இங்கிலாந்தை சேர்ந்த வேதியல் நிபுணர்கள், மற்றும் டாக்டர்கள் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி செயற்கை ரத்தத்தை உருவாக்கி உள்ளனர்.இந்த செயற்கை ரத்தம் பிளாஸ்டிக் மூலக்கூறுகளால் ஆனது. அவற்றில் உள்ள இரும்பு அணுக்கள் ஹீமோ குளோபின்களாக செயல் படும். இவை ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்லும்.
இந்த புதிய செயற்கை ரத்தத்தை போர் முனைகளில் ராணுவத்தினர், மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கு அவசர தேவையாக செலுத்தி உயிர் இழப்பை தடுக்க முடியும். ஆம்புலன்சுகளில் அதிக அளவு இந்த செயற்கை ரத்தத்தை எளிதாக எடுத்துச் செல்லவும் முடியும்.
லண்டனில் 22-ந் தேதி தொடங்கும் விஞ்ஞான கண்காட்சியில் இந்த செயற்கை ரத்தம் பார்வைக்கு வைக்கப்பட்டுகிறது
Bookmarks