துயர் என்னைத்
துகிலூரிக்கும் வேளையில்
மலர்ந்த உன் முகம் பார்க்க
மறைந்து விடுகிறது
அத்தனையும் காயங்கள்
பாரமாய் கணக்கின்ற போது
உன் சிலிர் சிரிப்பில்
சிதறிவிடுகின்றது அத்தனையும்
பொதிகை மலைதனில்
தவழ்ந்த தென்றலை போன்ற
நம் நினைவுகள்
வாழ்க்கை ஓட்டத்தில்
மெல்ல மெல்ல
மறைந்து விடுமா,,,,
உன்னால் முடியுமானால்
Bookmarks