எங்கே இருக்கிறாய்?
என்னென்னவோ ஆசைகள்
எத்தனையோ ஏக்கங்கள்
எல்லாம் நிறைவேற
என் தேவதையே
எங்கே இருக்கிறாய் நீ
எனக்கென்றால்
நீ பதற
உனக்கென்றால்
நான் பதற
என்னுள் நீயுமாய்
உன்னுள் நானுமாய் மாற
எங்கே இருகிறாய் நீ
உன் முகம் கண்டு
என் வேதனை அகல
சிறுபுன்னகை தந்து
வரவேற்க
எங்கே இருக்கிறாய் நீ
நான் துவண்டுவிழும்
போதெல்லாம் என்னை
உன் மார்பணைத்து
ஆறுதல் சொல்ல
எங்கே இருக்கிறாய் நீ
நான் ஏறும்
வெற்றிப்படிகளெல்லாம்
உன்னாலே என்று
நான் சொல்லி
பூரிப்படைய
எங்கே இருக்கிறாய் நீ
இரவெல்லாம் பகலாக
பகலெல்லாம் இரவாக
இரவும் பகலும்
இரண்டறக் கலந்து
என்னை மறந்து
உன்னில் கலந்திருக்க
எங்கே இருக்கிறாய் நீ
எங்கேயோ பிறந்து
எங்கேயோ வளர்ந்து
என்னை கரம்பிடித்து
என் இதயம்
கொள்ளை கொள்ள வருபவளே
எங்கே இருகிறாய் நீ
Bookmarks