என் இதயப் பூங்காவில் - ஒரு
அழகான தாமரைக்குளம்
கொக்குகள் பறந்தோடி வருகின்றன
தீன் தேடித் தினம்தோறும்.
தீன் கிடைக்காக் கொக்குகள்
அக்கம் பக்கம் பார்த்துவிட்டு
பக்கத்து குளங்களிற்கு
பறந்தோடி விடுகின்றன
ஒரே ஒருகொக்கு மட்டும்
தினமும் வருகின்றது
வறண்டு போன குளத்தில்
காதல் தவம் புரிகிறது.
அது தாமரைக்குளத்தை
சொந்தமாகக் கேட்கின்றது
என்ன பதில் சொல்ல?
வறட்சிக்குக் காரணமான
சுடு நிலவே நீ கூறு.
Bookmarks