சாம்பலும் சிவனும்...
ஏகாந்த இரவுகளில்
பற்றியெழுந்த தீ
சிவனைப் பற்றி
பிறிதொரு பொழுதில்
அவன் உடலையும் பற்றியதால்..
உடுக்கையடித்து
ஆட ஆரம்பித்தான்
தாண்டவத்தை
இடுகாட்டில்..
தாண்டவமாடி..
தாவிக் குதிக்க..
கண்ணில் வந்து விழுந்தது
எரிந்து கொண்டிருந்த
பிணத்தின்
நெருப்புப் பொறி...
கனநொடி கலங்கினாலும்
தாளம் தப்பாது
தொடர்ந்தது தாண்டவம்
மாத்திரம்..
எரிந்த பிணம்
சாம்பலாகி
சாம்பலும் பறந்து வந்து
நெற்றியில் இருந்த
கண்ணில் விழும் வரை
தொடரத்தான் செய்தது
ஆட்டமும் குதித்தலும்...
சாம்பல் தூசானாலும்
விழுந்தது
நெற்றிக் கண்ணில்...
சாம்பலை பொசுக்கவா..
இல்லை
ஆட்டத்தை நிறுத்தவா?
Bookmarks