கண்ணீர் அஞ்சலி
****************

ஏன் இந்தக் கொடுமையை ஆண்டவன் எங்களுக்கு அளித்தான்....,
பிரிவு என்பதின் சோகம் என்னயென்பதை இன்றே உணர்ந்தோம்....,
நீ எங்களுடன் இருந்தபொழுது கண்ணீரை தந்தாலும்...,
அந்தக் கண்ணீரிலும் சுகம் இருந்தது....,
இன்றோ..,
எங்களை ஆழ்ந்த துயரில் ஆழ்த்திவிட்டு...,
எங்களைவிட்டு எங்கோ சென்றுவிட்டாய்...,
நீ மறைந்ததால் ,உண்ணும் உணவுக்கூட விஷம் ஆனது....எங்களுக்கு,
உறக்கத்தில்கூட உன் நினைவே....,
உன்னுடன் வாழ்ந்த நாட்களைப் பொற்காலம் என்றே எண்ணுகிறோம்..,
மீண்டும் எங்களுடன்,நீ வாழும் காலத்தை இறைவன் தருவானா?
நினைக்கும் சக்தியை தந்த இறைவன்....,
உன்னை மறக்கும் சக்தியை எங்களுக்கு அளிக்கவில்லையே...,
நீ பிரிந்தாலும்............,
என்றும் உன் நினைவில்.....நாங்கள்....இருக்கின்றோம்...,
எங்கள் பாசத்திற்குரிய "வெங்காயமே"...


என்றும் உன் நினைவால் வாடும்:-
தமிழக மக்கள்...