ளாற்றிலிருந்து தேனூருக்குப் பேருந்து வசதியும் கிடையாது. பையன்கள் சைக்கிளிலும் பெண்கள் நடந்தும் பள்ளிக்கு வருவார்கள். நான் தினந்தினம் இவ்வளவு தூரத்தை நடந்தே கடந்திருக்கிறேன் என்பதை இன்று நினைத்துப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது.

    வேளாண்மையே கிராமத்து மக்களின் முக்கியத் தொழிலாக இருந்தது. நான் பள்ளி செல்லும் சாலையின் இருமருங்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் பசுமையான வயல்வெளி கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிக்கும்.. இவ்வூருக்குப் பாசன வசதியளித்த அரசலாற்றுக்கிளை நதியின் பெயர் நூலாறு. ஒல்லியான ஆறுக்கு மிகவும் பொருத்தமான பெயர்!

    என்னைப் பொறுத்தவரைப் பள்ளிக்கூட வளாகமே எனது சொர்க்கபுரியாகத் திகழ்ந்தது. ஏற்கெனவே மைதானத்தைப் பற்றியும், மரங்களைப் பற்றியும் எழுதியிருந்தேன் அல்லவா?

    அம்மைதானத்தைத் தாண்டினால் வரிசையாக வகுப்பறைகள். ஒன்றில் நுழைந்தால் தொடர்வண்டி போல உட்புறம் இருந்த வழி மூலம் பள்ளியின் கடைசி அறை வரை சென்று விடலாம். பள்ளி விடுமுறை நாட்களில்’ஒளிஞ்சான் பிடிச்சி’ விளையாடுவதற்கு இத்தொடர் வகுப்பறைகள் மிகவும் வசதியாக இருந்தன.

    கடைசி வகுப்பறை முடியும் இடத்தில் ஒரு சிறிய மைதானம். வாசல் பக்கத்திலிருக்கும் பெரிய மைதானத்தையும் இந்தச் சிறிய மைதானத்தையும் இணைப்பது நீண்ட ஒரு பாதை. ஓட்டப்பந்தயம் ஓடுவதற்கு இந்தப் பாதை மிகவும் உதவியாக இருந்தது.

    புதைகாய் அல்லது ஏழாங்காய், குலை குலையா முந்திரிக்கா, ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துதாம், கிச்சுக்கிச்சுத் தாம்பாளம், கல்லா மண்ணா, பல்லாங்குழி, தாயக்கட்டை, சில்லுக்கோடு, நொண்டியடித்தல், கண்ணாமூச்சி, ஒளிஞ்சான் பிடிச்சி என்று எத்தனையெத்தனை விளையாட்டுகள் விளையாடியிருக்கிறேன்? இவையனைத்துமே உடலுக்கு நல்ல பயிற்சி கொடுத்தவை என்பதோடு பெற்றோருக்கு எந்தச் செலவையும் வைக்காதவையல்லவா?

    கிராமப்புறங்களில் கூட இன்று இவ்விளையாட்டுக்களைக் விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் உடலைச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், கணிணிக்கு முன்னமர்ந்து கண்களைச் சிமிட்டாமல் மணிக்கணக்காக விதவிதமான கணிணி விளையாட்டுக்களை விளையாடுவதைத் தானே நம் குழந்தைகள் விரும்புகிறார்கள்?

    பள்ளிக்கூட வீட்டில் ஜிம்மி என்ற நாய் எங்கள் விளையாட்டுத் தோழனாக இருந்தது. கல்வி இலாகா விதிகளின் படி நாய், பூனை எதையும் நாங்கள் வளர்க்கக் கூடாது. பள்ளி வளாகத்துக்குள்ளே எங்கள் வீடு அமைந்திருந்தமையால் இப்பிராணிகள் மாணவர் யாரையேனும் கடித்து விடக்கூடும் என்பதால் இந்தக் கட்டுப்பாடு.

    ஜிம்மி ஒரு தெருநாய் தான். நாங்கள் ஒரு தடவை மீந்த சாதத்தை அதற்குப் போட்டதிலிருந்து, எவ்வளவு அடித்து விரட்டினாலும் போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டது.

    நாங்கள் ஓட்டப்பந்தயம் ஓடப்போகிறோம் என்றால் அதுவும் எங்கள் வரிசையில் வந்து நின்று விடும். ஒன்,டூ, த்ரீ சொல்லிவிட்டு நாங்கள் ஓடத் துவங்குமுன், ஜிம்மி நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து சென்று இலக்கை எட்டிவிடும். எவ்வளவு முயன்றாலும் அதன் வேகத்துக்கு எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. எனவே ஓடுவது போல் பாசாங்கு செய்து விட்டு நாங்கள் நின்று விடுவோம். அது பாதி தூரம் பாய்ந்து ஓடி விட்டு நாங்கள் வரவில்லையென்று தெரிந்து கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பி எங்களிடமே ஓடி வரும். இப்படியாக அதை ஏமாற்றுவதில் எங்களுக்கு அலாதி மகிழ்ச்சி.

    சில ஆண்டுகள் கழித்து ஜிம்மிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதால் யாரைப் பார்த்தாலும் கடிக்க ஓடியது. பள்ளிக்குழந்தைகளைக் கடித்து விட்டால் விபரீதமாகிவிடும் என்ற எண்ணத்தில் முனிசிபல் அலுவலரிடம் ஜிம்மியைப் பிடித்துக் கொடுக்க ஏற்பாடு செய்தார் தந்தை.

    செய்தி கேள்விப்பட்ட போது ஜிம்மியை விடுவிக்கச் சொல்லி அப்பாவிடம் சண்டை போட்டோம்.அழுது பார்த்தோம். பட்டினி கிடந்தோம். அவர் எதற்கும் மசியவில்லை. கடைசி வரை உறுதியாக இருந்து பிடித்துக் கொடுத்து விட்டார்.

    நாய்வண்டிக் கூண்டுக்குள் ஜிம்மியைச் சிறை வைத்த பிறகு ”எப்படியாவது என்னைக் காப்பாற்று” என்று கெஞ்சுவது போல், அது கடைசியாகப் பார்த்த பார்வை, நீண்ட நாட்கள் என்னைச் சித்ரவதை செய்து கொண்டிருந்தது.

    ஆர்வமுடன் ஓட்டப்பந்தய விளையாட்டில் பங்கெடுத்துக் கொண்டு தங்கப்பதக்கம் பெறும் ஒலிம்பிக் வீரனைப் போல் ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருந்த ஜிம்மி போன பிறகு, அந்த விளையாட்டில் சுத்தமாக ஆர்வம் குறைந்து போனது.


    என் தந்தையின் பள்ளியில் கூட்டுபவராக வேலை செய்தவர் ஆண்டாளு. எங்கள் குடும்பத்தில் ஒருவராக ஆகி விட்ட அவரை ஆத்தா என்று அன்போடு அழைப்போம்.

    நல்ல உயரம், மாநிறத்தை விட சற்று கூடுதலான நிறம், ஒடிசலான உடல் வாகு, வெற்றிலை போட்டுப் போட்டுக் காவியேறிய பற்கள், பின்பக்கம் அள்ளிச் செருகிய தலைமுடி இது தான் ஆண்டாளு ஆத்தா

    1941 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது ரங்கூனில் ஜப்பான் குண்டு மழை பொழிய, அதிலிருந்து தப்பி ஆயிரக் கணக்கான மைல்கள் நடந்தே இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவர்களில் அவரும் ஒருவர்

    ஆடிப்பெருக்கு என்றழைக்கப்படும் ஆடி மாதம் 18 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஆற்றில் புதுப்புனல் பொங்கி வரும். அன்று ஆத்தாவுடன் படைப்பதற்காக அம்மா கொடுத்த பொருட்களை எடுத்துக் கொண்டு நூலாற்றுக்குச் செல்வது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தந்த விஷயம்.

    ஆற்றின் ஓரத்தில் கால்களைத் தண்ணீர்ல் நனைத்துக் கொண்டு நாங்கள் அமர்ந்திருக்க, ஆத்தா மட்டும் ஆற்றில் இறங்கிக் குளிப்பார். குளித்து விட்டு எடுத்துச் சென்ற பொருட்களை வைத்துப் படைப்பார். கற்பூரத்தை ஏற்றி படைத்து விட்டுத் தீபத்தை வெற்றிலையிலோ வாழையிலையிலோ வைத்து ஆற்றில் விடுவது அற்புதமான காட்சி!

    என் பள்ளிப்படிப்பு முடிந்து, கல்லூரியில் சேர்வதற்காக திரும்பவும் காரைக்காலுக்கே குடி பெயர்ந்து வந்து விட்டோம். சில ஆண்டுகள் கழித்து ஆத்தா இறந்த செய்தி வந்து சாவுக்குப் போய் வந்தோம்.

    அதற்குப் பிறகு திருநள்ளாற்றுக்குப் போகும் வாய்ப்பு ஒருமுறை கிட்டியது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இந்த ஊருக்கு வந்து எங்களுடன் பழகி என் நினைவில் தங்கிவிட்ட ஆண்டாளு ஆத்தாவின் குடிசையிருந்த இடத்தைப் போய்ப் பார்த்தேன். கீற்று முழுவதுமாக கொட்டிவிட, மக்கிப் போய் ஒன்றிரண்டாக உடைந்த மூங்கில்கள் சில, அவ்விடத்தில் கிடந்தன..

    சிலர் வாழ்க்கைப் பயணத்தில் கொஞ்ச தூரமே நம்முடன் பயணித்தாலும், அவர்களது நினைவுகள், அடி மனதில் அழியாத கோலங்களாக தங்கி, நம் நினைவுக் குறிப்புக்களில் இடம் பெற்று விடுகின்றன. அந்தச் சிலரில் ஆண்டாளு ஆத்தாவும் ஒருவர்.

    தற்போது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் திருநள்ளாறு கோவிலுக்கு வருகை தருவதால் கோவில் நகரம் என்ற சிறப்பை இவ்வூர்ப் பெற்றுள்ளது. எனவே அரசு இவ்வூரை மேம்படுத்த சில கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாய்க் கேள்வி. இத்தொகை இடைத்தரகர்களின் கஜானாவை நிரப்பாமல், உண்மையாகவே என் ஊரை மேம்படுத்தினால் மகிழ்வேன்.

    இதுவரை எழுபதுகளில் நான் பார்த்த, நான் வளர்ந்த என் ஊரைப் பற்றியும், பழகிய நபர்களைப் பற்றியும் பசுமையான நினைவலைகளை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.

    என்னுடனே பயணித்து என் ஊரைச் சுற்றிப் பார்த்த உங்களனைவருக்கும் நன்றி கூறி இத்தொடரை முடிக்கின்றேன்..
    Last edited by கலையரசி; 18-04-2012 at 01:57 PM.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    தெளிந்த நீரோட்டம் போன்ற வர்ணனை..

    அழகாகச் சொல்கிறீர்கள்..

    தொடருங்கள் கலை..!
    ஊக்கந்தரும் உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ராஜா!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  12. #24
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    ஊர் பற்றிச் சொல்லத் துவங்கியதும் மடை திறந்த வெள்ளமெனப் பாயும் நினைவுகளும் அவற்றுக்கு ஈடு கொடுக்கும் எழுத்துக்களும் வெகு அற்புதம்.

    பள்ளிக்கூட வீடும், மரங்களும் பற்றிய வர்ணனை அலாதி ரசனை. பாராட்டுகள் அக்கா.

    பழகிய மனிதர்கள் பற்றிய மனம் கனக்கும் ஞபகக் குறிப்புகளோடு உங்களுடனேயே நாங்களும் பயணித்துவருகிறோம், திருநள்ளாற்றின் வீதிகளில்.

    தொடரும் நினைவுகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    பாராட்டுக்களுக்கும் என்னுடனே பயணிப்பதற்கும் மிக்க நன்றி கீதம்!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

Page 2 of 7 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •