அழியும்..
அல்லது அழிக்கப்படும்...
அல்லலோடுதான் கழிகிறது
ஒவ்வொரு இந்திய இரவும்!!..
அடிமைத்தனமாயிருந்த
இந்தியாவை அடிபட்டு
அடமானம் மீட்ட
அரசியல் மருகிப்போய்
மறுஜென்மமெடுத்தாலும்
பங்குண்டென்று
புள்ளிவிவரம் சொல்லுமளவு
மனச்சாட்சியில்லா கடன்....
அன்று வெள்ளையனிடம் மீட்டதை
அவனிடமே அடகுவைக்கும்
அவலச்செயல்......
"ஆட்சிக்கு வந்தால்
கடனை ஒழிப்போம்....
உலக வங்கியின் கிளை
உங்களூரில் திறக்கப்படும்" -
கைகொட்டுகிறது தொண்டர்படை..
கசிந்துருகிறது
தொண்டைக்குழிக்குள்
இந்தியதேசத்தின் பெருமைகள்
மென்றுதின்னப்படுவது கண்டு...
அஸ்ஸாமில் உல்·பா..
ஆந்திரத்தில் நக்ஸலைட்..
காழ்மீரில் லஷ்கர்-இ...
தமிழகத்தில் அல்-உம்மா..
ஆளுக்கால் குத்தகை
முத்திரை இல்லா டெண்டரில்...
மொத்த தேசத்தின்
மீதி இடங்களும் குத்தகை..
நாம் சீல் போட்டு
அணுப்பிய சீலர்களால்...
சீக்கியத் தீவிரவாதி
சுட்டதில் இருவர் பலி...
இரத்தம் கொதிப்பதாய்
புகைவிட்டான் குடிமகன்..
மிச்சம்போட்ட
சிகரெட் துண்டால்
துடிதுடித்து இறந்தன
இருபது உயிர்கள்.....
இருவருக்குமென்ன வித்தியாசம்??!!!..
சாதனை இந்தியாவிற்கு
கனவு காண்கிறோம்..
சத்தமில்லா வாழ்க்கையை
தொலைத்துவிட்டு..
"மனிதனாய் பிறந்திட மாதவம்" -
புத்தங்கங்கள் தீக்குளிக்கும்..
புதைந்துபோகும் மனிதநேயத்தால்..
இந்த இந்தியா..
இனிய இந்தியாவாய்
எப்போது உருவெடுக்கும்?!!..
விடைதெரியா கேள்விகள்..
கேட்டு கேட்டு
அலுத்துப்போன இன்னொரு
இந்தியன்.......
Bookmarks