நம்ம ஆதவா ஒரு திரியைத் துவக்கி ஓவியா அக்காவைப் பாடாய்ப் படுத்தியது தொடர்பாக நேற்று நாம் நம்ம அக்காவுடன் ஒரு அவசர மந்திரலாலோசனை நடாத்த வேண்டி வந்தது. அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அக்காவிற்கு ஆதரவளிக்கும் அறிஞர் (அக்காவின் அமேரிக்க ஆதரவாளர்கள் சார்பாக), பிரதீப் அண்ணா(தன்னுடைய விடுமுறை நேரத்திலும் இந்த கூட்டத்திற்கு சமூகமளித்தது முக்கியமான ஒரு விடயம்), மதி (அக்காவின் பெங்களூர் ஆதரவாளர்கள் சார்பாக), அமரன் (அக்காவின் ஐரோப்பிய ஆதரவாளர்கள் சார்பாக), மனோஜ் மற்றும் ஓவியன் (அக்காவின் மத்திய கிழக்குப் பிராந்திய ஆதரவாளர்கள் சார்பாக), சுட்டி (அக்காவின் இலங்கை ஆதரவாளர்கள் சார்பாக மற்றும் மயூரேசனைக் காலாய்ப்போர் சங்கம் சார்பாக) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஆதவாவின் ஓவியங்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமென எல்லோரும் ஏகமனதாக முடிவெடுத்தனர், அதன் முதல்கட்டமாக ஆதவாவின் ஓவியங்கள் சிலவற்றை இந்த மன்றிலே நாங்களும் பிரசுரிக்கலாமென முடிவெடுத்தோம் (அவர் அக்காவின் படங்களை வெளியிட்டது போல.....).
அந்த ஓவியங்களில் முதலாவது வெகு விரைவில்
பி.கு - இந்த மந்திரலாலோசனைக் கூட்டத்திற்கு இறுதி வரை வருவார் வருவார் என எதிர் பார்க்கப் பட்ட பென்ஷூ அண்ணா இறுதிவரை சமூகம் தராமையால் பல ஊகங்களுக்கு விடை கிடைத்தது.
Bookmarks