Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: சாமி!!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    சாமி!!!

    அ முதல் ஃ வரை..
    அனைத்துள்ளங்களுக்கும்
    ஆறுதல் தரும் ஆற்றல்..
    ஆயிரமாயிரம்
    அவதாரங்களில் வலம்வரும்
    அபூர்வம்..
    பக்தர்களை பரவசப்படுத்தும்
    படையல்..
    மனதை நிம்மதியாக்கும்
    மந்திரம்..
    உள்ளத்தை உறங்கவைக்கும்
    உன்னத சக்தி..
    எல்லாம் இருந்தும்.....
    பக்தர் கூட்டமில்லா
    கூடாரத்துக்குள்
    குறுகிப்போகின்றன
    பலரின் கவிதைகள்!!...
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:20 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    ரசிப்பவரில்லையேல், கலைஞனுக்கு ஆர்வமேது; கை தட்டவேண்டாம். கல்லடியாவது கொடுக்கலாமில்லையா!

    உண்மையான சொற்கள் பூ ஜி! என்ன செய்வது, படைப்புக்கள் பல தாங்கள் சொல்வது போல்தான் .... கேட்பாரின்றி....

    ===கரிகாலன்
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:21 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    எல்லோரது எண்ணங்களும் இவ்வாறிருக்க, நாமே ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு எல்லாவற்றையும் வாசித்து விடுவது என்றும், இனி இத்த்னை நாட்களுக்கு இத்தனை கவிதைகள் தான் என்று வரையறுத்துக் கொள்வதும் தான் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.....
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:21 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    எல்லோரது எண்ணங்களும் இவ்வாறிருக்க, நாமே ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு எல்லாவற்றையும் வாசித்து விடுவது என்றும், இனி இத்த்னை நாட்களுக்கு இத்தனை கவிதைகள் தான் என்று வரையறுத்துக் கொள்வதும் தான் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.....
    காற்றுக்கு வேலி?!!.....

    நண்பரே,,, நீங்கள் சொல்வது வாரப்பத்திரிக்கைக்கு கவிதை அனுப்புவதுபோல..

    ஆளுக்கால் தலைவன் ஆசை.... நானும் ஒரு கட்சி ஆரம்பிக்கிறேன்.. இப்படியும் எண்ணலாமோ?!!

    யாருமே பாராட்டவில்லை.. நாமாவது பாராட்டிக்கொள்வோமே... இது சரியாகப்படுகிறது?!!

    இங்கே அளவு கடந்த கவிதைகள்.. அதனால்தான் படிக்கவில்லை என்று எவரேனும் சொன்னால் ஏற்புடையதாய் உள்ளதா?!!..

    இரசிப்புத்தன்மை தானே வரட்டுமே.......

    மன்னிக்கவும். அப்படியொரு கூட்டணி அமைத்தால் நான் வெளியே நின்று ஆதரவு தரக்கூட யோசிப்பேன்!!

    இங்கே நாம் கற்பனைகளை.. அல்லது ஆழ்மனது எண்ணங்களை... இப்படி ஏதேனும் ஒன்றை நம் திருப்திக்காகத்தான் படைக்கிறோம்..விருப்பமுள்ளவர் படிக்கட்டும்.... விமர்சணம் எழுதட்டும்..

    நான்... கவிதைகளை உட்கார்ந்து எழுதி கோப்புகளில் சேர்த்து பின் அதை அனுப்புவதில்லை... அந்த நேரம் என்ன யோசிக்கிறோமோ அதை அப்படியே எழுதிடுவேன்.. ஆதலால் என் கற்பனைக்களுக்கு என்னால் கட்டுப்பாடு விதிக்க முடியாது.. கவிதைகளுக்கும்தான்..
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:24 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    படைப்பாளிக்கு விலங்கு போடுவதா? என்ன அக்கிரமம்? அவனுக்கு எப்போது என்ன தோன்றுகிறதோ, இரவோ, பகலோ, அப்போதைக்கப்போது படைக்கவேண்டும். அதுதான் சரி. நாமென்ன கம்யூனிஸ்ட் நாட்டிலா இருக்கிறோம்? இதற்கெல்லாம் கட்டுப்பாடு என்று பேசுவதற்கு?

    193 அங்கத்தினர்கள் இருக்கிறோமே..... எவ்வளவு பேர் இங்கு வாரத்திற்கு இரு முறையாவது வருகிறார்கள்? வந்தாலும் எத்தனை பேர் எழுதுகிறார்கள்? எத்தனை பேர் வெறுமனே மேய்கிறார்கள்?

    இந்த ஆதங்கத்தில் உதித்ததுதான் பூஜியின் கவிதை.

    ===கரிகாலன்
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:26 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    அரசியல் கூட்டணியைப் பற்றியும் நான் பேச நினைக்கவில்லை. தடை விதிப்பதைப் பற்றியும் நான் யோசிக்கவில்லை. நான் கூறிய யோசனை, இந்த மன்றத்தில், கவிதை எழுதுபவர்களாது கூடி என்று தான். சங்க காலத்திலும் உள்ள நியமம் தான் இது. கவிதை படைப்பதற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்ட அதே சமயத்தில், சங்கத்தில் கூடிய கவிஞர்கள் முன்னாடி அரங்கேற்றுவது போலத் தான்.... இங்கும் எல்லோரும் வருகின்றனர்... சங்கம் போன்ற அமைப்பு தானே இது.... இத்தகைய கூட்டணியைத் தான் சொன்னேன்....

    சுய கட்டுப்பாடு என்று கூறியதைத் தான் தடை என்று எண்ணி விட்டீர்கள் போலிருக்கிறது..... எத்தனை பேர் வருகிறார்கள், வாசிக்கிறார்கள் என்ற ஆதங்கம் தான் எனக்கும் உண்டு.

    இதையே தான் Moderators பார்வைக்கு என்பதிலும் எழுதியிருந்தேன். முயற்சிப்பதாக தலைவரும் கூறியிருந்தார்..... மேலும், எழுதி வைத்து எடிட் செய்து பிரசவிக்கும் வழக்கம் எனக்கும் இல்லை. தோன்றிய போது, தோன்றியதைத் தான் எழுதுகிறேன். சில சமயங்களில், எழுதியவற்றைத் திருப்பி வாசிக்கும் பொழுது இன்னுமும் கூட நன்றாக எழுதியிருக்கலாமோ என்று கூடத் தோன்றும். ஆனாலும் எழுதியவற்றைப் பலரும் படித்து, கருத்து கூறி விட்ட பட்சத்தில், மீண்டும் எடிட் செய்வது ஏற்கனவே படித்து முடித்தவர்களை ஏமாற்றுவது போலாகும் என்பதால் அப்படியே விட்டுவிடுகிறேன்.....

    நீங்கள் பதில் எழுதிய வேகத்தில், கோபம் தெரிகிறது. அதுவல்ல எனது நோக்கம். மன்னிக்கவும்.....
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:26 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பூ.. நீர் சொல்வது சரியே...

    எம்மால் இயன்ற அளவு.. படைப்புகளை.. பாராட்டுகிறோம்....
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:35 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  8. #8
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    முதலில் பூவின் எண்ணக்குமுறலைக் கவிதையாய் அழகாய்ச் சமைத்ததற்கு அவருக்குப் பாராட்டுக்கள்... மேலும்...ஆம் !உண்மையான படைப்பாளியின் ஆதங்கம் இதுதான்...

    வைரமுத்து கொஞ்ச நாட்களுக்குமுன் அளித்த பேட்டி நினைவுக்கு வருகிறது,.....நல்ல தரமான பாடலாக சினிமாவில் எழுத ஆசையாக இருக்கிறது.....ஆனால் வாய்ப்புத்தான் யாரும் தருவதில்லை... யாராவது தரமான பாடலைச் சினிமாவுக்குக் கேட்டால் இனிமேல் அவர்களிடம் பணம் வாங்கப்போவதில்லை....

    .....என்னால் பல்லாயிரம் பேருக்கு அறுசுவை உணவு படைக்கமுடியும்..ஆனால் என்ன செய்வது.. உண்பதற்கு யாரும் தயாராக இல்லையே....

    இராமலிங்க அடிகளின் ஒரு பாட்டும்கூட இங்கு நினைவுகூறத்தக்கது.... கடை விரித்தேன்,கொள்வாரில்லை....
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:35 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  9. #9
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    வியாபார தலைநகரம&
    Posts
    920
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    பக்தர்களின் கூட்டம் இல்லாவிட்டாலும் ... சாமிக்கு பவர் உண்டு.. மவுசு உண்டு. அதே போல் ... கவிதை எழுதுபவர்களுக்கும் நிச்சயம் மவுசு உண்டு. நீ எழுது பூவே.... நாங்கள் இருக்கோம் உன்னை ஆராதிப்பதற்க்கு. ரோஜா செடியில் முட்கள் உள்ளது போல் .. சில பேர் படித்தாலும் விமர்சனம் எழுதுவதில்லை. கவலைப்படாதே.
    Last edited by பூமகள்; 24-07-2008 at 11:36 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    பெரியண்ணாவின் இப்பதிவு சொல்லும் கருத்தை எல்லோரும் பின் பற்றினால்..
    Quote Originally Posted by இளசு View Post
    நல்லதைக் கண்டு ரசித்துவிட்டு - ஒன்றும்
    சொல்லாமல் போவது பாவம்!

    நல்ல நண்பர் நம் மன்றத்தில் எனக்கு
    சொல்லித் தந்த பாடம்!
    சரியான நேரத்தில் சரியான நபருக்கு தகுந்த உற்சாகம் கொடுத்தாலே போதும்..!

    நான் பின்பற்றும் சில நடைமுறைகளில் இதுவே தலையாய ஒன்று..

    வல்லவர்களுக்கு நாம் செய்வது வெறும் உற்சாகமே..! - ஆனால்
    அவை ஆயிரம் சாதனைகளுக்கு அடிக்கோடாக இருக்கும்..!

    நல்லவைகளை ஊக்குவிக்க ஏன் தயக்கம்??!!

    பூ அண்ணா உங்களின் படைப்புச் சாமியைக் கும்பிட நாங்கள் பக்தியோடு வந்துவிட்டோம்...!!

    எப்போது வருவீர்கள் பூ சாமி??!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பூவின் உணர்ச்சிமய மனவாசம் முழுதாய் வீசும் கவிதை..

    நண்பனும் '' வெட்கங்கெட்ட தாய்'' என இதே கருத்தில் கவிதை தந்தார்..

    பூமகளுக்கு சிறப்பு நன்றிகள் - மூலவரை உற்சவத்தில் அமர்த்தியமைக்கு..


    ------------------


    Quote Originally Posted by karikaalan View Post
    ரசிப்பவரில்லையேல், கலைஞனுக்கு ஆர்வமேது; கை தட்டவேண்டாம். கல்லடியாவது கொடுக்கலாமில்லையா!

    உண்மையான சொற்கள் பூ ஜி! என்ன செய்வது, படைப்புக்கள் பல தாங்கள் சொல்வது போல்தான் .... கேட்பாரின்றி....

    ===கரிகாலன்

    அண்ணலின் ஆதங்கத்தை வழிமொழிகிறேன்..

    பாராட்டு, அங்கீகாரம் எத்தனை இன்றிமையாதவை என அறிய
    கீழ்க்கண்ட திரியின் 3 -வது பதிவைப் பாருங்கள்..

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16811
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    பூ அண்ணனின் திஸ்கியிலிருந்து யுனிகோட்டிற்கு மாறிய கவிதை...

    இன்றும் இளமையாகவே..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •