உலகத்தை பார்க்கும் முன்
உன் உலகத்தில் உதித்தேன்
உருவங்கள் கானும் முன்
உதிரத்தில் வளர்ந்தென்
உலகத்தில் வந்தபின்னும்
உன் உதிரத்தை ஊட்டி
உலகத்தில் மனிதனாய்
உருவங்களில் ஒருவனாய்
பிறந்த நான் பாரங்கள் இன்றி
பிறப்பில் துன்பங்கள் இன்றி
பிடித்த என் கைகளுடன்
பிடிவதாம் பிடித்த என்னை
அன்பால் அனணத்து முத்தங்கள் கொடுத்து
அருமையாய் வளர்த்தாய் - இறைவன்
அருள் எனக்கு கிடைக்க திருமறையை போதித்தாய்
அழுகாய் என்னை வளர்த்து மகிழ்ந்தாய்
நல்ல வழிகள் பொதித்து
நல்லவனாய் வளர்த்தாய்
நன்னேறியில் நடத்திட
நடவடிக்கைகள் பல எடுத்தாய்
தந்தையில் கண்டிப்பில் கடினம் இருக்கையில்
தவமேடுத்தவன் என்று தடுத்து விட்டாய்
தவறுகள் செய்தேன் தனித்து கண்டித்தாய்
தாவிடும் வயதினில் தாரக மந்திரம் நீ
வாழ்வில் என் உயிர் நீ
வாழ்கையில் என் படி நீ
வளர்ச்சியின் அடிப்படை நீ என்
வாழ்வு முழுவதும் உனக்கே சொந்தம்
என் அன்பு அன்னையே
என் நன்றிகள் கொட்டி கொடுத்தாலும்
தகுமா உன் அன்புக்கு ஈடாக...
Bookmarks