Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: கல்யாணசாப்பாடு

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    கல்யாணசாப்பாடு

    சம்பந்தம் ஊரில் ஒரு கல்யாணத்தையும் விட்டு வைக்க மாட்டார்.முந்தாநாள் ரோட்டில் பார்த்த நபர் பத்திரிக்கை
    கொடுத்தாலும் கண்டிப்பாக போவார்.
    எதற்கு என்றா கேட்கிறீர்கள்? பந்திக்குத்தான்.நல்ல சாப்பாட்டு ப்ரியர்.25 ரூபாய் மொய் கொடுத்துவிட்டு
    50 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு வருவார்.
    வீட்டில் முதிர்கன்னியாய் ஒரு மகள் இருப்பதை பற்றி கவலைப்படாமல்,அவளின் கல்யாணத்தைப்பற்றி
    யோசிக்காமல் ஊதாரித்தனமாய் ஊர் சுற்றும்
    இவருக்கு மகளை கட்டிக்கொடுத்து அணுப்ப மனமில்லை.காரணம் அவள் கொண்டு வரும் சம்பளம்.
    ஆர்த்தி, அப்பாவின் போக்கு பிடிக்கவில்லை என்றாலும்
    அனுசரித்து போகும் பெண்.அவளுக்குள்ளும் காதல் பூத்தது.
    அவளை அவளாகவே நேசிக்கும் ஒருவன் கிடைத்தபோது அவளால் அந்த காதலை ஒதுக்க முடியவில்லை.
    சம்பந்தத்துக்கு இந்த காதல் தெரியவந்தபோது ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் குதித்து,
    அழகாய் பூத்திருந்த அந்த உறவை கொச்சைப்படுத்தி கூறு போட்டுவிட்டார்.
    எப்போதும் அனுசரித்து போகும் ஆர்த்தி இந்த சம்பவத்துக்கு பிறகு ஒரு அழுத்தமான மவுனத்துடன் இருந்தாள்.
    அப்பாவை நேரிடும்போது மட்டும் அருவெறுப்பான
    ஒரு பார்வையை பார்த்துவிட்டு ஒதுங்கிவிடுவாள்.
    வழக்கம்ப்போல் ஓடி ஓடி ஊரார் கல்யாண சாப்பாட்டை அனுபவித்துக்கொண்டிருந்த சம்பந்தம் அதிர்ந்து போனது,
    அன்று அலுவலகம் போன ஆர்த்தி மாலையில்
    வீடு திரும்பவில்லை என்று அறிந்தபோது.மூன்று நாட்கள் ஆகியும் ஆர்த்தி வீடு திரும்பவில்லை.
    மகள் வராத வருத்தத்தை விட வருமானம் வராது என்ற கவலைதான் அவருக்கு.
    அந்த எரிச்சலில் மனைவியிடம் கத்திக்கொண்டிருந்தபோதுதான் அந்த கடிதம் வந்தது.
    "திருவாளர் சம்பந்தம் அவர்களுக்கு
    இத்துடன் இனைத்துள்ள கல்யாணப்பத்திரிக்கை உங்களுக்கு
    மகளாய் பிறந்த துரதிஷ்டசாலி ஆர்த்தியுடையது.
    எனக்கு கண்டிப்பாய் தெரியும் நீங்கள் அவசியம்
    இந்த திருமணத்திற்கு வருவீர்கள் என்று.
    வந்து அவசியம் சாப்பிட்டுவிட்டு மறக்காமல்
    எப்போதும் கொடுக்கும் அந்த மொய் பணமான
    25 ரூபாயை கொடுத்துவிட்டுப்போங்கள்
    அதையே நீங்கள் எனக்கு கொடுத்த சீதனமாய்
    வைத்துக்கொள்கிறேன்.

    இப்படிக்கு
    ஆர்த்தி

    பின் குறிப்பு:அப்பாவாய் உங்கள் கடமையை நீங்கள் செய்ய தவறியிருந்தாலும்,
    மகளாய் என் கடமையை மறக்கவில்லை,நீங்களும் அம்மாவும் இருக்கும்வரை
    என் பணம் உங்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    நெத்தியடிக் கதை...
    ஆனால், தாய் என்ன பாவம் செய்தார்? அவருக்கு ஏன் இந்த பிரிவு?
    தவிர்க்கமுடியாததுதான்... ஆனால் கேட்டுவிட்டேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எப்படி இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு தாயை பிரிந்துதானே ஆக வேண்டும் நன்பரே.பாராட்டுக்கு மிக்க நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by sivag View Post
    எப்படி இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு தாயை பிரிந்துதானே ஆக வேண்டும் நன்பரே.பாராட்டுக்கு மிக்க நன்றி.
    அதற்காக இப்படியான பிரிதல் வலியைத்தான் தரும். மேலும், அந்தப்பாத்திரம் இக்கதையில் முக்கியமில்லாததாகையால் பாதிப்பு பெரிதாகவில்லை.
    Last edited by அக்னி; 26-05-2007 at 10:15 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    ஒரு அழகிய ஒரு பக்க சிறுகதை
    பாராட்டுக்கள்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க நன்றி சுட்டி. தமிழ்மன்றத்தில் என்னுடைய முதல் கதை இது. பாராட்டுக்களும் விமர்சனங்களும் என்னை பண்படுத்தும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    அருமையா கதை
    சாரி உன்மை

    இந்த மாதிரி மகளின் சம்பளத்தில் வயற்றை கழுவும் அப்பன்களை நான் பலபேரை நேரில் பார்த்திருகிறேன்.

    எனக்கு தெரிந்த இந்த மாதிரி அனைத்து மகள்களும் ஓடு போய் தான் கல்யானம் செய்தார்கள், வேறு வழி.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by sivag View Post
    மிக்க நன்றி சுட்டி. தமிழ்மன்றத்தில் என்னுடைய முதல் கதை இது. பாராட்டுக்களும் விமர்சனங்களும் என்னை பண்படுத்தும்.
    முதல் கதையா...?
    கன்னிப்படைப்பிற்கு வாழ்த்துக்கள்...
    அப்படியானால் இன்னும் இன்னும் உங்களிடம் எதிர்பார்க்கலாம்...

    கன்னிமுயற்சிக்கு 50 iCash.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி அக்னி.தமிழ்மன்ற நன்பர்களின் ஆதரவோடு ஒரு ரவுண்டு வருவோம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    வாழ்த்துக்கள் அருமையான கதை
    முகத்துவாரத்திற்கு இதை சிபாரிசு செய்கிறோன்
    Last edited by மனோஜ்; 26-05-2007 at 01:57 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க நன்றி மனோஜ்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    விவாதங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் சமூகத்தில் இருக்கும் சிலருக்கு சாட்டையடி கொடுத்திருக்கின்றீர்கள் சிவா. ஒருவர் திருமணத்துக்கு அழைக்கும்போது கூட்டமாகப் போய் சாப்பிட்டு விட்டு வெட்டி நியாயம் பேசி விட்டு தம்பூலம் தரித்து வீடு திரும்பும் சில குடும்ப உறுப்பினர் வயது ஏறிக்கொண்டிருக்கும் மகள்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அப்ப்டியான ஒரு தந்தைக்கு சாட்டை அடி கொடுத்து ஒரு மகள் பாத்திரத்தை உருவாக்கி பெண்மையை உயர்த்தி விட்டீர்கள். பாராட்டுகள்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •