கண்ணிரிலே வாழ்கிறேன்
கனவாகிப் போனவனே உன்னை நினைத்து
மரணத்தில் உன்னை மறக்கலாம் என நினைத்தேன்
என்னைக் கொல்ல எனக்கு துணிவில்லை
தூக்கத்தில் உன்னை மறக்கலாம் என நினைத்தேன்
உன்னோடு கைகோர்த்து திரிந்த
காலங்கள் கனவில் வந்தது
தோற்றாலும் விருப்பப் படும் இந்த
தெய்வீக காதலை மறப்பதெப்படி
சிலுவைகளாய் உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
நான் உயிரோடு இறந்து விட்டேன்
Bookmarks