Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: பத்திரமா உன்னிடம்..??

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    பத்திரமா உன்னிடம்..??



    பத்திரமா உன்னிடம்..
    படிப்பாய் என
    நான் தந்த நோட்டுப்புத்தகமும்..
    மடிப்பாய் தந்த எழுத்தோவியமும்...??


    பத்திரமா உன்னிடம்..
    திகைப்பாய்
    நான் தந்த நாணமும்..
    நகைப்பாய் நறும்பிய
    புன்னகையும்...??


    பத்திரமா உன்னிடம்..
    என்றோ நாம்
    ஒன்றாய் பயணித்த
    ரயில் பயணச்சீட்டும்...
    என்றோ தொலைத்துவிட்ட என்
    முதல் தொலைபேசி எண்ணும்..??


    பத்திரமா உன்னிடம்..
    உனக்காய் சேமித்த
    சீர்கொண்ட சிப்பிகளும்..
    எனக்கான நினைவாய்
    நிதம் நினைவுறுத்தும் கைக்கடிகாரமும்...??


    பத்திரமா உன்னிடம்..
    நான் கடைசியாய்
    விட்டு வந்த
    உனக்கான கண்ணீரும்...
    உயிர் கொன்று
    கொடுத்து வந்த
    நமக்கான காதலும்.....????!!!!
    Last edited by பூமகள்; 21-08-2007 at 08:26 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பிரிவின் பின்னரும்
    பிரியாதிருக்கும்
    காதலுக்கு
    பட்டா போடும்
    பத்திரம்
    இந்த பத்திரமா'க்கள்.
    ****************************
    'பத்திரமா'
    ஒரு பாத்திரமாக
    காதல் சொன்ன கவிதை
    பவித்திரம்....!

    பாராட்டுப் பத்திரம்
    படிக்கின்றேன் பூமகளுக்கு.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    பிரிவின் பின்னரும்
    பிரியாதிருக்கும்
    காதலுக்கு
    பட்டா போடும்
    பத்திரம்
    இந்த பத்திரமா'க்கள்.
    ****************************
    'பத்திரமா'
    ஒரு பாத்திரமாக
    காதல் சொன்ன கவிதை
    பவித்திரம்....!
    அருமையான வரிகள் சகோதரரே...
    நன்றிகள் அம*ர் அண்ணா..
    உங்களின்
    பாராட்டுப் பத்திரத்திற்கு
    நன்றி பதிக்கிறாள்
    பூமகள்
    பத்திரமாய் பத்திரத்தில்...
    பவித்திரமாய்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பத்திரமாய் காதல் சரித்திரம் சொல்லும் கச்சிதமாய் வரிகள்.
    சின்னச்சின்ன நினைவூட்டல்களாய், மரணித்த காதலை
    மறுப*டி மனவலியோடு சொல்லும் வாக்கியங்கள்.

    மீண்டுமொரு அழகுணர்வோடு பூமகள் அளித்துள்ள அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் பூமகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பாதுகாத்தல் காதல் அணுக்களின் பணி
    பத்திரப்படுத்துதல் பாதுகாவலனின் கடமை

    அதிரவைக்கும் ஞாபகச் சங்கை ஊதி பத்திரமா என்று எழுத்திலே செதுக்கி வைத்து பாதுகாவலனின் நெஞ்சுக்குள் திணித்த கவிதை. ஒன்றா இரண்டா? ஓராயிரம் ஞாபங்கள் அகத்திலிருக்கும். ஆற்றல் இருந்தால் அனைத்தும் அவளறியக் கூடும்.

    முகவரி தொலைந்தாலும் முகம் தொலைவதில்லை. ஓரிடத்தில் சேமித்து வைத்த கவிதைகளும் அலைவதில்லை. பத்திரப்படுத்திய ஞாபக அலைகள் நெஞ்சைத் தாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அன்றோடு அவள் அழுத வாழ்வுக்கு பத்திரம் சேர்க்காமல் போகிறவன் பாதுகாவலனில்லை.

    நெஞ்சில் சுரந்தால் அது காதல்
    நெஞ்சிலேயே இறந்தால்?

    சூழ்நிலைச் சக்கரங்கள் சுழன்று வந்து நின்றாலும் காலம் சென்ற பாதையை திரும்பிப் பார்க்காதுதானே? வெகு சிலரே பழைய காலங்களைச் சிந்திக்கிறார்கள். இவளூம்.. அவன் சிந்தித்திருக்கக் கூடுமா? பெரும்பாலும் காதலை தற்கொலைக்கு இட்டு புது ஜனனத்திற்கு மாறாமல் இருப்பவர்கள் தான் பழழய காதலை சிந்திப்பார்கள். அல்லது புது ஜனனத்தில் புத்துணர்ச்சியில்லையேல் புதைந்தழுது பத்திரப்படுத்தியதை நெஞ்சில் பத்திரப் படுத்துவார்கள்.

    ஒன்றாய் பயணித்த
    ரயில் பயணச்சீட்டும்...

    பத்திரப்படுத்துதலில் நினைவுகள் வேறு பொருட்கள் வேறு. உயிர் உருக உள்ளம் திருக, நெஞ்சத்தில் மஞ்சமிட்டு துஞ்சிய காதலை பத்திரப்படுத்தாமல் "உயிர் கொன்று கொடுத்து வந்த நமக்கான காதலுமாய்" என்று பாடிக்கொண்டிருக்க

    இங்கே பத்திரப்படுத்தாதது யார்?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    கவிச்சமரில் உதித்த கருவை அப்படியே பத்திரமாக புது வரிகளிலேற்றி இங்கே பதித்த பாங்கு அழகு பூமகள்....!

    வீட்டிலே இருந்து எங்கேயாவது வெளியே புறப்பட்டால் பத்திரமாக போய் வா மகனே எனும் தாய் பாசம்.......
    பாடசாலைகளில் எதாவது விளையாட்டுக்களில் ஈடுபடுகையில் தம்பி பத்திரமாக என்ற ஆசிரியரின் கவனம்......
    எதாவது வம்பு தும்புகளில் மாட்டுகையில் டேய் பத்திரம் என்ற நண்பர்களின் எச்சரிக்கை........
    சிக்கல் சிரமமான விடயங்களில் ஈடுபடுகையில் கவனம், பத்திரமாக என்று கலங்கு அன்பான காதலி/துணைவியின் ஏக்கம்.........

    என்று பல வடிவங்கள் இந்த "பத்திரமாக.." என்ற வார்த்தைக்கு இருப்பினும் எல்லாம் பொதுவாக இயம்பி நிற்பது எதிர்பார்ப்பையும் அது இனிதே நடைபெற வேண்டுமென்ற நம்பிக்கையையுமே......

    அந்த நம்பிக்கை தான் காதலின் அஸ்திவாரமே, அந்த அஸ்திவாரம் ஆடிப்போனால் காதல் எனும் கட்டிடத்தை கட்டியெழுப்ப இயலாது.......!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பத்திரமா உன்னிடம்.....

    விடை கிடைத்ததா... சின்ன சின்ன நிகழ்வுகள் கோர்த்து பத்திரமாய் பார்த்து பார்த்து கட்டின கவிதை.. பூமகள்.. வாழ்த்துக்கள்! (படம் ரொம்ப சூப்பர்ங்க)
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஓவியன் View Post


    பல வடிவங்கள் இந்த "பத்திரமாக.." என்ற வார்த்தைக்கு இருப்பினும் எல்லாம் பொதுவாக இயம்பி நிற்பது எதிர்பார்ப்பையும் அது இனிதே நடைபெற வேண்டுமென்ற நம்பிக்கையையுமே......

    அந்த நம்பிக்கை தான் காதலின் அஸ்திவாரமே, அந்த அஸ்திவாரம் ஆடிப்போனால் காதல் எனும் கட்டிடத்தை கட்டியெழுப்ப இயலாது.......!
    அஸ்திவாரம் ஆக்கியவனே, ஆட்டிவிட்டு போனால் ஆடித்தானே போகும் பெண்ணின் உள்ளம்.. அதுவே இக்கவியின் கரு.. நியாபகப்படுத்தும் பாணியில் காதலி காதலனிடம் பத்திரப்படுத்தியுள்ளாயா நம் நினைவுகளை என்று கேட்பதாக எழுதியுள்ளேன்.

    அழகாகப் புரிந்து தெளிவாக விமர்சித்ததற்கு நன்றிகள் கோடி.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    பத்திரமாய் காதல் சரித்திரம் சொல்லும் கச்சிதமாய் வரிகள்.
    சின்னச்சின்ன நினைவூட்டல்களாய், மரணித்த காதலை
    மறுபடி மனவலியோடு சொல்லும் வாக்கியங்கள்.

    மீண்டுமொரு அழகுணர்வோடு பூமகள் அளித்துள்ள அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் பூமகள்.
    அன்புச் சகோதரர் சிவா.ஜி அவர்களின் பாராட்டுதலுக்கு நன்றிகள்.
    மரணித்த காதல் ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் காதலியின் நிலையே இது.

    தொடர்ந்து விமர்சியுங்கள்..!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post
    பாதுகாத்தல் காதல் அணுக்களின் பணி
    பத்திரப்படுத்துதல் பாதுகாவலனின் கடமை

    முகவரி தொலைந்தாலும் முகம் தொலைவதில்லை. ஓரிடத்தில் சேமித்து வைத்த கவிதைகளும் அலைவதில்லை. பத்திரப்படுத்திய ஞாபக அலைகள் நெஞ்சைத் தாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அன்றோடு அவள் அழுத வாழ்வுக்கு பத்திரம் சேர்க்காமல் போகிறவன் பாதுகாவலனில்லை.

    நெஞ்சில் சுரந்தால் அது காதல்
    நெஞ்சிலேயே இறந்தால்?

    ஒன்றாய் பயணித்த
    ரயில் பயணச்சீட்டும்...

    பத்திரப்படுத்துதலில் நினைவுகள் வேறு பொருட்கள் வேறு. உயிர் உருக உள்ளம் திருக, நெஞ்சத்தில் மஞ்சமிட்டு துஞ்சிய காதலை பத்திரப்படுத்தாமல் "உயிர் கொன்று கொடுத்து வந்த நமக்கான காதலுமாய்" என்று பாடிக்கொண்டிருக்க

    இங்கே பத்திரப்படுத்தாதது யார்?
    அன்புத் தம்பி ஆதவா அவர்களே...

    ஆழமாய்ச் சிந்தித்து கவித்துவத்தோடே விமர்சித்ததற்கு எங்ஙனம் நான் நன்றி சொல்வேன்.... !!!!!! அசத்திவிட்டீர்கள்...


    பத்திரப்படுத்துதலில் நினைவுகள் வேறு பொருட்கள் வேறு.
    பத்திரப் படுத்திய பொருட்களே நினைவுச் சங்கிலிகளை கோர்த்துத் நியாபகப்படுத்தும் சாவி.

    ஆகையால் தான் பயணச் சீட்டை பத்திரமா என்று வினவினேன்.

    இங்கே பத்திரப்படுத்தாதது யார்?
    இங்கே... பத்திரப்படுத்தாமல் தம் காதலைத் தொலையச் செய்து போவது காதலனே....

    பத்திரப்படுத்திய நினைவுகளிலே காதலி மட்டும் தனியாய்...
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    பத்திரமா உன்னிடம்.....

    விடை கிடைத்ததா... சின்ன சின்ன நிகழ்வுகள் கோர்த்து பத்திரமாய் பார்த்து பார்த்து கட்டின கவிதை.. பூமகள்.. வாழ்த்துக்கள்! (படம் ரொம்ப சூப்பர்ங்க)

    விடை தேடி அலைவதே வாழ்க்கை... விடை கிடைக்கா சோகத்தில் காதலி..
    விடை கிடைக்க மேலுள்ள திரி பார்க்கவும்.
    தங்களின் பாராட்டுதலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் கோடி..!

    தொடர்ந்து விமர்சியுங்கள்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #12
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    அழகான கவிதை பத்திரமாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •