Results 1 to 5 of 5

Thread: பெயர்க் குழப்பம்....

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0

    பெயர்க் குழப்பம்....

    கிழமை & நேரம் : ஞாயிறு காலை 11 மணி

    "படாரென்று கதவை அடித்தவாறேஅவரது வீட்டிற்கு உள்ளே வந்தார் மேனேஜர் கணேஷ். என்னய்யா ஆளுங்க இவங்க. அடுத்த மாசம் வேலைய முடிக்கணும்; இவ்வளவு மெதுவா வேலை செய்யறாங்க. இருக்கட்டும், சொன்ன நேரத்துல டெலிவரி ஆகல, இவங்க போனஸ்ல கைய வச்சிடறேன். அப்பத்தான் புத்தி வரும்", சே! என்று சீறியவாறே கைபேசியை எடுத்தார்.

    அப்போது அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. "டேய் மச்சி. வாடா டீ குடிச்சிட்டு வரலாம்",என்று அவருக்கு கீழே வேலை செய்யும் ரமேஷ் அனுப்பியிருந்தார். மேனேஜரோ கோபப்பட இடம் வைக்காமல், உடனே அடுத்த குறுஞ்செய்தி அவரிடமிருந்தே வந்தது, "மன்னிக்கவும், என் நண்பன் கணேஷ்க்கு அனுப்பறதுக்கு பதிலா, உங்களுக்கு அனுப்பிட்டேன்".

    கைபேசியை கீழே வைத்து விட்டு வளர்பிறை நிலவாய் கோபம் அடைய ஆரம்பித்தார்.கோபமது பௌர்ணமியாக மாறிய உடன் மீண்டும்
    கை பேசியை எடுத்து ரமேஷுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.

    கணேஷ்: உனக்கு கண்ணும் இல்லை. நிச்சயம் நீ செய்யும் வேலையில் கவனமும் இருக்காது.

    ரமேஷ்: நான் எந்த தவறும் செய்யவில்லையே..

    கணேஷ் : என்னிடமே பொய் பேசுகிறாயா? உனக்கு போனஸ் கிடையாது.

    ரமேஷ் : நான் தான் பொய் பேசவில்லையே...

    கணேஷ் : அகம்பாவம் பிடித்தவனே உனக்கு இன்க்ரிமென்ட் கிடையாது...

    ரமேஷ் : அனால் நான் மிகவும் பணிவுடன் தானே பேசுகிறேன்...

    கணேஷ் : நான் நினைத்தால் உனக்கு வேலையே இல்லாமல் செய்து விடுவேன்...

    ரமேஷ் : மன்னிக்கவும். அந்த அளவுக்கு உங்களை கோபப்படுத்தும் விதமாக நான் ஒன்றும் செய்யவில்லையே..

    கணேஷ் : ஒன்றும் செய்யவில்லையா? எவ்வளவு தைரியம் இருந்தால், வேறொரு கணேஷுக்கு பதில், எனக்கு குறுஞ்செய்தி அனுப்புவாய்? செய்யும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், இவ்வாறு உன் நண்பன் கணேஷுக்கு பதில் எனக்கு அனுப்புவாயா? ஒரு குறுஞ்செய்தி கூட உருப்படியாக அனுப்பத் தெரியாத உனக்கெல்லாம் எதுக்கு வேலை? பேசாமல் வேலையை விட்டு விட்டு போய் விடு ரமேஷ்...

    ரமேஷ்: முட்டாள்! நான் உன் சீனியர் மேனேஜர் ரமேஷ். முதலில் ஒழுக்கமாக நீ உன் ஜூனியர் ரமேஷுக்கு செய்தி அனுப்பு....

    கணேஷ்: ???!!!??? (கோபம் பௌர்ணமியிலிருந்து அமாவசையாய் மாறி விட்டது!!!)
    Last edited by arun karthik; 07-09-2013 at 07:19 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •