Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0

    ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.

    ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.

    கடுமையான உழைப்பினால்
    உன் ஆயுள் ரேகை
    அழிந்தது.......

    அரசியல் வாதிகளின்
    ஆரவாரப் பேச்சுக்கு
    கை தட்டியே உன்
    அதிர்ஷ்ட ரேகை கலைந்தது......

    எண்ணற்ற சினிமாக்களால்
    உன் புத்தி ரேகை
    மழுங்கியது........

    லாட்டரிச் சீட்டுகளைச்
    சுரண்டியதாலேயே
    உன் உழைப்பு ரேகை
    உருக்குலைந்தது........

    தங்கைகளின் திருமண ஏற்பாட்டில்
    அலைந்து திரிந்ததில்
    உன் திருமண ரேகையும்
    தொலைந்து போனது.....

    முதுமை ரேகை மட்டுமே
    முறியாமல் உள்ளது.......

    கொஞ்ச நாட்கள் கழிந்தால்
    உன் குறையெல்லாம் போய் விடும் போ !
    Last edited by கலைவேந்தன்; 06-06-2007 at 02:02 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.

    கடுமையான உழைப்பினால்
    உன் ஆயுள் ரேகை
    அழிந்தது.......

    அரசியல் வாதிகளின்
    ஆரவாரப் பேச்சுக்கு
    கை தட்டியே உன்
    அதிர்ஷ்ட ரேகை கலைந்தது......

    எண்ணற்ற சினிமாக்களால்
    உன் புத்தி ரேகை
    மழுங்கியது........

    லாட்டரிச் சீட்டுகளைச்
    சுரண்டியதாலேயே
    உன் உழைப்பு ரேகை
    உருக்குலைந்தது........

    தங்கைகளின் திருமண ஏற்பாட்டில்
    அலைந்து திரிந்ததில்
    உன் திருமண ரேகையும்
    தொலைந்து போனது.....

    முதுமை ரேகை மட்டுமே
    முறியாமல் உள்ளது.......

    கொஞ்ச நாட்கள் கழிந்தால்
    உன் குறையெல்லாம் போய் விடும் போ !
    இது எமது மக்களின் சாபக்கேடு வேந்தே. உடம்பு ஓடாகத் தேயும்வரை உழைத்துவிட்டு பலனை எடுப்பதில்லை. பலனை எடுக்க அரசியல்வாதிகள் விடுவதில்லை. அவர்களின் பகட்டுப் பேச்சல் கவரப்பட்டு சிந்திக்காமல் கைதட்டி உரிமைகளைப் பறிகொடுப்பதுவும் கொஞ்சமாகக் கிடைக்கும் ஊதியத்தை சினிமா மோகத்தினால் அழிப்பதுவும் கஸ்கப்பட்டு சேமித்த பணத்தில் தங்கை அக்கா குடும்பம் என வாழ்ந்துவிட்டு தனது வாழ்க்கையைப் பறிகொடுத்த ஒருவனுக்கு மரணத்திதான் விடியல். அருமையான சிந்தனை. உங்கள் சமூக சிந்தனைக்கும் கவித்திறமைக்கும் எனது பரிசாக 200 இ-பணம். தொடருங்கள் கலை.....

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    கலைவேந்தனின் கைரேகை யோதிடம் அருமை.

    வாழ்த்துக்கள்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    முதன் முதலாய் உங்கள் கையால் பரிசு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி ஐயா!
    நன்றிகள் கோடி!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    முதன் முதலாய் உங்கள் கையால் பரிசு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி ஐயா!
    நன்றிகள் கோடி!
    கலைவேந்தே! தமிழின் கத்துக்குட்டி நான். ஐயா என்ற மரியாதை எல்லாம் வேண்டாம்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    நன்றிகள் திரு ஜாவா அவர்களே!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    கலைவேந்தே! தமிழின் கத்துக்குட்டி நான். ஐயா என்ற மரியாதை எல்லாம் வேண்டாம்.

    சிறு பிள்ளையே ஆயினும் மதிப்புடனும் மரியாதையுடனும் விளிப்பதே தமிழன் பண்பு! நன்றிகள் நண்பரே!

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் சக்தி's Avatar
    Join Date
    30 Apr 2007
    Location
    எங்கோ தொலைவில் ய
    Posts
    446
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    29
    Uploads
    0
    நல்ல கவிதை வாழ்த்துக்கள் கலைவேந்தன்
    நட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்

    நேசமுடன்
    சக்தி

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.

    நிச்சயம் பார்க்கவேண்டிய ரேகைப் பலன்கள் தான்..

    கடுமையான உழைப்பினால்
    உன் ஆயுள் ரேகை
    அழிந்தது.......


    தமிழன் கடுமையாக உழைப்பான் என்று சொல்லியதே இந்த கவிதைக்கு வெற்றிதான்.. வெறும் புகழ்ச்சியல்ல. ஆயுள்
    ரேகைகள் என்றாவது அழியக் கூடியவை ஆனால் அது எப்படி அழிய வேண்டும் என்பதற்கு உதாரணமாக தமிழனைப்
    பற்றீய வரிகள்... மெய் சிலிர்க்கிறது.... அருமை க.வேந்தன்.

    அரசியல் வாதிகளின்
    ஆரவாரப் பேச்சுக்கு
    கை தட்டியே உன்
    அதிர்ஷ்ட ரேகை கலைந்தது......


    நிதர்சனமான உண்மை. இந்த விஷயங்களில் மேற்சொன்ன வரிகளுக்கு நேர் மாறு நம் தமிழர்கள்.. என்ன செய்ய
    அதிர்ஷ்டத்தை தேடவேண்டும்.. இங்கே தேடிவரும் என்று நினைத்துக் கொண்டு அரசியல் வாதிகளின் பிடியில் சிக்கித்
    தவிக்கிறார்கள்.. உண்மை வரிகள்.

    எண்ணற்ற சினிமாக்களால்
    உன் புத்தி ரேகை
    மழுங்கியது........


    இது சம்மட்டி அடி. சினிமாக்களால்தான் இத்தனை கேவலமும்.. மற்ற நாடுகளில் இந்த பிரச்சனை இருக்கிறதா என்பது
    தெரியாது. ஆனால் பழங்காலத்து நாகரீகம் சிதையாமல் இருக்கும் தமிழ்நாட்டில் இப்படியொரு தலைவிதி.. தமிழ்நாட்டில்
    சினிமா ஒழிந்தால் அந்நியநாடுகளே தலைநிமிர்ந்து நோக்கும்... சினிமா கூட எடுக்க நேரிடலாம்.

    லாட்டரிச் சீட்டுகளைச்
    சுரண்டியதாலேயே
    உன் உழைப்பு ரேகை
    உருக்குலைந்தது........


    முதல் வரிகளுக்கு நேர் மாறான வரிகள்... இப்படியும் ஒரு சாரார் இருக்கிறார்கள். பெரும்பாலும் லாட்டரி சீட்டுகள்
    ஒழிந்துவிட்ட நிலையில் இந்த வரிகள் சற்று உண்மையை மந்தமாகவே சொல்லுகின்றன.

    தங்கைகளின் திருமண ஏற்பாட்டில்
    அலைந்து திரிந்ததில்
    உன் திருமண ரேகையும்
    தொலைந்து போனது.....


    க.வேந்தன்... இந்த நிலைமை ஓவ்வொரு அண்ணன்களுக்கும்.. ஏன் எனக்கே கூட.. தங்கைக்கு மணம் முடித்துவிட்டு
    அண்ணன்கள் செய்யும் நிலை பலபேரிடம் உண்டு. அந்த வகையில் பலர் திருமணத்தைத் தள்ளி தள்ளியே இளமையை
    அனுபவிக்காமல் போகிறார்கள்... என்ன செய்ய.. காசு படுத்தும் பாடு..

    முதுமை ரேகை மட்டுமே
    முறியாமல் உள்ளது.......


    ஹ ஹ...... உண்மைதான்.. இறுதியில் மிஞ்சுவது அது ஒன்றுதான்..

    கொஞ்ச நாட்கள் கழிந்தால்
    உன் குறையெல்லாம் போய் விடும் போ !


    ஹி ஹி.. கொஞ்ச நாட்கள் கழித்து உயிர் இருக்கிறதோ என்னவோ???? அதைத்தான் சிம்பாலிக்காக சொல்லுகிறீர்களா?

    --------------------
    க.வேந்தன். முன்பே அறிமுகம் ஆன மனிதர் ஆகையால் மட்டுமல்ல. சிறந்த கவிதையும் இது.. சாதாரணமாக
    சொல்வதற்கும் ரேகை பலன்கள் வைத்து சொல்வதற்கும் உள்ள வித்தியாசங்கள் நிறைய.. இந்த வித்தியாசத்தைக்
    கடைபிடிப்பவர்கள் நிறைய பேரல்ல. எளிமையாகவும் நேர்த்தியாகவும் சொல்ல பலருக்கு முடிகிறது. எனக்கு அந்த
    பிரச்சனை நிகழ்வதுண்டு. எளிமை எளிதில் வருவதில்லை.

    எந்த ஒரு பாமரன் படித்தாலும் விளங்கும் கவிதை இது.. வெற்றீ அங்கே தான் இருக்கிறது. வெறுமே குறியீட்டுக் கவிதைகளாக இருப்பதில் / எழுதுவதில் பிரயோசனமென்ன.? வார்த்தைகள் அடுக்கலில்ல. விளையாட்டில்லை எந்த ஒரு அழகும் சேர்க்கவில்லை.. ஆனால் ஒட்டுமொத்தத்தையும் கரைத்துக் குடித்தவாறு இருக்கிறது கவிதை... அங்கே இருக்கிறது வெற்றீ.

    தொடருங்கள்

    (ஒரே திரியில் எல்லா கவிதைகளையும் இடவேண்டாம்... ஒரு கவிதைக்கு ஒரு கவிதை தனி திரி தொடங்குங்கள்.. அவை அனைத்தையும் கவிஞர் அறிமுகம்/தொகுப்பு என்ற திரிக்குள் நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.)
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நல்ல கவிதை. ஒவ்வொரு ரேகையாக அடுக்கிய விதம் அருமை.ஆச்சர்யமாக இருக்கிறது. சொல்லும் பொருள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் இப்படியெல்லாம் வித்தியாசமாக சொல்லமுடியும் என்பதை பார்க்கும்போது கவிஞனுக்கு கற்பனை வற்றவே வற்றாது என்பது நிரூபனமாகிறது. பாராட்டுக்கள் கலைவேந்தன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி ஆதவா அவர்களே!
    கவிதையை அங்குலம் அங்குலமாகப் பிரித்து அழகான பொருள்கூறி அற்புதமாய் பாராட்டிய உங்கள் ரசிப்புத்தன்மையை வியந்தேன்.
    மீண்டும் நன்றிகள்!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    பாராட்டிய சக்தி மற்றும் சிவா.ஜி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •