என் நூறாவது பதிவை கவிதையாய் பதிய நினைத்து இந்த படைப்பை பதிந்திருக்கிறேன்.
உடன்பிறப்பே இல்லாதவனுக்கு
அண்ணா என்ற அழைப்பும்,
பெற்றோர் முகம் கானா பிள்ளைக்கு
மகனே என்ற விளியும்,
பத்துநாள் பட்டினி கிடந்தவனுக்கு
சாப்பிடவா என்ற குரலும்,
விபத்தில் சிக்கிய மகன்
பிழைப்பானோ என
பரிதவிக்கும் பெற்றோருக்கு
உயிருக்கு ஆபத்தில்லை என்ற
மருத்துவரின் கூற்றும்
எத்தனை இன்பத்தைக் கொடுக்குமோ
அத்தனையையும் கொடுத்தது கண்ணே
நீ என்னை காதலா என அழைத்தது!
Bookmarks