_________________________________________________
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவா
http://eswaramoorthy.webs.com
http://shivasevagan.blogspot.com
தகவலுக்கு நன்றி
நன்றி நண்பரே! தொடர்ந்து படியுங்கள்.
_________________________________________________
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவா
http://eswaramoorthy.webs.com
http://shivasevagan.blogspot.com
(2) 'பெளத்தர்' அல்லர்பெளத்தர், ஞானத்தின் வேறாய்க் கடவுளின் றென்றும், ஞானமே ஆன்மாவென்றுங் கூறுவர்; அவர்கள் பதமுத்திகளுண்டெனக் கொள்வதில்லை. திருவள்ளுவ தேவர்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
என்னுந் திருக்குறள்களால் ஞானத்தின் வேறாய்க் கடவுளுண்டென்றும்,
_________________________________________________
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவா
http://eswaramoorthy.webs.com
http://shivasevagan.blogspot.com
அறிதோறு அறியாமை கண்டற்றாற் காமஞ்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு. 1110
என்னுந் திருக்குறளால் ஞானத்தின் வேறாய் ஆன்மா வுண்டென்றும்,
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. 1103
என்னுந் திருக்குறளால் பதமுத்தித் தானங்களாகிய மேலுலகங்களுண்டென்றும் கூறுவதனால், திருவள்ளுவ தேவர் 'பெளத்தர்' அல்லர்.
_________________________________________________
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவா
http://eswaramoorthy.webs.com
http://shivasevagan.blogspot.com
(அ) 'மாத்தியமிகர் (சூனியவாதி)' அல்லர்மாத்தியமிகர் உலகத்துப் பொருள்கள் அகப்பொருள் புறப்பொருள் என இருதிறப்படுமென்றும், அவ்விரு திறப்பொருள்களும் உள்ளவும், இல்லவும், உள்ளவுமில்லவும், இரண்டு மல்லவுமாகிய நான்குமில்லை யாகலான் சூனியமென்றும், மயக்கத்தால் உள்ளனபோல் தோன்றுகின்றன வென்றுங் கூறுவர். நாயனார் தமது வாயுறை வாழ்த்தில்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
என்ற முதற்றிருக்குறளாலேயே உலகு உண்டென்றும், அதற்கு ஒரு முதல் உண்டென்றும் உடம்படுகின்றதனால் சூனியவாதியாகிய 'மாத்தியமிகர்' அல்லர்.
_________________________________________________
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவா
http://eswaramoorthy.webs.com
http://shivasevagan.blogspot.com
(ஆ) 'யோகாசாரர் (விஞ்ஞானவாதி)' அல்லர்யோகாசாரர், அகப்பொருளாகிய ஞானம் உண்டென்றும், புறப்பொருள்கள் சூனியமென்றுங் கூறுவர். பொய்யில் புலவர்,
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். 751
என்றும்,
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். 754
என்றும்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
என்றும் வருந் திருக்குறள்களால் புறப்பொருள்களுண்டெனக் கொள்வதனாலே, புறப்பொருள்களெல்லாம் சூனியம் என்கின்ற விஞ்ஞானவாதியாகிய 'யோகாசாரர்' அல்லர்.
_________________________________________________
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவா
http://eswaramoorthy.webs.com
http://shivasevagan.blogspot.com
சித்தாந்த சைவர் என்பதன் அர்த்தம் என்னவோ?
அப்படியானால் திருக்குறள் உலகப்பொதுமறை நூல் இல்லையா?
Last edited by அக்னி; 13-06-2007 at 01:40 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
சித்தாந்த சைவர் என்றால் சைவ சித்தாந்தத்தைக் கடைபிடிப்பவர் என்று அர்த்தம்.
பொதுநூல் குறித்து இந்த லிங்கில் பாருங்கள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9410
தொடர்ந்து படியுங்கள். இந்த ஆராய்ச்சிக் கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும்.
_________________________________________________
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவா
http://eswaramoorthy.webs.com
http://shivasevagan.blogspot.com
(இ) 'செளத்திராந்திகர்' அல்லர்செளந்திராந்திகர் புறப்பொருள்கள் வழியளவையானறியப்படுமென்பர். மேலும், சாதிபேதம், உயிர்கள், அடிசேர் முத்தி முதலியன இவர்களுக்கு உடம்பாடில்லை. நம் செந்நாப் போதார்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
என்பதனாலும்,
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள. 1101
என்பதனாலும் வாயிற் காட்சியையும்,
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர். 1204
என்பதனால் மானதக் காட்சியையும்,
உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினுங் காமம் இனிது 1201
என்பதனால் தன்வேதனைக் காட்சியையும் உடம்பட்டு இவ்வளவைகளினாலே புறப்பொருள்கள் காணப்படுகின்றனவென்றும்,
_________________________________________________
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவா
http://eswaramoorthy.webs.com
http://shivasevagan.blogspot.com
அக்னி ஒரு விஷயம் இங்கு நான் சொல்ல வேண்டும். சிவசேவகனை நான் புரிந்திருந்தவரை மிகச்சிறந்த சைவ சமய ஆன்மீகவாதி. தன்னலம் கருதாது தன் ஆன்மீக படைப்புகளை அளித்து வருபவர். இவருக்கு பதிக்க தெரியுமே தவிர கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பதில் அளிக்க தெரியாது. இவருடைய பெரும்பாலான திரிகள் ஆன்மீக சம்பந்தமானது என்பதால் அவருடைய படைப்புகளைப்பற்றிய சந்தேகங்களை நான் எழுப்பவில்லை. சில சமயங்களில் இவர் இடுவதெல்லாம் இவர் சொந்தக்கருத்து தானா அல்லது வெட்டி ஒட்டுகிறாரா என்று மன்ற நண்பர்கள் கேள்வி கேட்டபோது அவருடைய கருத்துக்கள் தான், அவர் எழுதுபவை தான் என்று சொன்னார். இவர் சொல்லும் பெரும்பாலான கருத்துக்கள் நம் மன்ற நண்பர்களின் கருத்துக்களோடு முரண்படுவதால் இவருடைய திரிகள் பெரும்பாலும் முடக்கப்பட்டிருக்கின்றன
சமீபத்தில் இவர் எழுதிய சரித்திரத் துறையும் சைவ சமயமும் என்ற தலைப்பிலான திரி ஆரம்பிக்கப்பட்டு நிர்வாகத்தினரால் இதில் சரித்திரம் சம்பந்தமான விஷயங்கள் ஒன்றும் இல்லை என்று கருத்துரைக்கப்பட்டது. அதன் பிறகு அவர் இட்டிருந்த கருத்துக்களை வெட்டி ஒட்டியது போன்ற ஒரு இணையபக்கத்தை ஜியோசிட்டியில் மன்ற நிர்வாகி தாமரைச்செல்வன் அவர்கள் கண்டு இரண்டு பதிவுகளும் ஒன்று தான் என்று நிரூபித்தார். உடன் நம் சிவசேவகனார் அது அவர் தான் எழுதினார் என்றும் அவர் பெயர் அந்த பக்கத்தில் உள்ள படி ஈஸ்வர மூர்த்தி பிள்ளை என்று சொன்னார். ஆனால், உண்மையை ஒரு நாளும் மறைக்கமுடியாது என்பது அந்த ஜியோசிட்டி இணையப்பக்கத்திலேயே திரு.ஈஸ்வர மூர்த்தி பிள்ளையவர்கள் இறைவனடி அடைந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டதாக நிரூபித்தார்.
அதற்கான ஆதாரங்கள்:
அவர் எழுதி முடக்கப்பட்ட பதிவின் சுட்டி:
சரித்திரத் துறையும் சைவ சமயமும்
தான் தான் ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளை என்று பொய் சொன்ன பதிவு:
http://www.tamilmantram.com/vb/showp...9&postcount=10
திரு.ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளை அவர்கள் இறைவனடி அடைந்ததை நிரூபிக்கும் இணைய பக்கம்:
http://www.geocities.com/eswaramoort...ai/index1.html
(கீழ்க்கடைசியில் அவர் மரணச்செய்தி உள்ளது)
இப்போது என் கேள்விகள் என்னவென்றால்..
1. ஒரு சிறந்த ஆன்மீகவாதியாக நம்பும் ஒருவர் ஏன் ஆன்மீக சம்பந்தமான கேள்விகளுக்கு ஏன் பதில் அளிப்பதில்லை..?
2. நம் தளத்தில் வெட்டி ஒட்டக்கூடாது, அதன் சுட்டியை கொடுத்தால் போதும் என்று சொல்லியும் அதை அவர் பின்பற்றாதது ஏன்..?
3. நிறைய பேர்களால் புரியாத தமிழ் என்று சொல்லப்படும் அவர் பதிவுகளால் யாருக்கு என்ன இலாபம்..?
4. அடுத்தவர்கள் கருத்தை சொந்த கருத்து என்று ஒரு ஆன்மீகவாதி சொல்லலாமா?
5. சிவசேவகன் என்ற தன் பெயரை சந்தர்ப்பத்திற்காக ஈஸ்வர மூர்த்தி பிள்ளை என்று பொய் சொன்னது ஏன்..?
6. அவருடைய பொய் நிரூபிக்கப்பட்டும் நண்பர்களிடம் அவர் ஒரு வருத்தம் தெரிவிக்காதது ஏன்..?
7. இப்படி மன்ற விதிமுறைகளுக்கு எதிராய் நடப்பவர்களை தடுக்க மன்றத்தின் நடவடிக்கை என்ன..?
அன்புடன்,
இதயம்
இந்த இடம் விவாதத்துக்குரிய இடம் அல்ல நண்பரே!
சிவசேவகன் ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளையின் மாணவன் நான்.
ஆசிரியரின் இணையதளம்
www.geocities.com/eswaramoorthypillai
www.geocities.com/samayasaathanam
அமைத்தவன் அடியேன் தான்.
மேலும் அந்த இணையத்தில் ஆசிரியர் சிவனடி சேர்ந்தது அனைவருக்கும் தெரியும். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.
என்னுடைய கையெழுத்தின் கீழ் பகுதியில் அந்த இணைய தளம் உள்ளது. அதில் முதல் பக்கத்தில் ஆசிரியர் வரலாற்றில் இந்தக் குறிப்பு இடம் பெற்று இருக்கிறது. இதை மறைவேண்டுமென்றால் இந்த இணைப்பை அடியேன் கொடுத்திருக்க மாட்டேன்.
இங்கு அடியேன் எடுத்துள்ள அவதார் சிவசேவகன். ஆதலால் அவருடைய கருத்தைத் தான் இங்கு பதிந்து வந்துள்ளேன். இத்தோடு தேவையில்லாமல் இதில் தாங்கள் கேள்வி எழுப்ப வேண்டாம்.
_________________________________________________
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவா
http://eswaramoorthy.webs.com
http://shivasevagan.blogspot.com
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks