Results 1 to 8 of 8

Thread: தலைப்பில்லா கவிதை 4

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    தலைப்பில்லா கவிதை 4

    காலை ஸ்வரம் கேட்காத
    எழுச்சி,
    அதிகாரம் இல்லாமல்
    வீட்டை நெருக்கும்
    சூன்யம்
    பிறிதொருநாள் எழுதிவைக்கும்
    பிரிவென்ற கவிதை.

    அழுது முடித்த மூன்றாம்மாதத்தில்
    பெற்றவன் திருமணம் பார்க்கும் வாய்ப்பு
    என் தாய்க்கு ஒரு மாற்று.

    பச்சிளம் குழந்தையை மீறும்
    மென்மை அவளிடம்..
    சொல்ல வார்த்தை இல்லை
    உண்மை அவளிடம்..

    இன்று
    அபஸ்வரம் இல்லாத காலை
    அதிகார நெருக்கடியைக் குடித்த காலை
    பிறிதொருநாள் எழுதிவைக்கும்
    பரிவென்ற கவிதை.

    ஆயின்
    என்றேனும் ஒருநாள்
    அம்மாவின் நினைவு வரலாம்
    அழுது முடித்த பின் தோன்றும்

    "அழாமல் இருந்திருக்கலாம்..."

    - ஆதவன்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மாற்றாந்தாய் வந்தவரை வெளிச்சம்
    அதன்பின் இருண்மையில் முடங்கிவிட்டேன் ஆதவா..
    தருவாயா விளக்கம்?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    அற்புதம் ஆதவா..
    அழுது முடித்தபின் தோன்றும் அழாமல் இருந்திருக்கலாமே..
    உணர்வுகளைக் கரைத்து தெளித்திருக்கிறாய்..
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    மாற்றாந்தாய் வந்தவரை வெளிச்சம்
    அதன்பின் இருண்மையில் முடங்கிவிட்டேன் ஆதவா..
    தருவாயா விளக்கம்?
    மாற்றாந்தாய்
    தாயானால்
    பெற்ற தாயின் நினைவெதற்கு?

    இதைத்தான் சொல்ல வந்தேன் அண்ணா!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நன்றி ஆதவா..

    இப்போது விளங்கியது..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மாற்றாந்தாயின் கவிதைகளில் இது தனிமுத்து..
    என் நெஞ்சம் கொள்ளை கொண்ட பதிவு ஆதவா..!!

    மனம் நெகிழ்கிறது..!!
    மாற்றான் தாய் பற்றிய புரட்டுகள் மலிய வேண்டும்..!
    இவ்வகை தாய்கள் வலி புரிய வேண்டும்..!

    அழகான படைப்புக்கு எனது இ-பணம் 1000 பரிசு.
    மனமார்ந்த பாராட்டுகள் அன்புத் தம்பி ஆதவா..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    பச்சிளம் குழந்தையை மீறும்
    மென்மை அவளிடம்..
    சொல்ல வார்த்தை இல்லை
    உண்மை அவளிடம்..
    பிரிவென்ற கவிதை Vs பரிவென்ற கவிதை = பிரிவை வென்ற பரிவுக்கவிதை.

    தந்தையின்றி வளர்த்த அன்னையர் பலருண்டு. அன்னையின்றி வளர்த்த தந்தையர் சிலருண்டு. மாற்று அன்னையையும், தந்தையையும் ஏற்கும் பிள்ளை மனம் எதற்குண்டு? மாற்றும் அன்பு அதற்கு இச்சக்தி உண்டு.
    உணரவைத்த கவிதை. பாராட்டுகள் ஆதவா.
    (இ-பணம்..... என் அக்கவுண்ட தேத்திட்டு தரேன்பா )
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by kavitha View Post
    பிரிவென்ற கவிதை Vs பரிவென்ற கவிதை = பிரிவை வென்ற பரிவுக்கவிதை.

    தந்தையின்றி வளர்த்த அன்னையர் பலருண்டு. அன்னையின்றி வளர்த்த தந்தையர் சிலருண்டு. மாற்று அன்னையையும், தந்தையையும் ஏற்கும் பிள்ளை மனம் எதற்குண்டு? மாற்றும் அன்பு அதற்கு இச்சக்தி உண்டு.
    உணரவைத்த கவிதை. பாராட்டுகள் ஆதவா.
    (இ-பணம்..... என் அக்கவுண்ட தேத்திட்டு தரேன்பா )
    மிக்க நன்றி அக்கா... உங்கள் விமர்சனம் பல விசயங்களை யோசிக்கவும் செய்கிறது....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •