Page 10 of 13 FirstFirst ... 6 7 8 9 10 11 12 13 LastLast
Results 109 to 120 of 156

Thread: திருவள்ளுவர் சித்தாந்த சைவர்

                  
   
   
  1. #109
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    (16) 'பாடாணவாத சைவர்' அல்லர்

    பாடாணவாத சைவர் ஆணவமலம் ஆன்மாவுக்குக் குணம் போல இயல்பாய்த் தொன்மையே (சகசமாயநாதியே) உள்ளது. அதனால் மாயை கன்மங்கள் ஆன்மாவைத் தலைக்கூடும்; பாசஞான மெல்லாந் தன்கீழ் விரவல் என்று (வியாப்பியமென்று) அறிந்து நீங்குதன் மாத்திரையே முத்தி; முத்தி பெற்ற வழியும் 'சகசமலமாகிய' ஆணவமலம் நீங்குதலின்றிச் சுட்டறிவும், இன்ப துன்ப நுகர்வுமற்று (சுகதுக்காநுபவங்களுமற்று). ஆன்மா கல்லைப் (பாடாணம்) போற் கிடக்கும் என்பர். பெருநாவலர்,

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5


    என்ற திருக்குறளில் இறைவன் புகழை விரும்பினாரிடத்தே ஆணவமலத்தின் காரணமாகப் பொருந்துகின்ற இருவினைகளும் நீங்குமென்றதனால், காரணம் நீங்காதபோது அதனால் வருகின்ற வேதனைகள் (உபாதிகள்) முற்றிலும் பின் தோன்றுதலின்றி (செனிப்பின்றி) நீங்காவகையாலும், காரணமாகிய ஆணவமல ஆற்றல் (சத்தி) கெட்டாலன்றி அதனாற் சார்ந்து வருகின்ற வினைகள் கெடா வகையாலும், வினைகள் நீங்குமென்றதனானே வினைகளுக்குக் காரணமாயுள்ள ஆணவமல 'சத்தி' நீக்கமும் நாவலருக்கு உடம்பாடென்றும்,

    என்ற திருக்குறளால் இறைவனடி சேர்ந்தின்புற்று வாழ்தலாகிய முத்தியே உடம்பாடென்றும் பெறப்படுவதால், நாயனார் 'பாடாணவாத சைவர்' அல்லர்.
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  2. #110
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    (17) 'பேதவாத சைவர்' அல்லர்

    பேதவாத சைவர் மும்மலங்களும் அநாதி; கரணங்களிற் சென்ற தன்னறிவு பக்குவத்தில் தன் மாட்டொன்றி, ஆதரவின்றி (நிராதாரமாய்) நிற்கும்; இறைவனருளால் மும்மலங்களும் நீங்கிய ஆன்மா பெறுவானும் பேறுமாயிருக்கும்; அதன் மேலும் அடிமையாதலில்லையென்பர்.

    முதற்பாவலர்,

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5
    என்ற திருக்குறளால் மாயா கன்ம மலங்கள் ஆகந்துகம் என்றும்,

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார். 3

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவனடி சேரா தார். 10


    என்ற திருக்குறள்களால் இறைவனடியிற் கலந்து அவனருளிய ஆனந்தத்தையுண்டு வாழ்தலே முத்தியென்றுங் கூறுதலால், நாயனார் 'பேதவாத சைவர்' அல்லர்.
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  3. #111
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    (18) 'சிவசமவாதசைவர்' அல்லர்

    சிவ சமவாத சைவர், பதி ஞான, பசு ஞான, பாச ஞானங்கள் அநாதியே உள்ளன; புழு வேட்டுவனை நினைந்து வேட்டுவனாகி அதன் தொழிலையும் இயற்றி நிற்றல்போல, ஆன்மா பதியை நினைந்து அதன் வடிவுற்று அதன் தொழிலை இயற்றி நிற்பதே முத்தியெனக் கூறுவர்.

    தேவர் இறைவனடி சார்ந்தின்புற்று வாழ்தலே முத்தியென,

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார். 3


    என்ற திருக்குறளால் வலியுறுத்திக் கூறுவதால், அவர் 'சிவசமவாதசைவர்' அல்லர்.
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  4. #112
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    (19) 'சிவசங்கிராந்தவாதசைவர்' அல்லர்

    சிவசங்கிராந்தவாத சைவர் ஆன்மாவின் சந்நிதியிற் காந்தபசாசம் போல உடல் இயங்குழி அதன்கணின்று கருவிகளே விடயங்களை அனுபவிக்கும், மலம் நீங்கும் வழி, கண்ணாடியின் முகவொளி தோற்று மாறு போல முதல்வன் திருவருள் ஆன்மாவின் மாட்டுச் சங்கிரமித்துத் தோன்றும், அவ்வழி உப்பளத்தில் இட்டவையெல்லாம் உப்பாமாறு போல ஆன்மா சிவமேயாய் அவ்வான்மாவின் சந்நிதியில் அறிவனவாகிய பசு கரணங்களுஞ் சிவகரணங்களாய் மாறுஞ் சித்தியுற்றுச் சிவத்தை அறியுமென்பர். இவர் கூறும் முத்தி சித்தி முத்தியாகும். திருவள்ளுவ நாயனார்.

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி. 25


    என்றும்,

    சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு. 27


    என்றுங் கூறுமாற்றால் சடவத்துக்களாகிய இந்திரியங்களுக்கு வேறாய ஆன்மாவே அறியுமென்றும்,

    சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
    சார்தரா சார்தரு நோய். 259


    என்று கூறுமாற்றால் உயிர்களுக்கு முதல்வன் சார்பில் வழி அறிவு விளங்கப் பெறுவதில்லை என்றும் சிவசங்கிராந்தவாத சைவர் கூறும் சித்தி முத்தியை உடம்படாது.

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவனடி சேரா தார். 10


    என்று கூறுமாற்றால் அடிசேர் முத்தியே முத்தி என்றும் கூறுவதால் திருவள்ளுவ நாயனார் 'சிவசங்கிராந்தவாத சைவர்' அல்லர்.
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  5. #113
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    (20) 'ஈசுரவ விகாரவாத சைவர்' அல்லர்

    ஈசுரவ விகாரவாத சைவர், பல துளைக்குடத்துத் தீபம் போல நவத்துவார சரீரத்தில் அறிவாய் நிற்கின்ற ஆன்மா, மலபரிபாகஞ் சத்தினிபாதமுற்ற அளவில் முதல்வன் திருவருளால் ஞானத்தைப் பெற்று, வெயிலில் துன்புற்ற ஒருவன் மர நிழலடைந்து ஆறுவது போல அம்முதல்வன் திருவடி நிழலைத் தலைக்கூடிப் பின் முதல்வனது உதவியை (உபகாரத்தை) அவாவாது என்பர். நாயனார்,

    * விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. 1186


    [*விளக்கு - சிவஞானம், இருள்-ஆணவம்]

    என்ற திருக்குறளால் என்றும் இறைவன் 'உபகார மவசியம்' என உய்த்துணரக் கூறியிருத்தலால், நாயனார் 'ஈசுரவவிகாரவாத சைவர்' அல்லர்.
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  6. #114
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    (21) 'சிவாத்துவித சைவர்' அல்லர்

    சிவாத்துவித சைவர், மரத்தில் விரவிய (வியாப்பியமான) கவடு கோடு முதலியன வெல்லாம் மரமே யாமாறு போலச், 'சத சத்துக்கள்' ஆகிய உயிர்களும் 'அசத்துக்கள்' ஆகிய பாசக் கூட்டங்களும் குண குணிகட்குத் தம்முள் உளதாகிய வேற்றுமையைப் போலச் 'சத்துக்கு' உட்பேதமே யன்றிப், புறப்பேத மின்மையான் அவையனைத்தும் 'சத்து' எனவே படும். படவே, பதித் தன்மையின்வேறாய் உயிருக்கு அறியுந் தன்மை உண்டென்னில் தனித்த முதலெனப்பட்டு வழுவாமாகலின் 'சத்து' ஆகிய பதிப்பொருளே உயிர்களினிடமாக நின்றறியும் என்பர். ஆகவே இவர் கூறுவது 'நிமித்த காரணம்'. நாயனார்,

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார். 3


    என்பது முதலிய திருக்குறள்களால் 'கடவுள் வாழ்த்து' என்னும் அதிகாரத்தில், முதல்வனின் வேறாக உயிர்கள் உண்டென்றும்,

    அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
    செறிதோறும் சேயிழை மாட்டு. 1110


    என்று கூறுமாற்றால் உயிர்களுக்கு முறை முறையாக விளங்கப் பெறும் அறியுந் தன்மை உண்டென்றும் கூறுவதனாலும், சிவாத்துவித சைவர் கூறும் 'நிமித்தகாரண பரிணாம வாதம்' யாண்டுங் கூறாமையானும் நாயனார் 'சிவாத்துவித சைவர்' அல்லர்.
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  7. #115
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    (அ) 'சுத்தசைவர்' அல்லர்

    சுத்தசைவர் சித்தாந்த சைவரொப்பப்பதி, பசு, பாச இயல்புகளைக் கொண்டாலும் முத்தியில் உயிரானது சிவத்தில் அடங்கி (பரம்பொருளிடத்து அயிக்கமுற்று) ஒரு பயனும் ஓரின்பமும் (ஓரானந்தமும்) இன்றி நிற்குமென்பர். செந்நாப்போதார்

    அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
    தவாஅப் பிறப்பீனும் வித்து. 361

    வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
    வேண்டாமை வேண்ட வரும். 362

    இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின். 369

    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
    பேரா இயற்கை தரும். 370

    என்றும்

    இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு. 352

    என்றுங் கூறுமுகத்தால் பெத்த நீக்கமும் முத்திப் பேறாகிய இறையின்பப் பேறும் (சிவானந்தப் பிராப்தியும்) உடம்படலால் தெய்வப் புலவர் 'சுத்த சைவர்' அல்லர்.
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  8. #116
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    திருவள்ளுவ நாயனார் சித்தாந்த சைவரே

    சித்தாந்த சைவர், உள்ளது செயலுறுதலாகிய (சற்காரிய) வாதங் கொண்டு, காட்சி, கருதல் (அனுமானம்), உரை (ஆகமம்) எனும் மூவகை அளவைகளால் (மூவித பிரமாணங்களால்) கடவுளொருவருண்டென்றும், அவர் சித்தாந்தத் தெய்வமாகிய சிவமே (சிவபரம்பொருளே) என்றும், அக்கடவுளுக்கு வேறாய் எண்ணில்லாத உயிர்கள் உண்டென்றும், அவைகளைப் பந்தித்த ஆணவமல மொன்றுண்டென்றும், அம்மலத்தின் காரணமாக உயிர்களுக்குக் கன்மமலம் தொன்மையே (அநாதியே) உண்டென்றும், மலக் கட்டுடையவர்களான (சம்பந்திகளான) உயிர்களுக்கு உறைவிடமாக மாயை மலமொன்று உண்டென்றும், மலத்தைச் செலுத்துகின்ற 'ஆதிசத்தி' யாகிய 'திரோதான' மலமும், அதனாலான மாயைக் காரியங்களாகிய 'மாயேய மலமும்' உண்டென்றும், கன்ம மலமானது ஏறுவினை (ஆகாமியம்), இருப்பு வினை (சஞ்சிதம்), ஏன்ற வினை (பிரார்த்தம்) என முத்திறப்படும் என்றும், கன்ம பல போகங்களை நுகர் (அனுப) விக்கும் இடங் (தானங்க) ளாகிய துறக்க (சுவர்க்க), இருளுலகங்கள் ( நரக லோகங்கள்) உண்டென்றும், அங்ஙனம் நுகருங் (அனுபவிக்குங்) கால் அடையத்தக்க தேவர், அலகை முதலிய பிறவி (யோனி) பேதங்கள் உண்டென்றும், இங்ஙனம் இறந்து பிறந்து வருவதால் மறுபிறப்புக்கள் உண்டென்றும், அழிப்பு (சங்காரம்) இளைப்பொழித்தலாகும் என்றும், பிறவிப் பெருங்கடலைக் கடக்கத்தக்க வாயில்களை (உபாயங்களை) அறிவிக்கும் விதி நூல்களாகிய வேத சிவாகமங்கள் உண்டென்றும், அவற்றிற் கீடாக ஒழுகுங்கால் செய்யப்படுங் கன்மங்கள் நல்வினை தீவினைகளென இருதிறப்படூஉ மென்றும், இவைகளும் 'திருஷ்ட சன்ம போக்கியம்', 'அதிருஷ்ட சன்ம போக்கியம்', 'திருஷ்டாதிருஷ்ட சன்ம போக்கிய்' மென மூவகைப்படும் என்றும், அக் கன்ம பேதங்களால் போக பேதங்கள் உண்டென்றும், கன்ம பயன்கள் நுகர்ச்சியாவது உறுதி (அனுபவமாவது நிச்சயம்) என்றும், அப் பயன்களையும் இறைவனே உயிர்களுக்குக் கொடுப்பன் என்றும், அங்ஙனமாயினும் சிவாகமங்களின் வழி ஒரு வினைக்கு மற்றோர் வினையால் அழிவுண்டென்றும், கடமை (தருமங்) களைச் செய்யவேண்டுமென்றும், அவற்றைத் தக்கவர் தகாதவர் (பாத்திரா பாத்திரம்) அறிந்து செய்யவேண்டுமென்றும், கடமை (தருமங்) குள்ளே வேள்வி சிறந்ததென்றும், அதனினும் உயிரிரக்கம் (சீவகாருணியம்) மிகச் சிறந்ததென்றும், அதுவும் அருளில்லாதவழி கூடாதாகையால் உயிர்கள் மாட்டு அருள் வேண்டுமென்றும், அவ்வருள் இல்லாதவர் எத்தகையரானாலும், அவர்கள் வீடுபேற்றுத் திளைப்பு (மோட்சலோகாநுபவம்) இல்லையென்றும், அங்ஙனஞ் செய்கின்ற வினைகளும் ஒருவன் செய்தது அவனைச் சார்ந்தார்க்கும் ஆகுமென்றும், முத்தியுலகமானது தேவலோகத்துக்கு மேலுள்ள தென்றும், அதனை அடைவதற்கு நிலையும் நிலையாமையும் அறியும் ஞானம் (நித்தியா நித்திய வஸ்து விவேகம்) முதலாவதான காரண (சாதன) மென்றும், வேறு சிறந்த சாதனங்களும் உண்டென்றும், அவைகளைக் கடைப்பிடித்து மனம் வாக்குக் காயங்களால் முதல்வனை வழிபட வேண்டும் என்றும், அங்ஙனம் வழிபட்டார்க்குப் பிறவி (பெத்த) நீக்கமும் வீடு (முத்தி) பேறும் உண்டென்றும், முத்தியிலும் முப்பொருள்களும் முதல்வன் உதவியும் (உபகாரமும்) உண்டென்றும், முதல்வனின் அடிசேர் முத்தியே சித்தாந்த முத்தி என்றுங் கூறுவர். நாயனார்,
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  9. #117
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு. 1


    என்ற திருக்குறளால் 'சற்காரியவாதம்' கூறுகின்றதனானும், மேற்படி குறளில் உலகு என்றதனால் காட்சியளவையும் (காட்சிப் பிரமாணத்தையும்,) 'ஆதிபகவன் முதற்றேயுலகு' என்றதனால் கருதலளவையும் (அனுமானப் பிரமாணத்தையும்).

    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல். 543

    கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
    தள்ளாது புத்தே ளுளகு. 290

    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு. 610

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322


    என்ற திருக்குறள்களால் உரையளவையும் (ஆகமப் பிரமாணத்தையும்) உடம்படுதலானும், கடவுள் வாழ்த்து என்ற அதிகாரம் கூறியதனாலும்,
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  10. #118
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார். 10


    என்பது முதலிய திருக்குறள்களானும் கடவுள் ஒருவரே உண்டென்றும்,

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு. 1


    என்ற திருக்குறளால் அக்கடவுள் சித்தாந்தத் தெய்வமாகிய ஆதிசத்தியாரோடு கூடிய சிவமே (சிவபரம்பொருளே) என்றும் கூறுதலானும்,

    தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
    இன்னுயிர் நீக்கும் வினை. 327

    ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
    நன்மை குறித்தது சால்பு. 1013

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322

    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22


    என்ற திருக்குறளால் எண்ணில்லாத உயிர்கள் உண்டென்று கூறுதலானும்,
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  11. #119
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

    இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு. 352

    சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
    சார்தரா சார்தரு நோய். 359

    காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
    நாமம் கெடக்கெடும் நோய். 360


    என்ற திருக்குறள்களால் ஆணவமலம் ஒன்றுண்டென்று கூறுதலானும்,
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

  12. #120
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் shivasevagan's Avatar
    Join Date
    15 Aug 2006
    Posts
    2,677
    Post Thanks / Like
    iCash Credits
    17,395
    Downloads
    17
    Uploads
    0
    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல். 505


    என்ற திருக்குறளால் கரும மலத்தை உடம்படுதலானும்,

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு. 1


    என்ற திருக்குறளால் உலகுக்கு முதற்காரணமாகிய மாயா மலத்தையும், "ஆதி பகவன்" என்றதனால் "ஆதி சத்தியாகிய திரோதான மலத்தையும்', "உலகு" என்றதனால் மாயைக் காரியமாகிய 'மாயேய' மலத்தையும் உடம்படுதலானும்,
    _________________________________________________

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
    ஹர ஹர நம: பார்வதி பதயே
    ஹர ஹர மஹா தேவா

    http://eswaramoorthy.webs.com
    http://shivasevagan.blogspot.com

Page 10 of 13 FirstFirst ... 6 7 8 9 10 11 12 13 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •