ஒரு காலணியில் அடுத்தடுத்த வீடுகளில் ஒரு இந்தியனும் ஒரு பாகிஸ்தானியும் இருந்தார்கள்.
இந்தியன் வளர்த்து வந்த கோழி ஒரு நாள் பாகிஸ்தானி வீட்டில் சென்று முட்டை இட்டுவிட்டது.
அது தெரிந்ததும் இந்தியன் போய் முட்டையை கொடு என்று கேட்டான்.
பாகிஸ்தானி என் வீட்டில் இட்ட முட்டை எனக்குத்தான் சொந்தம் அதனால் தரமுடியாது என்று சொன்னான்.
இந்தியன் கோழி என்னுடயதுதானே அதனால் முட்டை எனக்குத்தான் சொந்தம் என்றான்.வாக்குவாதத்தின் முடிவில் இந்தியன் சொன்னான்,
இப்படி ஏதாவது தீர்க்கமுடியாத பிரச்ச்சினை என்றால் வீரர்கள் வழக்கமாக செய்யும் ஒரு வழி இருக்கிறது நாமும்
அதையே செய்வோமா என்றான். என்ன அது என்று கேட்டதற்கு இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் உதைத்துக்கொள்ளவேண்டும்
உதை வாங்கிய பிறகு எழுந்துகொள்ள யார் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்களோ அவர்கள் தோற்றவர்கள்.
ஜெயித்தவர்கள் முட்டையை எடுத்துக்கொள்ளலாம் என்றான்.பாகிஸ்தானியும் ஒத்துக்கொண்டான்.
முதலில் இந்தியன் உதைப்பதாக சொல்லிவிட்டு வீட்டிற்கு போய் இருப்பதிலேயே கணமனா பூட்ஸை போட்டுக்கொண்டு
வந்து பாகிஸ்தானியின் அடி வயிற்றில் ஓங்கி ஒரு உதை விட்டான். ஐயோ என்று அலறிக்கொண்டு கீழே விழுந்த பாகிஸ்தானி
அரை மணி நேரம் கழித்து எழுந்து இந்தியனைப்பார்த்து இப்போது என்னுடய சான்ஸ் என்று தயாரானான்.
இந்தியன் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், பாகிஸ்தானியைப்பார்த்து "முட்டையை நீயே வைத்துக்கொள்" என்று சொல்லிவிட்டு போய் விட்டான்.
Bookmarks