Results 1 to 10 of 10

Thread: இனியும் எனக்கு வலுவில்லை..!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0

    இனியும் எனக்கு வலுவில்லை..!


    என் மனதை ஊடுருவும்
    உன் உணர்வுகள்...
    எனக்கு உறவாகிப் போகுமா?
    என் மனதை தடுமாற்றும்
    உன் நினைவுகள்...
    எனக்குள் உயிரூற்றிப் போகுமா?

    உன் விழி
    தாக்கும் சக்தி தாங்க,
    இனியும் எனக்கு வலுவில்லை...

    அன்பே சொல்லிவிடு..!

    உன் தோள் கொடுப்பாயா..?
    எனக்கு..,
    நான் சாய்ந்துகொண்டு
    கதறி அழ..!
    அல்லது,
    உன் மடி தருவாயா..?
    எனக்கு..,
    நான் நிரந்தரமாய்
    உறங்கி விட...
    Last edited by அக்னி; 19-10-2007 at 11:11 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    மனதில் உள்ள சோகத்தை கவிதை மட்டுமல்ல பின்னணி படம் கூட, அழகாக எடுத்துக்காட்டுகிறது.வாழ்த்துக்கள்
    Last edited by இணைய நண்பன்; 08-06-2007 at 07:35 PM.
    இணையத்தில் ஒரு தோழன்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    என் மனதை ஊடுருவும்
    உன் உணர்வுகள்...
    எனக்கு உறவாகிப் போகுமா?
    என் மனதை தடுமாற்றும்
    உன் நினைவுகள்...
    எனக்குள் உயிரூற்றிப் போகுமா?

    மனதை தடுமாற்றும் நினைவுகளைக் கொண்டு உயிர்ரூட்டச்சொன்ன நீங்கள்
    உன் மடி தருவாயா..?
    எனக்கு..,
    நான் நிரந்தரமாய்
    உறங்கி விட...

    கடைசியில் நிரந்தர உறக்கத்தை விரும்பியது ஏனோ? மடி கிடைத்த சந்தோஷத்திலா? உணர்வுகளை சொன்ன வித்ம் அருமை அக்னி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    என் மனதை ஊடுருவும்
    உன் உணர்வுகள்...
    எனக்கு உறவாகிப் போகுமா?
    என் மனதை தடுமாற்றும்
    உன் நினைவுகள்...
    எனக்குள் உயிரூற்றிப் போகுமா?

    உன் விழி
    தாக்கும் சக்தி தாங்க,
    இனியும் எனக்கு வலுவில்லை...

    அன்பே சொல்லிவிடு..!

    உன் தோள் கொடுப்பாயா..?
    எனக்கு..,
    நான் சாய்ந்துகொண்டு
    கதறி அழ..!
    அல்லது,
    உன் மடி தருவாயா..?
    எனக்கு..,
    நான் நிரந்தரமாய்
    உறங்கி விட...

    ஏதோ லாஜிக் உதைக்கிற மாதிரி இல்ல?.. அக்னி.. மென்மையாக படைத்திருக்கிறீர்கள். அதென்ன நிரந்தர உறக்கம்? இறப்பா? இல்லை வேறொன்றா?

    முதல் பாரா வரிகள் பிரமாதம். அடுத்தடுத்து ஏற மறுத்து இறங்கியதைப் போன்ற உணர்வு.. வாழ்த்துக்கள் அக்னி. காதலில் இந்த அளவுக்கு சொல்லக்கூட தகுதியின்றி வாழ்த்து மட்டுமே சொல்லி மறையும்

    ஆதவன்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    என் மனதை ஊடுருவும்
    உன் உணர்வுகள்...
    எனக்கு உறவாகிப் போகுமா?
    என் மனதை தடுமாற்றும்
    உன் நினைவுகள்...
    எனக்குள் உயிரூற்றிப் போகுமா?

    உன் விழி
    தாக்கும் சக்தி தாங்க,
    இனியும் எனக்கு வலுவில்லை...

    அன்பே சொல்லிவிடு..!

    உன் தோள் கொடுப்பாயா..?
    எனக்கு..,
    நான் சாய்ந்துகொண்டு
    கதறி அழ..!
    அல்லது,
    உன் மடி தருவாயா..?
    எனக்கு..,
    நான் நிரந்தரமாய்
    உறங்கி விட...
    உணர்வுகளால் உயிரூட்ட மறுத்ததால்
    அவர் உணர்வுகளில் அவள்
    உறவெனக்கலந்ததால்
    வாழ்வதற்கு மனசைத்தான் தரவில்லை
    வீழ்வதற்கு மடியையாவது தா


    என்று காதலைக் கேட்கின்றாரோ.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    உணர்வுகள் உயிரைதரவும் தயங்காது
    உணர்சியின் உச்சகட்டம் இது அருமை நண்பரே
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #7
    புதியவர் பண்பட்டவர் sreeram's Avatar
    Join Date
    07 Jun 2007
    Posts
    34
    Post Thanks / Like
    iCash Credits
    9,011
    Downloads
    7
    Uploads
    0
    என் மனதை ஊடுருவும்
    உன் உணர்வுகள்...
    எனக்கு உறவாகிப் போகுமா?

    ----- இங்கே உணர்வுகளே உறவாகிப் போவது புதுமை...அழகான கற்பனை....

    என் மனதை தடுமாற்றும்
    உன் நினைவுகள்...
    எனக்குள் உயிரூற்றிப் போகுமா?

    --------------- நினைவுகள் உயிர் ஊற்றுவதா....? போனமுறை உணர்வுகளே உறவென்றீர். இப்பொழுது நினைவுகள் உயிர்...? -----

    உன் விழி
    தாக்கும் சக்தி தாங்க,
    இனியும் எனக்கு வலுவில்லை...

    அன்பே சொல்லிவிடு..!

    --------- என்ன சொல்ல...? ஐ லவ் யூ ... என்றா....? ----

    உன் தோள் கொடுப்பாயா..?
    எனக்கு..,
    ------------- உங்களால அந்தக் கணத்தைத் தாங்க முடியுமா...? ஏன்னா விழி தாக்கும் சக்தியையே தாங்க முடியாதவர் அவ்ளோ பெரிய தோளை எப்படித்தான் தாங்குவீர்....? --------

    நான் சாய்ந்துகொண்டு
    கதறி அழ..!
    --------------ஆம் தோளின் வல்லிய கணத்தால் அழுகின்றீரோ....?----

    அல்லது,
    உன் மடி தருவாயா..?
    எனக்கு..,
    நான் நிரந்தரமாய்
    உறங்கி விட...

    ---- ஏன் அவ்வளவு பயம்....? உங்கள் காதலி இனிமையானவள் இல்லையா....? இல்லையென்றால் வேறு ஒரு நல்ல காதலியைத் தேடலாமே...? நம்பிக்கையோடிருங்கள்... நாளை நமதே.....! -------

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    காதலியின் வார்த்தைகளுக்கு ஏங்கும் காதலனின் வரிகள் அருமை...

    ஆதவனின் பாணியில் எனக்கும் ஏதோ லாஜிக் உதைக்கிற மாதிரி இருக்கே.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பேனா கண்டுபிடித்த பிறகும்
    இன்னும் விழிகளால் எழுதுபவள் பெண்

    பா.விஜய் வரிகள் இவை.

    விழியீர்ப்பு சக்தியின் வீரியம் பற்றி
    விலாவரியாய்ச் சொன்னவர் தபூசங்கர்..

    மன்றத்தில் அக்னியின் இக்கவிதையிலும்
    அத்தகைய காதல் ஆழம் தெறிக்கிறது..

    சக்தி தருவதும் சக்தி எடுப்பதுமான
    சதிராட்டம் ஆடும் பாவை விழிகளால்
    குழைந்த கவியின் வரிகளில் லாஜிக்
    குலைந்ததுபோல் தோன்றாமல் இருந்தால்தான்
    குறையே!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    விமர்சனங்களில் என்னைப் புடம்போட்ட அனைத்து உறவுகளுக்கும்,
    நன்றிகள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •