மனதில் உள்ள கவலைகள் எல்லாம்
என்னை விட்டு சென்றன உன்னால்
என்னை விட்டு சென்ற சந்தோஷங்கள் எல்லம்
என்னை கை நீட்டி அழைத்தன உன்னால்
நான் வாழ்ந்து கொண்டு இருப்பதும் உன்னால்
அனுஅனுவாய் இறந்து கொண்டு இருப்பதும் உன்னால்
நீ என்னை விட்டு சென்றதும்
கை நீட்டி அழைத்த சந்தோஷங்கள்
கை கொட்டி சிரிக்கின்றன
என் இயலாமையை நினைத்து
என்னை விட்டு சென்ற கவலைகள் எல்லாம்
புயல் வேகத்தில் என் மனதில்
வந்து குடி கொண்டு விட்டன
என் வாழ்வே ஒரு வேதனை
அதில் உயிர் வாழ்வது என்பது
வேதனையிலும் வேதனை
Bookmarks