வானத்தின் முகத்தில்
கரிபூசி
கறைபட்ட கைகளுடன்
முகம் துடைத்து
பாவத்தையும், இரூண்ட முகங்களையும்
கழுவத் தேடி
கரிசல் காடுகள்
விரிசல் காடுகளாய்
வறண்ட பூமியில்
மழைபெய்தபொழுது
சேமிக்க வைத்த கண்மாய்
பட்டா போடப்பட்டது
தங்குமிடம் தேடித் தேடி
அலைந்த தண்ணீர்
அழுதுகொண்டே
கடலிடம் தஞ்சம் அடைய
கடல் ஆர்ப்பரித்து
ஊருக்குள் வந்தது
நீதி கேட்க
Bookmarks