சொல்லாமல் சொல்லும்
சொல்லின் பொருள்போலாகும்!
புரிந்ததுபோல் நிமிர்ந்திருப்பின்
புதிராய் புன்னகைக்கும்!
வாழுகின்ற நிலைக்காய்
சேர்ப்பார் செல்வம்தனை
செல்வம் தனித்து நிற்க
வாழ்வு முடிந்து போகும்!
உரிமையாய், உயர்வோரைக்
கீழிறக்கும் வீணருக்கும் வாழ்வு தரும்!
அடுத்த நொடி உணராத கூட்டம்
அடுக்கடுக்காய் தவறுகள் செய்வதில் நாட்டம்!
மண்ணோடு மறைவதற்கே
பிறவியென்பது போலே மன்றாடும் ஓட்டம்!
ஆராய எண்ணும்போதே முடிந்திருக்கும்
அதற்குப் பெயர்தான் வாழ்க்கை!!!
Bookmarks