பார்மெச்சும் உன்அழகை பார்த்த கண்களுக்கு
ஊர்வசியும் மேனகையும் தாடகையாய்த் தெரியுதடீ!
உன்குரலை அனுதினமும் கேட்ட செவிகளுக்கு
வனத்துறையும் குயிலோசை அவலயமாய்க் கேட்குதடீ!
உன் பெயரை உச்சரிக்கையில் இனிக்கின்ற நாவுக்கு
திருநெல்வேலி அல்வாவும் வேம்பாய்க் கசந்ததடீ!
உன் கருநிற கூந்தலில் சூடிய செம்பருத்தி
கழகக் கொடியை கண்களிலே காட்டுதடீ!
குண்டு மல்லிகைப் பூவைத் தலையிலே சூடுகையில்
வண்டுகள் கூட்டத்தை மொய்ப்பதற்கு விட்டுவிடாதே!
பாரம் தாங்காது முறிந்து விழும் சிற்றிடையின்
கோரக் காட்சியைக் காண்பதற்கு நான் சகியேன்.
இரவுநேர மின்வெட்டும் இனித்திடுமே காதலர்க்கு!
இருட்டிலும் படிக்கின்ற எழுத்தன்றோ காதலென்று
கவியரசர் சொன்னசொல் காதலர்க்கு வேதமடீ!
தாயைக் கண்டாலும் சலிப்பு வந்ததடீ! உன்வடிவில்
பேயைக் கண்டாலும் காதல் பிறக்குமடீ! நீ உந்தன்
வாயைத் திறந்து ஒருவார்த்தைப் பேசிவிட்டால்
பாயை விரித்துப் படுத்திடுவேன் நிம்மதியாய்!
Bookmarks