Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 31

Thread: நண்பர்களே...

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0

    நண்பர்களே...

    நேற்று பற்றிய நினைவில்லை...
    நாளை பற்றிய பயமில்லை...
    அந்த நொடிகளுக்காய் சிரித்திருந்தோம்..

    நம்மிடையே எல்லாம் பொதுவாயிருந்தது...
    உனதென்றும் எனதென்றும் எதுவும் இருந்ததில்லை.
    உணவு முதல் கனவு வரை...
    அண்ணன் முதல் அன்னை வரை...
    எல்லாம் நமதாக இருந்தது.

    நம் அனைவருக்குமான சாயங்கால சரித்திரங்கள்...
    பெரும்பாலும் மொட்டை மாடியில் எழுதப்பட்டது.
    நாம் விளையாடிய சீட்டுக்கட்டுக்கள்...
    இப்பொழுது ஏதோவொரு மூலையில் இருக்ககூடும்.

    மாலையில் ஆரம்பிக்கும் பேச்சு...
    இரவு வரை நீளும்.
    எதைப் பற்றி என்று தெரியாது...
    ஆனாலும் பேசிக்கொண்டேயிருப்போம்.
    அன்று காரணங்களே தேவைப்படவில்லை...

    கிராமத்தில் கழித்த விடுமுறை நாட்கள்...

    வரப்பின் ஓரமாய் அப்பா சிரித்திருக்க...
    சேற்று வயல்களில் ஆடி களித்ததும்...
    அம்மாவின் சமையலை வாசம் பிடித்து...
    அவசரமாய் பம்ப்புசெட்டில் குளியல் முடித்ததும்...

    பகல் முழுவதும் ஆடி களித்தபின்...
    களத்துமேட்டினில் இரவு தொடங்கும்.
    நிலவு ஒளியினில் ஒன்றாய் கூடி..
    ஆடி.. பாடி... இரவை கழிப்போம்.
    இடையிடையே இடைவேளையாய்
    அம்மா கையால் சோற்றுருண்டை...

    இன்றும் கூட...
    நம் பழைய புகைப்படங்களை பார்க்கையில்...
    அதில் உறைந்திருக்கும் சிரிப்பு....
    சில நொடிகள் நம் உதடுகளில் உயிர்கொள்ளும்..
    அடுத்த நொடிகளில்...
    நினைவுகளாய் நம் உயிர்'கொல்லும்'.

    உறைந்துவிட்ட புகைப்படம் போல் இல்லை வாழ்க்கை...
    அசுர வேகத்தில் பாய்கிறது காலம்...
    நம்மையும் அதனூடே இழுத்தபடி.
    நேற்று என்பதை நினைவுகளாக்கி..
    நாளை என்ற கனவுக்காய் வாழ்ந்து...
    இன்றைய தூக்கத்தை தொலைத்து நிற்கிறோம்.

    பார்ப்பதற்கு நேரமில்லை...
    பேசவும் கூட காரணங்கள் தேவைப்படுகிறது.
    எப்பொழுதாவது வரும் மின்னஞ்சலில்...
    சில நொடிகள் நிலைகுத்தி நிற்கின்றன கண்கள்..

    வளர்ந்துவிட்டோம்..
    அதனால்தானோ என்னவோ...
    நிறையவே இழந்துவிட்டோம்.
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    சூப்பர்.................. இந்த கவிதை அனைத்து வளர்ந்த ஆண்களுக்கும் பொருந்தும்.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by சசிதரன் View Post

    வளர்ந்துவிட்டோம்..
    அதனால்தானோ என்னவோ...
    நிறையவே இழந்துவிட்டோம்
    .
    சரியாக கூறினீர்கள் நண்பரே சிறு பிள்ளைப்பருவமே
    வாழ்வில் மகிழ்சியானது எதையும் சிந்திக்கா உள்ளம்.....
    அப்பருவத்தில் எப்போது பெரியவா்களாவோம் என மனதில் எண்ணங்கள்
    எண்ணுக்கணக்கற்றவையாக தோன்றும்...
    ஆனால் இப்பபொளுதும் தினமும் நினைக்கிறேன் வாழ்க்கையை
    கொஞ்சம் பின்நோக்கி நகர்த்த காலங்கள் நேரங்கள் பொன்னானவை
    அதை நாம் சில வேளைகளில் மண்ணாக்கிவிட்டோம்.....
    தங்கள் கவிதை என்னை சிறுபிள்ளைப் பருவத்துக்கு இழுத்துச் சென்றுவிட்டு
    மீண்டும் ஒரு யுகம் கண்டேன் உங்கள் கவிதையால்....

    நன்றி கலந்த பாராட்டுக்கள் கவிதை அருமையாக உள்ளது
    தெடருங்கள்

  4. #4
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by daks View Post
    சூப்பர்.................. இந்த கவிதை அனைத்து வளர்ந்த ஆண்களுக்கும் பொருந்தும்.
    மிக்க நன்றி நண்பர் மூர்த்தி அவர்களே...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

  5. #5
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by நிரஞ்சன் View Post
    சரியாக கூறினீர்கள் நண்பரே சிறு பிள்ளைப்பருவமே
    வாழ்வில் மகிழ்சியானது எதையும் சிந்திக்கா உள்ளம்.....
    அப்பருவத்தில் எப்போது பெரியவா்களாவோம் என மனதில் எண்ணங்கள்
    எண்ணுக்கணக்கற்றவையாக தோன்றும்...
    ஆனால் இப்பபொளுதும் தினமும் நினைக்கிறேன் வாழ்க்கையை
    கொஞ்சம் பின்நோக்கி நகர்த்த காலங்கள் நேரங்கள் பொன்னானவை
    அதை நாம் சில வேளைகளில் மண்ணாக்கிவிட்டோம்.....
    தங்கள் கவிதை என்னை சிறுபிள்ளைப் பருவத்துக்கு இழுத்துச் சென்றுவிட்டு
    மீண்டும் ஒரு யுகம் கண்டேன் உங்கள் கவிதையால்....

    நன்றி கலந்த பாராட்டுக்கள் கவிதை அருமையாக உள்ளது
    தெடருங்கள்

    உங்கள் பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல நண்பரே... தொடர்ந்து விமர்சியுங்கள்...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    HDFC என்று நினைக்கிறேன்... அது ஒரு இன்ஷூரன்ஸ் விளம்பரம். அதில் நான்கைந்து பெரியவர்கள் காஃபி ஷாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.. சில இளைஞர்கள் அங்கே வந்து பார்ப்பார்கள்.. அப்போது, அந்த பெரியவர்கள் எல்லோரும் கலைந்து செல்லும் காட்சி,

    என்னை பாதித்தது உண்மை.. அந்த பாதிப்பை உங்கள் கவிதையில் காண்கிறேன்.. இரண்டுக்கும் ஒர் நூலளவேனும் ஒற்றுமை உண்டு..

    பாராட்டுக்கள் திரு.சசிதரன்..

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    சிறு வயது நினைவுகள் என்றுமே பசுமையானவை தான் அருமையான கவிதை பாராட்டுக்கள்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஓடி விளையாடிய
    வீதிகள் மைதானங்கள்...

    ஏறி விளையாடிய
    மரங்கள், மலைகள்....

    இன்னும் என்னென்னவோ எல்லாம்
    அங்கேயே இருக்கின்றன...

    ஆனால் நாம்தான்
    அவற்றை விட்டு விட்டு
    எங்கோ வந்துவிட்டோம்....

    நல்ல கவிதை என் மனதையும்
    பின்னோக்கிப் பயணிக்க வைத்தது,
    பாராட்டுக்கள் சசி..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by தென்றல் View Post
    HDFC என்று நினைக்கிறேன்... அது ஒரு இன்ஷூரன்ஸ் விளம்பரம். அதில் நான்கைந்து பெரியவர்கள் காஃபி ஷாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.. சில இளைஞர்கள் அங்கே வந்து பார்ப்பார்கள்.. அப்போது, அந்த பெரியவர்கள் எல்லோரும் கலைந்து செல்லும் காட்சி,

    என்னை பாதித்தது உண்மை.. அந்த பாதிப்பை உங்கள் கவிதையில் காண்கிறேன்.. இரண்டுக்கும் ஒர் நூலளவேனும் ஒற்றுமை உண்டு..

    பாராட்டுக்கள் திரு.சசிதரன்..
    தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி தென்றல்...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

  10. #10
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    ஓடி விளையாடிய
    வீதிகள் மைதானங்கள்...

    ஏறி விளையாடிய
    மரங்கள், மலைகள்....

    இன்னும் என்னென்னவோ எல்லாம்
    அங்கேயே இருக்கின்றன...

    ஆனால் நாம்தான்
    அவற்றை விட்டு விட்டு
    எங்கோ வந்துவிட்டோம்....

    நல்ல கவிதை என் மனதையும்
    பின்னோக்கிப் பயணிக்க வைத்தது,
    பாராட்டுக்கள் சசி..!!

    உண்மைதான் நண்பர் ஓவியன் அவர்களே... தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    வாரே வாவ்...

    எனக்கு நிகழ்ந்ததைப்போலவே இருக்கிறது..

    ஒரு படைப்பின் வெற்றி அந்தப்படைப்பை படிக்கும் வாசகர்களையும் அதனூடே பயணிக்க வைக்குமாயின் அதுதான் அந்தப்படைப்பின் பலமும் வெற்றியும்...

    உங்கள் கவிதைக்கு அந்த வெற்றி கிடைத்திருக்கிறது..

    அழகான இயல்பான வரிகளில் முப்பது வருடங்களை மீள்பார்வைக்கு தந்திருக்கும் உங்க்ள தேர்ந்த கவியாற்றலுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்

    தொடருங்கள் இதுபோல இன்னுமின்னும்..
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  12. #12
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    அருமையான பின்னூட்டம் தந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி நண்பரே...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •