இந்த திரியில் பாலகுமரன் நாவல்களில் நான் படித்து ரசித்த எழுத்துகளை இல்லை என்னை மயக்கிய எழுத்துகளை பதிவு செய்யலாம் என உள்ளேன். முடிந்தால் அல்லது உங்களையும் மயக்கினால் ஆதரவு தாருங்கள்
மல்லிகை ரொம்ப ரொமாண்டிக்கான பூ.
ரோஜா மாதிரி மல்லிகை கம்பீரமில்லை.
போகன்வில்லா மாதிரி குப்பைத்தனமில்லை.
நாகலிங்கம் மாதிரி சந்நியாசி இல்லை.
முல்லை போலவும் குழந்தைத் தனமில்லை.
தாழைபோலக் குப்பை இல்லை. மகுடம்
போல அழுக்கு இல்லை.
கனகாம்பரம் போல அலட்டல் இல்லை.
மனோரஞ்சிதம் போல மந்திரத்தனமில்லை.
சாமந்தி போலத் திமிரில்லை.
தாமரைபோல கர்வமில்லை.
மல்லிகை ஒரு ரொமாண்டிக் பூ.
குடித்தனப் பொம்பிளை போல
காதல், காமம், அமைதி,
அழைப்பு, அலட்சியம், அழகு எல்லாம் நிறைந்த பூ.
- 'அடுக்கு மல்லி நாவலில்'.
Bookmarks