தமிழ் மன்ற ரசிகர்களே, இந்த கவிதை நான் எழுதியதில்லை.
2000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய இந்த கவியை
நான் மிகவும் ரசித்தேன், நீங்கள் ரசிப்பீர்கள் என்று உங்களுக்கு தருகிறேன்.
இது முருகனுடைய பாடல், முருகன் வருவான் என்று நினைத்து பொருமை இல்லாமல் காத்திருந்த வல்லி,
கோபத்தை முருகன் மீது செலுத்தாமல் அவனுடை வாகனத்தின் மீது செலுத்தினாள்
மறவேன் மறவே னென்று வேலின்மேல் ஆணையிட்ட
மன்னரும் மறப்பாரோ - நீல மயிலே!(மற)
உருகி உருகி உள்ளம் அவரை நினைவதையும்
உயிரும் கரைவதையும் - அறியாரோ மயிலே?(மற)
அன்பர் வரவு நோக்கி இங்குதான் காத்திருக்க
அன்னநடை பயில்வாயோ - வண்ண மயிலே!
பெம்மான் உன் மேலே வரும் பெருமிதம் தலைக்கேறிப்
பாதையை மறந்தாயோ - பேதை மயிலே!
வன்மம் மனதில் கொண்டு வஞ்சம் தீர்க்க நினைந்து
வழியில் உறங்கினாயோ - வாழி நீ மயிலே!(மற)
தன்னிகரில்லாதான் தனயர்பால் மையல் கொண்ட
மங்கைமீ திரங்காயோ - தங்க மயிலே!
சொன்னாலும் நீ அறியாய் சொந்த அறிவுமில்லாய்
உன்னை நொந் தாவதென்ன? - வன்கண் மயிலே!
மன்னும் கரிபரிகள் புவியில் பல இருக்க
உன்னை ஊர்தியாய்க் கொண்டோர் - தன்னையே நோகவேணும்(மற)
எவ்வளவு எளிமையாக புரியும்படி இருக்கிறது என்று பாருங்கள்.
இந்த பாடலை எழுதியது யார் என்று எனக்கு யாரவது கூற முடியுமா?
இதுவரை என் சொந்த கருத்துகளை பதித்து வந்த
இந்த மன்றத்தில் நான் முதல் முதலில் நான் எழுதாத பாடல் (பாடல் காப்பி பேஸ்ட் பண்ணியது)
முக்கியத்துவம் கருதி பதித்தேன்,
தவறு இருப்பின் மண்ணிக்கவும்
Bookmarks