Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: குயவனை வனையும் வாழ்க்கை சக்கரம்!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1

    குயவனை வனையும் வாழ்க்கை சக்கரம்!

    குனிஞ்சி, நிமிர்ந்து
    இடுப்பு நோவ -நான்
    வனஞ்சி வார்த்த,
    அடுப்பும், பானைங்களும்,

    நேத்தடிச்ச பேய் புயலில்
    காத்தடிச்சு உடைஞ்சி போச்சே!

    சேதாரத்துல சிக்காம,
    செவத்தோரத்துல இருந்த,
    மிச்சமீதி பானைங்கள,
    பச்ச தண்ணி பருகாம,

    சந்தைக்கு தூக்கிட்டு ஓடினேன்!
    வந்த வெலைக்கு தள்ளிடலாம்னு!
    சந்தையில வியாபாரமில்ல..
    எங்கையில ஒரூவாயுமில்ல....

    இன்னிக்கோ, நாளக்கோன்னு,
    மவராசனை வயித்துல சொமந்துகிட்டு -என்
    மவராசி வந்திருக்கா தாய்வூடு!

    மவராசிய பார்க்க -எம்
    மருமவனும் வந்திருக்கான்!

    வரச்சொல்லோ,
    சந்தையில நாட்டுகோழியும்,
    கந்தசாமி கடையில
    ரெண்டு கிலோ அரிசியும்,

    வாங்கிட்டு வாங்கன்னு,
    பொஞ்சாதி சொன்னது,
    நெஞ்சுக்குள்ள நின்னது!

    கண்ணுல பொசுக்குன்னு
    தண்ணி எட்டி பார்க்குது!
    பத்துரூவா கடன்வாங்க கூட
    பக்கத்தூருதான் போவனும்!

    என் குல சாமி!
    எனக்கொரு வழி காமி!

    கொக் கொக் கொக்
    கொக்கரக்கோ...
    கொக் கொக் கொக்
    கொக்கரக்கோ...

    நடுரோட்டுல ஓடிட்டிருந்துச்சி
    நாட்டு கோழி ஒன்னு!
    கத்தி ஓடுற கோழியத்தவிர,
    சுத்தி பார்த்தா யாருமில்ல!

    மனசில பாரம் இறங்கிபோச்சி
    பயம் மனசோரம் ஏறிப்போச்சி

    வழிஞ்ச வேர்வைய,
    கிழிஞ்ச துண்டால தொடச்சிவுட்டு,
    கந்தசாமி கடைக்கு நடந்தேன்!

    அரிசி மட்டும் கடன்
    சொல்லிக்கலாம்னு.....
    Last edited by ஷீ-நிசி; 06-06-2007 at 02:47 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஒமனில் புயலடித்ததும் ஷீயின் கவிதை பிறந்துவிட்டது. அழகான,எளிமையான வார்த்தைகள்.எதார்த்தமான வரிகள்.
    என் குல சாமி!
    எனக்கொரு வழி காமி!

    இயல்பாய் வரும் வேண்டுதல். வேண்டி முடித்ததும் கொக்கரக்கோவென கண் முன்னால்....பிள்ளை சுமக்கும் மகளுக்கும் கூட வந்திருக்கும் மருமகனுக்கும் ஆசையாய் ஆக்கிப்போட அரிசி மட்டும் கடனில்.மண்வாசனையோடு ஒரு கவிதை. மிக அழகு ஷீ. பாராட்டுக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்கு ரசித்து விமர்சித்திருக்கிறீர்கள். நன்றி சிவா..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    கிராம களத்தில் வறுமை மண் எடுத்து, பாச நீர் விட்டு குழைத்து ஷீ-நிசி என்ற குயவர் செய்த அழகான பானை இந்த கவிதை. கவிதையின் எளிமையும், வரிகளின் உள் பொதிந்த பொருளும் இந்த கவிதையை மேலே மேலே உயர்த்துகின்றன. அதுவும் கடைசி வரியில் அமைந்துள்ள உள் பொதிந்த முடிவு அனைவருக்கும் புரியுமா என்று தெரியவில்லை. அதை நீங்கள் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கலாம்.
    கொக்கரக்கோ கும்மாங்கோ தெரிந்த நம் மக்களுக்கு உங்களின்
    கொக் கொக் கொக்
    கொக்கரக்கோ...
    கொக் கொக் கொக்
    கொக்கரக்கோ...

    பிடித்திருக்க வேண்டுமென்பது என் அவா..!
    அன்புடன்,
    இதயம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி இதயம்... நிச்சயம் அனைவருக்குமே புரியும் என்று நம்புகிறேன்....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஒரு குயவனின் வாழ்க்கைப் போராட்டம் என்பதை மேற்கோள்காட்டி, அன்றாடம் தொழில் செய்து பிழைப்பவனின் வாழ்வைப் படம் பிடித்திருக்கிறீர்கள்...

    பெண் கருத்தரித்துவிட்டால், பிள்ளைப்பேற்றுக்கு தாய்வீடு அனுப்புவது தாய்மையடையும் பெண்ணுக்கு சிறந்த கவனிப்புக் கிடைப்பதற்காகவே...

    ஆனால், பெண்வீட்டாரின் குடும்பநிலையக் கருத்தில் கொள்ளாமல், வாட்டி வதைக்கக் கூடாது. அவர்களுடன் மருமகன்களும் ஒத்தாசையாக இருந்தால் நெருக்குதல்கள் வரா...

    அப்படியில்லாமல், மாமனார் வீட்டில் கால் மேல் கால் போட்டு மட்டும் இருந்தால், நல்ல மாமனாரும் இயலாத இடத்தில் தவறாக போயிடுவர் என்பதை கருப்படுத்தியிருக்கிறீர்கள்...

    நடுரோட்டுல ஓடிட்டிருந்துச்சி
    நாட்டு கோழி ஒன்னு!
    கத்தி ஓடுற கோழியத்தவிர,
    சுத்தி பார்த்தா யாருமில்ல!
    இயற்கை, கடவுள், அரசுகள் என்று எல்லோரும் ஏழைகளைச் சோதித்தால், என்செய்வது...?

    பாராட்டுக்கள் ஷீ-நிசி...
    Last edited by அக்னி; 06-06-2007 at 09:45 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அருமையான விமர்சனம்... நன்றி அக்னி....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    கவிதை வாசித்து அனுபவிப்பது ஒரு அருமையான விசயம்..

    மனம் கவிதையை வாசித்து லயிக்க விரும்பும் தருனங்களில் மறைமுகமாக வார்த்தைகளை கொடுக்கும் போது அதை அர்த்தபடுத்தி புரிந்து கொள்வதில் ஒரு சுகம்.

    புதுக்கவிதைகளின் வெற்றி என்பது காட்சியை அப்படியே அந்த கதாபாத்திரத்தின் இடத்தில் இருந்து சொல்லும் போது , அதை வாசிப்பவனும் அதை அவன் இடத்தில் இருந்து வாசிக்க கடைசி வரிகள் வந்ததும் , மீண்டும் ஒரு முறை கவிதையை வாசிக்க கண்கள் மீண்டும் முதல் வரிகளை தேடும்.

    ஷீ...
    உங்கள் கவிதையை வாசிக்கும் போது அப்படியே ஒரு குயவனின் இடத்தில் இருந்து வாசித்த ஒரு உணர்வு.

    நேற்றிய மழை...
    மகள் பிரசவம்
    மருமகன் விருந்து..
    வியபாரமில்லை
    பணசிக்கல்..
    தேவைகள்
    இயலாமை
    தவறிழைக்கிறான்..
    அருமையாக கொண்டு செல்லபடும் கவிதை ... ஒரு சாதாரன மனிதனிம் மனநிலமையை அப்படியே படம் பிடித்து காட்டி இருக்கிறிர்கள்...

    ஆனாலும்....
    தவறு செய்பவர்கள் தன் தேவைகளை பூர்த்தி செய்ய முன் வைக்கும் நியாயங்கள் சரியா....
    யாருக்கும் தெரியாமல் செய்தால் தவறில்லை என்பது சரியா..???
    அவன் தவறு நியாயபடுத்த படவில்லையே???
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    கவிதை ஏழையின் சிரிப்பை இயல்பாய் காட்டுகிறது ஷீ
    தவறுநேர செய்யும் தருனங்கள் படமாக்கப்பட்டுள்ளது
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post

    ஆனால், பெண்வீட்டாரின் குடும்பநிலையக் கருத்தில் கொள்ளாமல், வாட்டி வதைக்கக் கூடாது. அவர்களுடன் மருமகன்களும் ஒத்தாசையாக இருந்தால் நெருக்குதல்கள் வரா...

    அப்படியில்லாமல், மாமனார் வீட்டில் கால் மேல் கால் போட்டு மட்டும் இருந்தால், நல்ல மாமனாரும் இயலாத இடத்தில் தவறாக போயிடுவர் என்பதை கருப்படுத்தியிருக்கிறீர்கள்...
    ஐயா, மகள் வாயும் வயிருமாய் வீட்டில் இருந்தால் அவளுக்கு நாட்டு கோழி ஆக்கி போது கிராமத்தில் உள்ள மாத்த முடியாத பழக்கம்
    மனையாளை பார்க்க கனவன் வருவதும் இயல்பல்லவா,
    கடனை வாங்கியாவது மருமகனுக்கு கோழி ஆக்கி போடுவது ஒரு பழக்கம்
    அதே மகளை பார்க்க மருமகன் வீட்டுக்கு போனால் சம்மந்தி வீட்டார்
    கோழி மட்டுமல்ல சாராயமும் வாங்கி தந்து உபசரிப்பார் கிராமங்களிலே.

    ஷிநிசி விளக்குவது ஏழ்மையிலும் விருந்தோம்பல் மகிமையை பற்றி தானே
    நீங்கள் பாவம் மருமகனை ஏசுகிறீர்களே. அப்படி அவர் யாரையும் திட்ட வில்லையே
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பென்ஸ் உங்களின் ஆழ்ந்த விமர்சனங்கள் என்றுமே எனக்கு உற்சாக டானிக்..

    அவன் தவறு என்றைக்குமே நியாயபடுத்தமுடியாதுதான்...

    போகிற வழியில் 500 ரூபாய் நோட்டு கத்தையாக இருக்கிறது.. சுற்றிலும் யாருமே இல்லை.. எடுத்து பாக்கெட்டில் வைப்பவர் 99% பேர்... காவல் நிலையம் செல்பவர் 1% பேர்... காவல் நிலையம் சென்றாலும் அவர்கள் தானே பங்கிட்டுக்கொள்ளப்போகிறார்கள் என்று பலவாறு காரணமிட்டு பணத்தை சொந்தமாக்கிகொள்ளும் ஒவொருவருமே அந்த 99% அடங்குவர்..

    எவ்வித தேவையுமின்றிம் எதிர்பார்ப்புமின்றி வழியில் கிடைத்ததை அடைய நினைக்கும் உலகில், தேவைகளும், எதிர்பார்ப்புகளும் நெருக்க அந்த குயவன் அந்த செயலை செய்ய ஏற்படுத்தின சூழ்நிலை தான் அவனின் தவறுக்கு முழுக்காரணமும்.

    நன்றி பென்ஸ்.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    ஐயா, மகள் வாயும் வயிருமாய் வீட்டில் இருந்தால் அவளுக்கு நாட்டு கோழி ஆக்கி போது கிராமத்தில் உள்ள மாத்த முடியாத பழக்கம்
    மனையாளை பார்க்க கனவன் வருவதும் இயல்பல்லவா,
    கடனை வாங்கியாவது மருமகனுக்கு கோழி ஆக்கி போடுவது ஒரு பழக்கம்
    அதே மகளை பார்க்க மருமகன் வீட்டுக்கு போனால் சம்மந்தி வீட்டார்
    கோழி மட்டுமல்ல சாராயமும் வாங்கி தந்து உபசரிப்பார் கிராமங்களிலே.

    ஷிநிசி விளக்குவது ஏழ்மையிலும் விருந்தோம்பல் மகிமையை பற்றி தானே
    நீங்கள் பாவம் மருமகனை ஏசுகிறீர்களே. அப்படி அவர் யாரையும் திட்ட வில்லையே
    அடடா... கலக்கலா சொல்லிட்டீங்க வாத்யாரே.. கவிதை ஒவ்வொருவரின் மனதிலும் பயணித்து அவர்கள் தருகிற புதுப்புது கரு ஒவ்வொன்றுமே அருமையாக இருக்கிறது..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •