25-6-1975
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்
25-6-1975
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
நன்றி R.மோகன் காந்தி.
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
26-6-1924
இளையபெருமாள் பிறந்த நாள்
இளையபெருமாள் லட்சுமணன் (L. Ilayaperumal, ஜூன் 26, 1924 - செப்டம்பர் 9, 2005) தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஒரு தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், இருபது வருடங்கள் (1952 - ) நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். தலித் மக்களுக்காக ஆற்றிய தொண்டிற்காகவும், குறிப்பிட்ட சில பகுதிகளில் தலித் மக்களுக்கு இருந்த இழிநிலையினை ஒழித்தவர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் பிறந்தவர் இளையபெருமாள். பள்ளிகளில் தலித்துகளுக்காக தனி பானையும், மற்றவர்களுக்காக தனி பானையும் இருப்பதை பார்த்திருக்கிறார். எவருக்கும் தெரியாமல், பறையர்களின் பானை என்று எழுதப்பட்டிருக்கும் பானையை தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்தார். ஒரு நாள் உடைக்கும் போது பள்ளி முதல்வரிடம் பிடிபட்ட போதும், தன்னுடைய செய்கையின் நியாயத்தினை முன்வைக்கத் தயங்கவில்லை. அவரால் அன்று முதல் மாணாக்கர்களுக்கு இருந்த வந்த இரு குவளை முறை நீக்கப்பட்டது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
28-6-1914
ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
1-7-1961
இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிறந்த தினம்
கல்பனா சாவ்லா (பிறப்பு:ஜூலை 1, 1961 - இறப்பு:பெப்ரவரி 1, 2003) ஓர் அமெரிக்க விண்வெளி வீராங்கனை ஆவார். 1983 ல் ழான் பெர்ரி ஹாரிஸனை(Jean-Pierre Harrison) மணந்தவர் 1990ல் அமெரிக்கக் குடிமகள் ஆனார். இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி இவரே. STS-107 என்ற கொலம்பியா விண்கலத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும் பொழுது, அவ்விண்கலம் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
2-7-1940
சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
3-7-1988
அமெரிக்க போர்க் கப்பல் பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks