Results 1 to 9 of 9

Thread: ஒருதலைக் காதலனின் உளறல்கள்.....

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    ஒருதலைக் காதலனின் உளறல்கள்.....

    தினமும் பூக்கிறது
    என்வீட்டு ரோஜாச்செடி..
    ஐந்தறிவுக்குள்ள உணர்வு
    உனக்கில்லாமல் போனதின் அர்த்தம்?!..

    சூரியன்தான்
    எனக்கும் என் உணர்வுகளுக்கும்
    உந்துசக்தியாய்..
    மாலையில் வீழ்ந்தாலும்
    மறுநாள் எழச்சொல்லும்
    மாமந்திரம்..

    உணவும் உறக்கமும் மட்டுமே
    மறந்துவிட்டதென நினைத்தேன்..
    உணர்வுகளும்தான்.. -
    நினைவூட்டுகிறது மருத்துப்போன
    உன் மனது...

    உன்னில் நானிருக்கிறேன்
    என்னில் நீயிருக்கிறாய்
    நன்றாக உணர்கிறது
    நமக்கும் வெளியே நிற்கும் காதல்....

    ஆலயம் செல்லாமல்
    உன்னத கடவுளை கைதொழுகிறேன்..
    காதலெனும்...

    என் தலையணைகள்
    கதறியழுகின்றன...
    கனக்கிறதாம் கண்ணீர்த் திவலைகள்
    தலைச்சுமையைக் காட்டிலும்...

    நிலவுக்கு துணையாய்
    நியமித்தாய்..
    நித்தமும் மௌனமொழிகளால்
    கொன்றுவிட்டு போகிறாய்...

    உன் இதழ்கள்
    காதலென விளித்தாலொழிய
    என் இரவுகள்
    மொட்டைமாடிகளைவிட்டு
    வெளியேறும்....

    உணர்வுகளால்
    உருவான காதல்... உணர்ந்துகொள்ளும்
    காதலை...
    உணர்ச்சிகளால் வடிக்கப்பட்ட
    உன்னால்
    உன் இதயக்கோயிலில்
    ஒளியாக்க முடியாதா?!!.....

    சொல்.. இல்லையேல்..கொல்..
    செய்வதா... செத்து மடிவதா?!!..
    Last edited by பூமகள்; 24-07-2008 at 10:22 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #2
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    காதல்தரும் வலி சுகமான போதை..

    என் தலையணைகள்
    கதறியழுகின்றன...


    இந்த வரிகளில் தெரிகிறது மொத்தக் காதலின் ஏக்கம்..
    நான் லயித்த வரிகள் இவைகள்..

    பாராட்டுக்கள் காதல் கவியே...
    Last edited by பூமகள்; 24-07-2008 at 10:23 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    Re: ஒருதலைக் காதலனின் உளறல்கள்.....

    உன்னில் நானிருக்கிறேன்
    என்னில் நீயிருக்கிறாய்
    நன்றாக உணர்கிறது
    நமக்கும் வெளியே நிற்கும் காதல்....
    உன்னுள் நானும்,
    என்னுள் நீயும்
    இருக்கையிலே
    காதல் வெளியேறி விட்டதா?

    புதுமையான கருத்தாக இருக்கிறதே?

    காதல் இன்னமும் ஆழமாக உள்ளே அல்லவா சென்றிருக்க வேண்டும்?
    கொஞ்சம் விளக்க முடியுமா?
    Last edited by பூமகள்; 24-07-2008 at 10:26 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    நண்பரே.........

    தலைப்பைப் பாருங்கள்..(உளறலைத்தவிர்த்து..) அவன் ஒருதலைக்காதலன்..
    அவர்களிடம் காதல் இருக்கிறது.. ஆனால் அது வெளிப்படாமல் உள்ளது.. வெளிப்படுத்தப்படாமல் உள்ளது.. அந்த ஊமைகளைக்கண்டு காதல் எட்டிநின்று சிரிக்கிறது.. உங்களுக்குள் இருக்கும் என்னை வெளியேற்றிவிட்டு என்னைத் தேடுகிறீர்களேவென....

    பொதுவாய் விளக்கம் தந்து ஒரு கவிதை புரியப்பட வேண்டும் என்பதில் விருப்பம் இல்லாதவன் நான்!!.
    Last edited by பூமகள்; 24-07-2008 at 10:27 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    கைக்கிளை என்றால் மடலேறுவதுதானே! அப்படியாவது அவள் மனம் இறங்குகிறாளா என்று பார்க்கலாம்.
    Last edited by பூமகள்; 24-07-2008 at 10:27 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    உன்னில் நானிருக்கிறேன்
    என்னில் நீயிருக்கிறாய்
    நன்றாக உணர்கிறது
    நமக்கும் வெளியே நிற்கும் காதல்....
    கற்பனையில்
    ஒன்றாக நாமிருக்க..
    விலகி இருக்கிறது
    காதல் நிஜத்தில்..

    என் தலையணைகள்
    கதறியழுகின்றன...
    கனக்கிறதாம் கண்ணீர்த் திவலைகள்
    தலைச்சுமையைக் காட்டிலும்...
    பல்லாயிரம் கனவுகள்
    சுமந்த விழிகள்..
    வெளியேற்றும் கனவுத் துளிகள்..
    கனக்கத்தானே செய்யும்??


    ஒரு தலைக் காதலை..
    இதம் தரப் படைத்த பூ அண்ணாவுக்கு எனது அன்பு பாராட்டுகள்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    வலிகளில் எத்தனை சுகங்கள்...
    காதலில் மட்டம்..

    வாழ்த்துக்கள்..

    தொடர்க இன்னும்..
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by shibly591 View Post
    வலிகளில் எத்தனை சுகங்கள்...
    காதலில் மட்டம்..
    காதல் மட்டமா ஷிப்லி அண்ணா??

    ஹை நல்லா சிண்டு முடிஞ்சி விட்டுட்டேனே...!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    மட்டும் என்பதே சரி...சுட்டிக்காட்டியமைக்கு கோடி நன்றிகள்
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •