Results 1 to 11 of 11

Thread: வேலின்மேல் ஆணையிட்ட மன்னரும் மறப்பாரோ - ந

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0

    வேலின்மேல் ஆணையிட்ட மன்னரும் மறப்பாரோ - ந

    தமிழ் மன்ற ரசிகர்களே, இந்த கவிதை நான் எழுதியதில்லை.
    2000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய இந்த கவியை
    நான் மிகவும் ரசித்தேன், நீங்கள் ரசிப்பீர்கள் என்று உங்களுக்கு தருகிறேன்.

    இது முருகனுடைய பாடல், முருகன் வருவான் என்று நினைத்து பொருமை இல்லாமல் காத்திருந்த வல்லி,
    கோபத்தை முருகன் மீது செலுத்தாமல் அவனுடை வாகனத்தின் மீது செலுத்தினாள்

    மறவேன் மறவே னென்று வேலின்மேல் ஆணையிட்ட
    மன்னரும் மறப்பாரோ - நீல மயிலே!(மற)

    உருகி உருகி உள்ளம் அவரை நினைவதையும்
    உயிரும் கரைவதையும் - அறியாரோ மயிலே?(மற)

    அன்பர் வரவு நோக்கி இங்குதான் காத்திருக்க
    அன்னநடை பயில்வாயோ - வண்ண மயிலே!
    பெம்மான் உன் மேலே வரும் பெருமிதம் தலைக்கேறிப்
    பாதையை மறந்தாயோ - பேதை மயிலே!
    வன்மம் மனதில் கொண்டு வஞ்சம் தீர்க்க நினைந்து
    வழியில் உறங்கினாயோ - வாழி நீ மயிலே!(மற)

    தன்னிகரில்லாதான் தனயர்பால் மையல் கொண்ட
    மங்கைமீ திரங்காயோ - தங்க மயிலே!
    சொன்னாலும் நீ அறியாய் சொந்த அறிவுமில்லாய்
    உன்னை நொந் தாவதென்ன? - வன்கண் மயிலே!
    மன்னும் கரிபரிகள் புவியில் பல இருக்க
    உன்னை ஊர்தியாய்க் கொண்டோர் - தன்னையே நோகவேணும்(மற)


    எவ்வளவு எளிமையாக புரியும்படி இருக்கிறது என்று பாருங்கள்.
    இந்த பாடலை எழுதியது யார் என்று எனக்கு யாரவது கூற முடியுமா?
    இதுவரை என் சொந்த கருத்துகளை பதித்து வந்த
    இந்த மன்றத்தில் நான் முதல் முதலில் நான் எழுதாத பாடல் (பாடல் காப்பி பேஸ்ட் பண்ணியது)

    முக்கியத்துவம் கருதி பதித்தேன்,
    தவறு இருப்பின் மண்ணிக்கவும்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இந்தப்பாடலுக்கு கோட்டமட்ட போட்டியல் (பாடசாலை காலத்தில்) நடனமாடியதாக ஞாபகம். (சிரிக்கவேண்டாம்)
    பாடியது யாரென்று தெரியாது. 2000 ஆண்டுகளா,?முன்னர் அருணகிரி நாதர் என்று நினைத்திருந்தேன். தவிர இதை ஏன் இதை புதிய கவிதைகள், பாடல்கள் > காதல் கவிதைகள் ல் பதிந்துள்ளீர்கள்? விஷேட காரணமேதும் உளதா?
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by anpurasihan View Post
    முன்னர் அருணகிரி நாதர் என்று நினைத்திருந்தேன். தவிர இதை ஏன் இதை புதிய கவிதைகள், பாடல்கள் > காதல் கவிதைகள் ல் பதிந்துள்ளீர்கள்? விஷேட காரணமேதும் உளதா?
    இது வல்லி முருகன் மீது இருந்த காதலால் பாடியது
    அருனகிரிநாதரா, (நான் நாவுகரசராக இருக்கும் என்று நினைத்தேன்)
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    முருகனையும் வள்ளியையும் நம்மில் ஒருவராய் நிணைத்து அவர்களின் காதல் கவிதையையும் இந்த பகுதியில் பதிந்திருப்பார். கடவுளாய் இருந்தாலும் காதல் பொதுவானது. நன்றாக இருக்கிறது யார் எழுதியதென்பது எப்படியும் நம் மக்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் (நானும் முயற்சிக்கிறேன்)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அதெல்லாம் சரிங்க வாத்தியாரே! இது இடம் பெற வேண்டியது இலக்கியங்கள் பகுதியில்... மாற்றிவிடலாமா?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இது பா வாகையைச் சாராது இருக்கிறது.. ஆக இது இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டதல்ல... சமீப காலத்தில் எழுதப்பட்டது...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அப்படி போடுங்க ஆதவா ஆராய்ச்சியை ஆரம்பித்து விட்டீர்கள்.இனிதான் களைகட்டும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    இது பா வாகையைச் சாராது இருக்கிறது.. ஆக இது இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டதல்ல... சமீப காலத்தில் எழுதப்பட்டது...
    பா வகை அப்படினா என்னக்க புரியலியே
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    கிட்டத்தட்ட பாரதி காலத்தில் பா வகை இலக்கணங்கள் முறியடிக்கப்பட்டு கவிதை எழுதப்பட்டது. பா நான்கு வகைகள் உண்டு. அது போக பல விருத்தங்களும் சிந்துக்களும் பல இலக்கணங்கள் உண்டு.. இந்த் பாவகையில் ஆசிரியப்பா விருத்தமும் வெண்பாவும் எனக்குத் தெரியும். மன்றத்தில் எழுதியிருக்கிறேன். ஆக ஒரு நூறு வருடங்களுக்குள் எழுதப்பட்ட கவிதையாக இது இருக்கும்.. இதை அசைபிரித்தால் பா வருவதில்லை . அதோடு சீர் வகைகள் சீராக இல்லை..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    ஆக ஒரு நூறு வருடங்களுக்குள் எழுதப்பட்ட கவிதையாக இது இருக்கும்.
    ஆதவா, இந்த பாடல் அமரர் கல்கி எழுதிய சிவகாமியின் சபதத்தில் எழுதி இருகிறார்
    அந்த கதை 2000 வருடங்களுக்கு முன் ஆட்சி செய்த பல்லவரல் காலத்தின் கதை
    கல்கி அவரின் கதைகளை சர்வ ஜாக்கிரதையாக எழுதும் குண்ம் கொண்டவர்
    அந்த கால கதைக்கு இந்த காலத்து பாடல் போட மாட்டார்.
    ஆகையால் இது மிக பழைய பாடலாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது
    இதொ அந்த சுட்டியை தேடி உங்களுக்கு தருகிறேன்.
    http://www.chennailibrary.com/kalki/ss/ss3-14a.html
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இந்தப்பாடலுக்கு கோட்டமட்ட போட்டியல் (பாடசாலை காலத்தில்) நடனமாடியதாக ஞாபகம். (சிரிக்கவேண்டாம்)
    சிரிக்க வேண்டாம் என்று சொல்வதைப்பார்த்தால் அன்று பலர் சிரித்திருக்கிறார்கள் போலும்.

    அந்த நடனம்தானாம் ஆரம்ப நிகழ்ச்சியாக போடப்பட்டு இறுதியாக்கப்பட்டதாக(தங்களின் ஆட்டத்திறமையால்) கேள்வி.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •