சபையோர்க்கு வணக்கம்.

என் பெயர் இருங்கோவேள். அ. போ.

பொருநை நதிக்கரையோரம் பிறந்து, வைகை நதிக்கரையோரம் கல்வி பயின்று 1986 முதல் வங்கக்கரையோரம் - சென்னையம்பதியில் வாழ்ந்து வருகிறேன்.

தற்போது சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் மருத்துவ சமூகவியலாளராக, நோயாளிகள் கல்வி மற்று ஆலோசனை - மேலாளராக பணியாற்றி வருகிறேன்.

ஆர்வம் காரணமாக, சமூகவியல், உளவியல், மருத்துவமனை மேலாண்மை, தமிழ் இலக்கியம் போன்ற துறைகளில் முதுகலை பட்டமும், ஆய்வியல் பட்டமும் பெற்றுள்ளேன்.

தினமணி, தினமலர், ஆனந்த விகடன், குமுதம், அமுதசுரபி, தி ஹிந்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், போன்ற இதழ்களில் சில பல படைப்புகள் எழுதியுள்ளேன்.

தமிழ் மன்றத்தின் செயல்பாடுகளில் மனம் லயித்து இதோ உங்களோடு அவ்வப்போது உரையாட உறவாட வருகிறேன்.

வணக்கத்துடனும், வாழ்த்துக்களுடனும்,

அன்பன்
அ போ இருங்கோவேள்