கவிச்சமர் ஆரம்பித்த மூன்றாவது தினத்திலையே 500வது பின்னூட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிண்றது, அந்த வெற்றியினால் மிகவும் மகிழ்ச்சி. அதை அடித்தளமாக வைத்து புதிய ஒரு கவிப் போட்டியை ஆரம்பிக்கின்றேன்,
போட்டி இதுதான் ஒருவர் ஒரு கவிதை எழுத வேண்டும் மற்றவர் அந்த கவிதைக்கு எதிர் கவிதையை எழுத வேண்டும், அவரோட கவிதைக்கு எதிரா இருக்கலாம் இல்லை அவர் கருத்துக்கு எதிர் கருத்தாக இருக்கலாம், கவிதைகளால் முட்டி மோதி போரிட வேண்டும்.
தனி மனிதர்களை தாக்கக் கூடிய கவிதைகளை விலக்குதல் மன்றத்திற்க்கு நல்லது அதை மனதில் கொஞ்சம் மனதில் வைக்கவும், மன்றத்தில் உள்ளவர்களை தாக்கக் கூடாது சொற்களால். அப்படி யாரையும் தாக்கக் கூடியதாக இருக்கும் பட்சத்தில் அந்த கவிதை மன்ற மேற்பார்வையாளர்களால் விலக்குவதற்க்கு அவர்களிற்கு அதிகாரம் உள்ளது
போட்டி குறைந்தது 4 வரிகள் அல்லது 12 வார்த்தைகளுக்கு மேற்பட்டவையாக இருக்க வேண்டும்
ஒருவரின் கவிதைக்கு பலர் பதில் அழிக்கும் போது முதலாவது பதில் கவிதைக்குத்தான் அடுத்தவர் பதில் கவிதை எழுத வேண்டும்
இந்த போட்டியையும் ஆதவரே ஆரம்பிப்பார்
Bookmarks