Results 1 to 9 of 9

Thread: மரணமே என்னை மன்னித்துவிடு

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    16 May 2007
    Location
    B'lore
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0

    மரணமே என்னை மன்னித்துவிடு

    துரத்தும் உன் விழிகளால்
    என் தூக்கம் தொலைந்ததடி,
    நீ பிரிந்த துக்கமோ
    தினம் எனை தூக்கிலிடுகிறது,
    மரணமோ எனை மறுமணம்
    செய்ய தூண்டுகிறது.

    கண்மணியே, உனை சந்திக்க
    ஒரு வாய்ப்பு கொடு
    உனை நேசிக்க ஆணையிடு
    பிஞ்சு விரலால் எனை மெல்லதொடு.

    உன் இதழ் மீது இருக்கவிடு
    உன்னில் தொலைத்த என்னை தேடவிடு
    உன் அழகை ஆளவிடு
    உன் மடிமீது எனை மாய்த்துவிடு
    அதுவரை, மரணமே என்னை மன்னித்துவிடு.
    Last edited by shangaran; 01-06-2007 at 06:28 AM.
    அன்புடன்,
    சங்கர்.

  2. #2
    புதியவர்
    Join Date
    22 May 2007
    Location
    Sri Lanka
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    0
    Uploads
    0
    ஆகா! மரணத்திடமும் மண்ணிப்பு கேட்கலாமா சங்கர். பாராட்டுக்கள்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    ஆனால் எனக்கிரு வரி மட்டும் விளங்கிக்கொள்ள முடியவில்லை,

    மரணமோ எனை மறுமணம்
    செய்ய தூண்டுகிறது.


    என்னும் வரியின் படி ஒருமுறை மரணித்தவராக அல்லவா காட்டுகிறது.

  4. #4
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    16 May 2007
    Location
    B'lore
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    இங்கே நான் சொல்ல முற்படுவது என்வென்றால்,

    காதலியை பிரிந்த துக்கம் அவரை மிகுந்த வேதனையில் ஆழ்த்துகிறது
    (இதை தூக்கிலிடப்படும் வலியுடன் ஒப்பிட்டுள்ளேன்).
    அதன் காரணமாக அவர் மரணத்தை மறுமணம் செய்ய விரும்புகிறார்,
    அதாவது சாக முடிவெடுக்கிறார்.
    (முதல் மணம் காதலியுடன், இரண்டாவதாக மரணத்துடன்)

    பிழையிருந்தால் மன்னிக்கவும்...
    Last edited by shangaran; 01-06-2007 at 07:04 AM.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    சன்கரன் அருமை, மரனத்தை மறுமணம் செய்ய கேட்டு
    அதற்க்கு கால அவகாசமும் கேட்டு, மண்னிப்பும் கேட்டு
    பாராட்டுகிறேன்
    பிடியுங்கள் 10 பொற்காசுகள்
    Last edited by lolluvathiyar; 01-06-2007 at 11:51 AM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஜாவா View Post
    நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    ஆனால் எனக்கிரு வரி மட்டும் விளங்கிக்கொள்ள முடியவில்லை,

    மரணமோ எனை மறுமணம்
    செய்ய தூண்டுகிறது.

    என்னும் வரியின் படி ஒருமுறை மரணித்தவராக அல்லவா காட்டுகிறது.
    காதலியை அல்லது காதலனைப் பிரிந்த துக்கத்தில் அவர் மனதால் செத்திருக்கலாம். அதை முதல் மரணம் என்று உருவகப்படுத்தி இருக்கலாம். என நினைத்தேன். ஆனால் கவி படைத்தவர் வேறு காரணம் சொல்லிவிட்டாரே!

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உனை நேசிக்க ஆணையிடு...
    உன் அழகை ஆளவிடு...
    நேசிக்க ஆணையிடச்சொல்லி அவள் அழகை ஆள நினைக்கும் அனுகுமுறை மிக அழகு. வாழ்த்துக்கள் சங்கரன்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    16 May 2007
    Location
    B'lore
    Posts
    49
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    மிக்க நன்றி அமரன், லொல்லுவாத்தியார் & சிவா.ஜி

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    காதலியின் பிரிவை அருமையாக சொல்லிட்டிங்க சங்கர்....
    --
    துரத்தும் உன் விழிகளால்
    என் தூக்கம் தொலைந்ததடி,
    ------> உண்மையான வரி சங்கர்.
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •