Page 5 of 14 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast
Results 49 to 60 of 158

Thread: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்..மாம்பூவும் தில்லைப்பூவும் சொல்வதென்ன..

                  
   
   
  1. #49
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    எறுழம்









    வெள்ளை பூக்கள் எங்கும் காணப்படும் இந்த ஏறுகொடி பல பெரிய மரங்கள் மற்றும் புதர்கள் மீது 5-10 மீட்டர் வரை படர்ந்து வளரும். பூக்கும் பருவம் குளிர் மற்றும் பிப்ரவரியில் உச்ச காலம் ஆகும்.

    தண்டு மற்றும் இலைகள் மருத்துவ பயன் கொண்டதென கூறப்படுகிறது . மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், குறைந்த மட்ட வெப்பமண்டல பசுமைமாறா காடுகளிலும் காணப்படுகிறது.
    Last edited by Hega; 11-07-2012 at 09:00 PM.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  2. #50
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    சுள்ளி

    Name : Ebony
    Botonical name : Diospyros ebenum
    Family: Ebenaceae










    கருங்காலி வகை மரம் / அதன் பூ

    சாலம்; மரா; ஆச்சா; தும்பி; கருங்காலி; கருத்தாலி என்ற பல பெயர்களால் அழைக்கப்படும், கலப்பை செய்யப் பயன்படும் ஒரு வகை மரம்

    ஒரு சதுர அடி மரத் துண்டு, இரண்டாயிரத்துக்கும் மேலே விலை போகக் கூடிய கருங்காலி எனப்படும் மரத்தின் மலர் பெயர் இது

    அழகிய அடர் சிவப்பு இதன் மலர் நிறம்வெளிர் பச்சை, அடர் பச்சை என இதன் இலைகளின் நிறம், நெடிதுயர்ந்து வளரும் இந்த மரம், பார்க்க எல்லா மரத்தையும் போல இருந்தாலும் இது உறுதிக்குப் பெயர் போனது

    எத்துணையோ கலைப் பொருட்கள் இதை கொண்டு செய்கின்றனர் இணையத்தில் தேடினால் நிறைய யானைகளும், வேறு சில பொருட்களும் இருந்தன. அதன் விலையைப் பார்க்கையில் அந்த யானையை உயிருடனே வாங்கி விடும்அளவு அதிகம்


    கருங்காலிக் கட்டைக்கு
    நானாக் கோடாலி
    இருந்கதளைத் தண்டுக்கு
    நானியதே "

    என ஔவையாரால் பாடப்பட்ட மலர் இது.





    Last edited by Hega; 11-07-2012 at 09:07 PM.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  3. #51
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    கூவிரம்






    குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மலைமர வகை
    மேலதிக விபரம் தெரியவில்லை
    Last edited by Hega; 12-02-2012 at 09:33 PM.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  4. #52
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    வடவனம்



    வடவனம் என்னும் மலரைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டுந்தான் உள்ளது. [1]

    துழாஅய் என்னும் மலரும் 99 மலர்களில் ஒன்றாக எண்ணப்படுவதால் வடவனம் என்னும் மலரைத் துளசி என அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு. செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும் சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம். துளசி போலவே இருக்கும் மற்றொரு செடி திருநீற்றுப்பச்சை.

    குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறும் 99 மலர்களின் தொகுப்பில் அது இடம்பெற்றுள்ளது


    வடவனம் மலர் - பி.எல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டும் படம்.






    துளசி (Ocimum Sanctum) மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு


    மருத்துவக் குணங்கள்

    சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
    தொற்றுநோய்களை எதிர்க்கும்.
    சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்
    வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்
    துளசிவிதை ஆண்மையை அதிகரிக்கும்
    ஞாபக சக்தியை அதிகரிக்கும்
    வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்

    துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும்.



    துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.

    துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.
    ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா*ய் து*ர்நா*ற்ற*த்தையு*ம் போ*க்கு*ம்.
    நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.
    உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
    தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.
    சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.


    தொடர்ந்த தேடலுடன்....







    Name : Banyan
    Botanical Name : Ficus benghalensis
    Family: Moraceae




    ஆலமரம் / அதன் பூ

    "ஆல் போல் தளைத்து
    அருகு போல் வேரூன்றி "


    எனும் வாக்குக்கமைய தாயாகிய மரம் வளர்த்த சேயாகிய விழுதுகள், தாயின் கடைசி காலத்தில் அவள் பாரத்தை தாங்கும் என உறவுக்கும் ஒப்புமை கூற வைக்கும் மரம். ஆலமரம் விழுதுகள் விட்டு பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது

    இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது

    ஆலமரம் என்றால் Ficus benghalensisஎனும் இனத்தையே குறிக்கும் . ஆலமரத்தின் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகிறது

    பொதுவாக 30-40 மீட்டர் உயரம் வரையும், மிக அரிதாக 60 மீட்டர் வரையும் கூட வளரக்கூடிய இதன் அடிமரம் 2 மீட்டர் வரை பருக்கக்கூடியது. ஒழுங்கற்ற அடிமரத்தைக் கொண்ட இதில் விழுதுகள் உண்டாகி மரத்தை நிலத்தில் உறுதியாக வைத்திருப்பதுடன், பாரமான இதன் கிளைகளையும் தாங்குகின்றது. 10-35 சமீ நீளமும், 5-15 சமீ அகலமும் கொண்ட நீள்வட்ட வடிவில் அமைந்த இலைகள் மினுக்கம் கொண்டவை. இளம் தாவரத்தின் இலைகளே பெரிதாகக் காணப்படும். சமயத்தில் 45 சமீ நீளம் வரை கூட வளர்வதுண்டு. முதிர்ந்த மரத்தின் இலைகள் ஒப்பீட்டளவில் சிறியவை. பொதுவாக 10 சமீ நீளம் கொண்டவை.



    இந்த மரத்தில், கவர்ச்சியான நிறங்களைக் கொண்ட அல்லது மணம் பொருந்திய பூக்கள் இருப்பதில்லை






    மருத்துவக் குணம்

    இதனை இயக்கு ரோதம், காமரம், சோளி, தோல்மரம், பாமரம், பூதம், வடம், பானோக்கி என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை, பழம், பூ, விழுது, பால் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை.

    அச்சரம் புண்கிரந்தி யாவும் பயந்தோட
    வச்சமற மேகமுந்தீ யாகுமே-இச்சகத்தில்
    நாதனென மூவருக்கு நற்றுணையா மாக்கைக்கும்
    பூத மதிபதியைப் போல்

    - தேரையன் வெண்பா

    பொருள் - நாள்பட்ட புண்கள், மேகம், வயிற்றுக் கடுப்பு, நீரிழிவு இவைகளைப் போக்கி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.


    சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட அகக்குப்பைக்
    கொல்லக்கின்ற நீரிழிவை கொல்லுங்காண்- நல்லாலின்
    பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
    மேலும் இலையுமென விள்
    - அகத்தியர் குணபாடம்

    உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும்.

    அதுபோல், ஆலமரத்தின் பழுத்த இலைகளை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் கலந்து, கரப்பனுக்கு பூசி வந்தால் கரப்பான் எளிதில் காணாமல் போகும்.

    ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவலாம்.


    நீரிழிவு நோயாளிகளுக்கு

    நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.



    எலும்பு முறிவுக்கு

    எலும்பு முறிவு, சுளுக்கு, இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கட்டு மீதும், சுளுக்கு, இரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், இரத்தக்கட்டு, சுளுக்கும் நீங்கும். எலும்புகள் பலமாகும்.



    வாய்ப்புண் நீங்க

    ஆலம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈற்றுப்புண் இவைகள் நீங்கும். இரண புண்களுக்கு இந்த நீரைக் கொண்டு கழுவலாம்.

    பல் பாதுகாப்பு

    ஆலும் வேலும் பல்லுக்குறுதி
    நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி

    என்பது நம் முன்னோர்களின் பழமொழி. ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் நன்கு வலுவுடன் பளிச்சிடும். ஆலம் பால் ஆடும் பற்களை உறுதிப்படுத்தும். பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நீக்கி ஈறுகளை பலப்படுத்தும்
    Last edited by Hega; 15-07-2012 at 11:41 AM.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  5. #53
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சிறிய இடைவேளைக்குப் பின் மலர்களை அறிமுகப்படுத்தி மீண்டும் வசந்தகாலத்துக்கு அழைத்துச் செல்லும் Hega வுக்கு நன்றியும் பாராட்டும்.

  6. #54
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    சங்கக்காலப் பாடல்களில் இடம் பெற்றுள்ள மலர் வகைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.
    என் ஆசையை நிறைவேற்றும் வகையில் அக்கால மலர்வகைகளைப் பற்றிய செய்திகளைப் படங்களுடன் வெளியிட்டு வரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
    தொடருங்கள்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  7. #55
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    நன்றிகள் கீதம் அக்கா, கலையரசி அவர்களே.

    சிறிய இடைவெளியின் பின் மீண்டுமாய் இன்றிலிருந்து இத்திரியை தொடர்ந்திட முயற்சி செய்கிறேன்.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  8. #56
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    அறிய தகவல்கள், கடின உழைப்பு, நல்ல பணி

    தொடருங்கள் ஹேகா

    மிக்க நன்றி
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  9. #57
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    எங்கே நிறுத்திவிட்டீர்களோ என எண்ணினேன், ஆனால் தொடருவது கண்டு மகிழ்கிறேன். பாராட்டும் வாழ்த்தும்.

  10. #58
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    மன்றம் முழுதும் மணக்குது . இந்த மலர்களின் தொகுப்பு ..........கருப்பு வெள்ளை படங்களுடன் ஒரு புத்தக வடிவில் இருந்து இறக்கம் செய்தேன் ஒரு தளத்தில் இருந்து .... ஆனால் வண்ணத்தில் காணும் பொழுது கண்களை கொள்ளை கொள்ளுது மலர்கள் ... நன்றி ஹெகா
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  11. #59
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0
    மிக அருமையான பதிவு! தயவு செய்து தொடருங்கள்..! நன்றி

  12. #60
    இளம் புயல் பண்பட்டவர் seguwera's Avatar
    Join Date
    05 Jan 2011
    Location
    Kumbakonam
    Age
    47
    Posts
    196
    Post Thanks / Like
    iCash Credits
    15,484
    Downloads
    16
    Uploads
    0
    குறிஞ்சிப்பாட்டு மலர்களை மன்றத்தில் அழகாக மலரவிட்டு இருக்கிறீர்கள் அருமை
    சேகுவேரா
    கொடுங்கூற்றுக்கிரையெனப் பின்மாயும் பல
    வேடிக்கை மனிதரைப்போல் நான்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ? ---(பாரதி)


Page 5 of 14 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •