Results 1 to 8 of 8

Thread: வேசி

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    வேசி

    வேசி

    படுக்கைக்கு அழைக்கும்
    கண்களுமாய்..
    மனதை மயக்கும்
    வாசனையுமாய்..
    கிறங்கடிக்கும்
    ஆடையுமாய்..
    எல்லாம் உண்டு
    அவளிடம்..
    இருந்த போதும்
    கிராக்கி கிடைக்காத
    வேசியாகவே
    இருக்கின்றன
    கவிதைகள்...
    Last edited by விகடன்; 02-05-2008 at 11:53 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    ராம்பால் நம்ம வாசகர்கள் மேல்
    என்ன அவ்வளவு கோபம் உங்களுக்கு?

    ஒருத்தியிருந்தால் பரவாயில்லை............
    வரிசையாய் "பல" வேசிகள்
    காத்திருக்கிறார்கள் ஒவ்வ்ருநாளும்!
    இவளை அழைப்பதா?
    இல்லை அவளை அழைப்பதா
    என்றே குழம்பிப்போகிறோம்!
    அழைத்தாலும் இவளை அனுபவித்துவிட்டு
    அடுத்தவளிடம் ஓடும் அவசரம்!
    இவள் சுவையும் தெரிவதில்லை
    அவள் சுகமும் புரிவதில்லை!!
    புரிந்து கொண்டு நாம் இணைந்து
    ஒரு முடிவு எடுப்பது நல்லது!!
    Last edited by விகடன்; 02-05-2008 at 11:54 AM.
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    நான் வேசிகளை மதிப்பவன்... கவிதைகளையும்தான்..

    ஆனாலும் இந்த ஒப்பீடல் ரசிக்கமுடியாதவை....
    Last edited by விகடன்; 02-05-2008 at 11:54 AM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    என்னங்க ராம்பால்ஜி!

    கவிதைகள் எழுதுபவரது கற்பனையின் ஊற்று நீர். அதனை எவ்வாறு வேசியுடன் ஒப்பிட்டீர்கள்?

    இல்லை, படிப்பவர்கள் அதனை உதாசீனம் செய்வதுபோல் நடந்துகொள்வதால், அவர்களை வேசிகள் என்றீர்களா?!!

    ===கரிகாலன்
    Last edited by விகடன்; 02-05-2008 at 11:54 AM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  5. #5
    புதியவர்
    Join Date
    18 Apr 2003
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    விலைமாது போல் இந்த
    கலைமாது கவனிப்பாரற்று கிடப்பதைக்கூறுகின்றீர்கள்.
    மற்றவர் மனம்
    புண்படவேண்டுமென எழுதியிருக்க மாட்டார்
    கவிதையின் மேல் மற்றவர்
    கண்பட வேண்டுமென எழுதியிருப்பார்.
    ஆதங்கம் அர்த்தமானதுதானே
    கவிதா
    Last edited by விகடன்; 02-05-2008 at 11:54 AM.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    கண்பட வேண்டுமென எழுதியிருப்பார்.............-கவிதா.

    -எப்படி நவீனயுகத்தில் வரும் கவர்ச்சி விளம்பரங்கள் (பிளேடு விளம்பரத்தில் வரும் யுவதி!!) போன்ற யுக்தியா இது?!!!!!
    Last edited by விகடன்; 02-05-2008 at 11:54 AM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  7. #7
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    அனைவருக்கும்..
    நான் யாரையும் சாடவில்லை..
    இங்கு ஒரு தவறு செய்துவிட்டேன்..
    என் கவிதைகள் என்று குறிப்பிடாமல்
    கவிதைகள் என்று பொதுவாக கூறிவிட்டேன்..
    இந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்..
    மற்றபடி மற்றவர் மனம் புண்படும்படி நான் எதையும் எழுதுவதில்லை...
    ஆனால்,
    இந்தக் கவிதை கண்டு ஒருவரின்
    மனம் புண்பட்டுவிட்டது.
    அவர் கோபம் நியாயமானது..
    என்னிடம் விளக்கம் கேட்டு
    அந்த நண்பர் எனக்கு PM அனுப்பியிருக்கலாம்.
    அல்லது என் பதில் வரும்வரை கொஞ்சம் பொறுத்திருக்கலாம்..
    அதற்குப் பதிலாக
    இந்தக் கவிதை எப்படி இருந்திருக்க வேண்டும் என்று
    வகுப்பு எடுத்துவிட்டார்..


    வேசி என்று உருவகப்படுத்தியது தவறா?
    என்னைப் பொறுத்தவரை தவறில்லை.. இது கொஞ்சம் கம்மிதான்..

    லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில்
    அறுவெறுக்கத்தக்க, ஏற்றுக்கொள்ளமுடியாத, சகிப்புத்தன்மையை சோதனை செய்யக் கூடிய அளவிற்கு
    எழுதுவது என்று ஒரு வகை இலக்கியம் இருக்கிறது..
    அந்த வகை இலக்கியத்தில் எழுத்தப்பட்டவைகள் எல்லாம் மிகச்சிறந்த நூல்களாக உலகம்
    முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
    நம்மில் அந்த வகை இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்கள் மற்றும் எழுதப்பட்ட புத்தகங்களும் குறைவு..
    தமிழில் ஒரு எழுத்தாளர் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கு சவால்விடும் வகையில் எழுதிக்கொண்டிருக்கிறார்.
    அவர் பெயர் நல்ல பெரியவன். கிடைத்தால் படித்துப் பாருங்கள்..

    இந்த வேசி கவிதை அந்த வகை அல்ல..
    ஆனால், அந்த அளவிற்கு சர்ச்சை ஏற்படுத்திவிட்டதால்
    அந்த வகை இலக்கியம் சார்ந்த ஒரு கவிதை ஒன்றை உங்களுக்காக எழுதுகிறேன்..(நீங்கள் விருப்பப்பட்டால்)

    மற்றபடி யாரையும் கவரும் கவர்ச்சி விளம்பரம் போல் எல்லாம் இது கிடையாது.. என்னுடைய ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்..
    அவ்வளவே..

    இங்கு ஏதாகிலும் தவறாயிருந்தால், மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்..
    இது ராம்பால் எனும் கவிதை கிறுக்குபவனாக என்னுடைய பதில்...
    Last edited by விகடன்; 02-05-2008 at 11:55 AM.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    பெரிய, பெரிய வார்த்தைகள் எல்லாம் எழுதாதீர்கள்.....

    மன்னிப்பு கேட்க வேண்டிய அளவிற்கு அந்தக் கவிதையில் தவறு ஏதும் இருப்பதாகப் படவில்லை.

    இதே கருத்தை, நான் முன்னமே, வெட்கங்கெட்ட தாய் என்ற தலைப்பில் கூட எழுதியுள்ளேன். மேலும், பூ அவர்கள் எழுதிய கவிதைக்கு (சாமி..) நான் எழுதியிருக்கும் பதிலையும் படியுங்கள்.....

    தரமான பதிப்புகள் மதிப்பு பெறும்... சிறிது சிறிதாகத் தான் அதற்கு ஆதரவு பெருகும்.......

    காத்திருங்கள்......
    Last edited by விகடன்; 02-05-2008 at 11:55 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •