Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: பாலகுமரன்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Sep 2008
    Location
    தற்போதைக்கு சிங்கை
    Posts
    180
    Post Thanks / Like
    iCash Credits
    9,024
    Downloads
    4
    Uploads
    0

    பாலகுமரன்

    இந்த திரியில் பாலகுமரன் நாவல்களில் நான் படித்து ரசித்த எழுத்துகளை இல்லை என்னை மயக்கிய எழுத்துகளை பதிவு செய்யலாம் என உள்ளேன். முடிந்தால் அல்லது உங்களையும் மயக்கினால் ஆதரவு தாருங்கள்

    மல்லிகை ரொம்ப ரொமாண்டிக்கான பூ.
    ரோஜா மாதிரி மல்லிகை கம்பீரமில்லை.
    போகன்வில்லா மாதிரி குப்பைத்தனமில்லை.
    நாகலிங்கம் மாதிரி சந்நியாசி இல்லை.
    முல்லை போலவும் குழந்தைத் தனமில்லை.
    தாழைபோலக் குப்பை இல்லை. மகுடம்
    போல அழுக்கு இல்லை.
    கனகாம்பரம் போல அலட்டல் இல்லை.
    மனோரஞ்சிதம் போல மந்திரத்தனமில்லை.
    சாமந்தி போலத் திமிரில்லை.
    தாமரைபோல கர்வமில்லை.
    மல்லிகை ஒரு ரொமாண்டிக் பூ.
    குடித்தனப் பொம்பிளை போல
    காதல், காமம், அமைதி,
    அழைப்பு, அலட்சியம், அழகு எல்லாம் நிறைந்த பூ.
    - 'அடுக்கு மல்லி நாவலில்'.
    அன்பே சிவம்
    பானு.அருள்குமரன்,
    உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்,
    உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    நானும் வாசித்து ரசித்தேன், நல்ல வரிகள்
    அனுபவத்தில் கண்டது அனைவருக்கும் ஏற்றது
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    பாலகுமாரன் பலருக்கு ஒரு வசிய எழுத்தாளர். வாசகர்கள் படைப்பை படித்து அதன் கருத்தை சிலாகிக்கும் போது வரும் எழுத்தாளர்களில் பாலகுமாரனும் இடம்பெறுவார். அவரின் மெர்க்குரிப்பூக்கள், இரும்புக்குதிரைகள் எனக்கு பிடித்த படைப்புக்கள். அவரின் எழுத்தில் எனக்கு வசியம் எதுவும் தோன்றாவிட்டாலும் அவரின் சில எழுத்துக்களை படிக்கும் போது மனசுக்குள் போய் அப்படியே உட்கார்ந்து கொள்ளும். மல்லிகைப்பூ சம்பந்தமான இந்த கருத்தும் அப்படித்தான் மனசின் உள்ளே சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டது.

    தோற்றத்தில் எளிமையானது மல்லிகைப்பூ. ஆனால் அதன் குணத்தால் மயங்காதவர்கள் மிகவும் அரிது. பொதுவாய் ஆண்களுக்கு பிடிக்கும் பூ பெண்களுக்கு பிடிக்காது. பெண்களுக்கு பிடிக்கும் பூ ஆண்களுக்கு பிடிக்காது. இரு பாலாருக்கும் பிடித்து, இருவரிடையே பிணைப்பை ஏற்படுத்தும் வசியம் மல்லிகைப்பூவுக்கு மட்டுமே உண்டு. அதை சரியாய் புரிந்து பாலகுமாரன் சொன்ன வார்த்தைகள் இவை..!!

    இரசிக்க வைத்த வரிகளை தந்த நண்பருக்கு நன்றிகள்.!
    அன்புடன்,
    இதயம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    மல்லிகையே மல்லிகையே..


    மல்லிகையை பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லை எனலாம்..

    பாலகுமாரன் மல்லிகைக்கே ரொமாண்டிக் வருமளவுக்கு அழகாக கொடுத்திருக்கிறார். இதை மல்லிகை படித்தால் கொஞ்சம் கர்வம் வரத்தான் செய்யும்..!

  5. #5
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    மல்லிகைப்பூ மடுமல்ல அல்லாத்தையும் பத்தி அருமையாய் எழுதற வசீகரிக்கிற ஒரு எழுத்து பாலகுமாரனுடையது..

    அண்மை காலமாய் ஆன்மீக நாவல்களில் நிறைய நாட்டம் செலுத்துவதால் பழைய பாலகுமாரனை தொலைத்துக் கொண்டிருப்பதாய் ஒரு எண்ணம்

    பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    மல்லிகைப்பூ நல்ல மணமுடைய பூ. ஆனால் அதற்காக மற்ற பூக்கள் குறைந்தது என்பது கிடையாது. ஒவ்வொரு பூக்களிலும் ஒவ்வொரு ஸ்பெஷல் உள்ளது.

    மாலையில் மல்லிகை வீசும் மணமே தனிதான்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post

    மாலையில் மல்லிகை வீசும் மணமே தனிதான்.
    மல்லிகை மணத்தில் மயங்கினோர் மங்கம்...ஸாரி..சங்கம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by மன்மதன் View Post
    மல்லிகை மணத்தில் மயங்கினோர் மங்கம்...ஸாரி..சங்கம்
    சங்கத்திற்கு தலைவர் ஆருங்கோ. நீங்களா அல்லது நம்ம தலையா?

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    சங்கத்திற்கு தலைவர் ஆருங்கோ. நீங்களா அல்லது நம்ம தலையா?
    ஆருங்கோ இல்லை.. ஆரென்கோ.....

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by மன்மதன் View Post
    ஆருங்கோ இல்லை.. ஆரென்கோ.....
    நம்ம தல இதற்கு மிகவும் தகுந்தவர். அவரையே தலைவராக தேர்ந்தெடுங்கள்.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Sep 2008
    Location
    தற்போதைக்கு சிங்கை
    Posts
    180
    Post Thanks / Like
    iCash Credits
    9,024
    Downloads
    4
    Uploads
    0
    அந்தக் கால பாலகுமரன்......
    கடற்கரையில் காத்திருந்த காதலனை, வேறு எப்படியும் சொல்ல முடியாது


    உனக்கென்ன கோவில் குளம்
    சாமிபூதம் ஆயிரம் ஆயிரம்
    வலப்பக்க கடல் மண்ணை
    இடப்பக்கம் இரைத்திரைத்து
    நகக்கணுக்கள் வலிக்கின்றன
    அடியே, நாளைக்கேணும் தவறாமல் வா!”

    ------------------------------------------------------------------------------------


    ‘பறித்து எறிந்தவைக் கொஞ்சம்
    உருவி அறுத்தவைக் கொஞ்சம்
    புரண்டு படுக்கையில்
    நசுங்கி மடிந்தவைக் கொஞ்சம்
    பதறி தவிக்கையில்
    வேறுடன் போனவை ஆயிரம்…

    நீயின்றி தளர்ந்த நாளில்
    இப்புற்களின் மேலே அமர்ந்து
    மொத்தமும் மீண்டும் நினைக்க
    மனசுக்குள் சோகம் வளரும்
    புற்களாய்… புதராய்… காடாய்…’
    அன்பே சிவம்
    பானு.அருள்குமரன்,
    உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்,
    உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்

  12. #12
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    நம் மன்றத்து மூத்த குடிமகன் இளசு பாலகுமாரன் கவிதைகள் பற்றி ஆராய்ந்து தனிச்சுட்டியே தந்திருக்கிறார் இங்கு நம் மன்றத்தில்
    http://tamilmantram.com/vb/showthread.php?t=4073





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •