Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: முட்டை யாருக்கு

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    முட்டை யாருக்கு

    ஒரு காலணியில் அடுத்தடுத்த வீடுகளில் ஒரு இந்தியனும் ஒரு பாகிஸ்தானியும் இருந்தார்கள்.
    இந்தியன் வளர்த்து வந்த கோழி ஒரு நாள் பாகிஸ்தானி வீட்டில் சென்று முட்டை இட்டுவிட்டது.
    அது தெரிந்ததும் இந்தியன் போய் முட்டையை கொடு என்று கேட்டான்.
    பாகிஸ்தானி என் வீட்டில் இட்ட முட்டை எனக்குத்தான் சொந்தம் அதனால் தரமுடியாது என்று சொன்னான்.
    இந்தியன் கோழி என்னுடயதுதானே அதனால் முட்டை எனக்குத்தான் சொந்தம் என்றான்.வாக்குவாதத்தின் முடிவில் இந்தியன் சொன்னான்,
    இப்படி ஏதாவது தீர்க்கமுடியாத பிரச்ச்சினை என்றால் வீரர்கள் வழக்கமாக செய்யும் ஒரு வழி இருக்கிறது நாமும்
    அதையே செய்வோமா என்றான். என்ன அது என்று கேட்டதற்கு இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் உதைத்துக்கொள்ளவேண்டும்
    உதை வாங்கிய பிறகு எழுந்துகொள்ள யார் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்களோ அவர்கள் தோற்றவர்கள்.
    ஜெயித்தவர்கள் முட்டையை எடுத்துக்கொள்ளலாம் என்றான்.பாகிஸ்தானியும் ஒத்துக்கொண்டான்.
    முதலில் இந்தியன் உதைப்பதாக சொல்லிவிட்டு வீட்டிற்கு போய் இருப்பதிலேயே கணமனா பூட்ஸை போட்டுக்கொண்டு
    வந்து பாகிஸ்தானியின் அடி வயிற்றில் ஓங்கி ஒரு உதை விட்டான். ஐயோ என்று அலறிக்கொண்டு கீழே விழுந்த பாகிஸ்தானி
    அரை மணி நேரம் கழித்து எழுந்து இந்தியனைப்பார்த்து இப்போது என்னுடய சான்ஸ் என்று தயாரானான்.
    இந்தியன் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், பாகிஸ்தானியைப்பார்த்து "முட்டையை நீயே வைத்துக்கொள்" என்று சொல்லிவிட்டு போய் விட்டான்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மன்னித்து விடுங்கள் சிவா. சிரிக்கத் தோன்றவில்லை. காரணம் புரியவில்லை. மன்னித்து விடுங்கள்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    இதற்கு என்ன பிரதிபலிப்பை காட்டுவது என்று குழம்பிப்போய் உள்ளேனையா!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    இதில் இந்தியா பாக்கிஸ்தான் தேவையில்லாதது சாதார்னமாக செல்லியிருக்காலாம்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    இது போன்ற போட்டிக் கதைகள் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கின்றன. உண்மையா பொய்யா என்பதை விடச் சுவாரசியமானவைகள்.

    கம்பரும் கூத்தரும் காவிரிக்கரையில் நின்றிருந்தார்களாம். கூத்தரின் காலைத் தடவிய நீர் ஓடி கம்பரின் காலைத் தொட்டு அப்படியே ஓடியதாம். உடனே கூத்தர் "என் காலைத் தொட்ட நீர்தான் உம்மை நனைக்கிறது" என்றாராம்.

    உடனே கம்பர், "நீரே வந்து காலில் விழுந்தால் என்ன செய்வது?" என்றாராம்.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கம்பரின் பதில் சிலேடையாக இருக்கின்றதே.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by gragavan View Post

    உடனே கம்பர், "நீரே வந்து காலில் விழுந்தால் என்ன செய்வது?" என்றாராம்.
    மிகவும் இரசித்தேன். இப்படிப்பட்ட புத்தகங்களை ஏங்கு பெறமுடியும்? இ.புத்தகமிருந்தால் அனுப்பிவையுங்களேன். அனுபவித்து விடுகிறேன்!

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by java View Post
    மிகவும் இரசித்தேன். இப்படிப்பட்ட புத்தகங்களை ஏங்கு பெறமுடியும்? இ.புத்தகமிருந்தால் அனுப்பிவையுங்களேன். அனுபவித்து விடுகிறேன்!
    தெரியலையே ஜாவா. இதை எங்கோ எப்போதோ படித்தேன். எதிலென்று மறந்து விட்டது.

    ஆனால் புகழேந்திக்கும் ஒட்டக்கூத்தருக்கும் நடந்த செய்யுட் போட்டியும் சுவையானது.

    புகழேந்தி பாண்டிநாடு. கூத்தர் சோழநாடு. சோழன் பாண்டிமகளைக் கட்டியதால் சோழநாட்டுக்குச் சென்றார். தமிழ் வளர்க்கத்தான்.

    அங்கு காவிரிக்கு வைகையா? புலிக்கு மீனா? உறையூருக்கு மதுரையா என்று கேள்விகளை அடுக்க.

    இவரும்...வைகையின் பெருமை...திருமாலின் முதலவதாரம் மீனா புலியா? ஈசன் 64 திருவிளையால் புரிந்தது மதுரையா உறையூரா என்று பதில் சொல்லியிருக்கிறார். இவை செய்யுள் வடிவில் உள்ளன. அம்மானை என்ற பாடல் வகையில்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    நீங்கள் சொல்லத்தான் ஞாபகம் வருகிறது.
    ஒரு படத்தில் சிறுவயதில் பார்த்தது.
    ஒரு வினா பெண்ணைப்பார்த்து கேட்கப்படுகிறது... "இலையிலே சிறிய இலை" எதென்று. அதற்கு அந்தப்பெண் பதிலளிக்கிறால் அதுவும் வினாவடியிலே..
    "பூவிலே இரண்டுநிறப் பூ எது" என்று...

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by java View Post
    நீங்கள் சொல்லத்தான் ஞாபகம் வருகிறது.
    ஒரு படத்தில் சிறுவயதில் பார்த்தது.
    ஒரு வினா பெண்ணைப்பார்த்து கேட்கப்படுகிறது... "இலையிலே சிறிய இலை" எதென்று. அதற்கு அந்தப்பெண் பதிலளிக்கிறால் அதுவும் வினாவடியிலே..
    "பூவிலே இரண்டுநிறப் பூ எது" என்று...
    கொஞ்சம் விளக்குங்களேன். புரியவில்லை...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by agnii View Post
    கொஞ்சம் விளக்குங்களேன். புரியவில்லை...
    இப்போதுதான் ஞாபகம் வருகிறது.

    முதற் கேள்வி: எள்ளிலும் மிகச்சிறிய இலை என்ன ? என்பது

    பதிலாக: பூவிலே இரண்டு நிறப்பூ எது? என்பது.

    இரண்டிற்குமே ஒரு விடைதான். அதுதாங்க "விடத்தல்"

    விடத்தில் இலைதான் எள்ளை விட சிறிய இலை.
    அதன் பூ இரண்டு நிறத்திலிருக்கும். ஒரு பூவிலேயே இரண்டுநிரமும் இருக்கும்.

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by java View Post
    இப்போதுதான் ஞாபகம் வருகிறது.

    முதற் கேள்வி: எள்ளிலும் மிகச்சிறிய இலை என்ன ? என்பது

    பதிலாக: பூவிலே இரண்டு நிறப்பூ எது? என்பது.

    இரண்டிற்குமே ஒரு விடைதான். அதுதாங்க "விடத்தல்"

    விடத்தில் இலைதான் எள்ளை விட சிறிய இலை.
    அதன் பூ இரண்டு நிறத்திலிருக்கும். ஒரு பூவிலேயே இரண்டுநிரமும் இருக்கும்.
    இப்ப புரிஞ்சுடுத்து. இதுதான் முன்னமே கேட்கப்பட்டிருந்தாலும், இப்படி விளக்கம் தந்தால்தான் புரிந்திருக்கும். நன்றி...
    Last edited by அக்னி; 26-05-2007 at 07:28 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •