Page 1 of 59 1 2 3 4 5 11 51 ... LastLast
Results 1 to 12 of 700

Thread: கவிச்சமர் - விமர்சனம்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    கவிச்சமர் - விமர்சனம்.

    கவிச்சமர் ஆரம்பித்த இரண்டு நாட்களில் 175க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதப்பட்டு சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றன.

    கவிச்சமரில் எழுதப்பட்ட கவிதைகளில் பிடித்தமான கவிதைகள் ஏதாவது இருந்தால் எடுத்து விமர்சனமிடலாமே!!
    ஓவியா அவர்கள் இதற்கு துணை புரிவார்கள் என்று நினைக்கிறேன். கவிஞர்கள் அனைவரும் கவிச்சமரில் பங்கேற்று பிடித்தமான கவிதைகளின் விமர்சனத்தை தனியே இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
    சமர் ஆரம்பித்த சுட்டிக்கு மீண்டுமொரு நன்றி.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    (12-05-2007)

    கவிச்சமர் கவிதைகள் என்னை வெகுவாக கவர்ந்ததா என்றால்... பதில் இல்லை என்பதே உண்மை. நம் மக்களிடம் திறமை இல்லாமல் இல்லை.. வேகமாக பதித்திடவிரும்பி... செதுக்கபடாத சிற்பங்களாயே உள்ளன பல கவிகள்... கவிச்சமரில் எழுதும் ஒவ்வொரு கவிதைகளும் விமர்சன பகுதிக்கு வந்து 'அட' போட வைக்கவேண்டும் என்பதே என் ஆசை.. மக்களே உள்ளத்தில் உள்ளதை சொன்னேன்.. தவறாக நினைக்கவேண்டாம்...
    -----------------------------------------------------------

    கீழே காணப்படும் சில கவிதைகள் படிக்கும்போதே ஒரு கணம் என்னை 'அட' போட வைத்தது....

    ஆயுள் தண்டனை அல்ல
    ஆயில் தண்டனை..
    ஆயுசு முழுதும்
    நியாய விலைக் கடையில்
    எண்ணை வாங்க
    கியூவில் நிற்கக் கடவது..

    STசெல்வன்...

    இவரின் கவிச்சமர் கவிதைகள் பலவற்றிலும் சமூக பார்வையே அதிகம் பதிந்திருப்பதைக் கண்டேன்.. பாராட்டுக்கள் செல்வன்.. கொளுத்தும் வெயிலில் நிற்கும் பல மூதாட்டியர்களைக் கண்டுள்ளேன்... எப்படா கடை திறப்பான், எப்ப எண்ணை ஊத்துவான் என்று காத்திருக்கும் வேதனை.... அதை அழகாக ஆயுள் தண்டனை .. ஆயில் தண்டனை என்று வார்த்தை அழகுற செய்துள்ளார்.. மிக வேகமாக எழுதும் கவிதைகளில் இதுபோல் சிக்கியது தனித்திறமைதான்...
    -----------------------------------------------------------

    இளைப்பாற
    என் மனம் என்ன
    சத்திரமா?
    நிலையாக
    வந்தால் எனக்குள்
    நீ இருப்பாய்
    பத்திரமா...

    அக்னி..

    அக்னி அருமையாக உள்ளது இந்தக் கவிதை.... காதல் கவிதைகள் என்றால் அக்னியின் உள்ளம் குளிரும் போல....
    விருந்தாளிபோல் வராதே என் உள்ளத்தில்... அப்படி வந்தால் என் உள்ளம் இருக்கும் சத்திரமாய்
    வெறும்தாலி ஒன்றாகிலும் கட்டிக்கொள் என்னால்... அப்பொழுது என் உள்ளத்தில் இருப்பாய் நீ பத்திரமாய்..
    வார்த்தைகளை சரிவிகிதத்தில் கலந்து தந்துள்ளீர்கள் நண்பரே... அருமை....
    -----------------------------------------------------------

    நீ
    என்னை நீங்கிச் சென்றதால்
    நான் இன்னும் நானாகவே
    இருக்கிறேன்
    நீ என்னை வாங்கிச் சென்றிருந்தால்
    நான் நாமாக இருந்திருப்போமே!!!

    ஓவியா

    ஓவியா எழுதின பல கவிச்சமர் கவிதைகளில் இது என்னை வெகுவாய் கவர்ந்தது....
    நான் ஆவதற்கும்.. நாம் ஆவதற்கும் இடையே உள்ள மெல்லிய வித்தியாசம்... நீ என்னை நீங்கிச் சென்றதற்கும், வாஙகிச் சென்றதற்குமான இடைவெளி... மிகவும் ரசித்தேன் வார்த்தை கோர்வைகளை......
    -----------------------------------------------------------

    நடையிலே கண்டுகொண்டேன்
    நீ பேசன் ஷோ மங்கை
    உடையிலே தெரிந்துகொண்டேன்
    நீ தேசத்தின் நாச நங்கை

    ஆதவா

    ஆதவாவின் ஸ்பெஷல் இதுமாதிரி சில நேரங்களில் பளிச்சிடும்... நடை, உடை.. மங்கை, நங்கை... சின்ன சின்ன வார்த்தைகளில் வீரியமான கவி.... ஆதவா அதிகமாய் மெனக்கெட்டிருந்தால் கவிச்சமர் கவிதைகளில் அவரின் கவிதைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும்.. ஆனால் இதுபோல் பளிச்சிடும் கவிதைகளின் எண்ணிக்கை கூடியிருக்கும்.. அருமை நண்பரே, அருமை நண்பரே....
    -----------------------------------------------------------

    ஜாதகம் பார்த்தேன்
    ஏழில் கேது
    அவளைப் பார்த்தேன்
    என்னிலை சேது

    STசெல்வன்...

    விவரிக்க ஒன்றுமில்லை சிம்பிள்... ஆனால் வார்த்தை ஜாலம் கவருகிறது இந்தக் கவிதையில்....
    ஏழில்.. என்னிலை... படிக்கும்போது எவ்வித நெருடலும் இல்லாமல் அமைந்திருக்கிறது...
    -----------------------------------------------------------
    வாழ்த்துக்கள் நண்பர்களே..
    மற்றவர்கள் கவிதைகளையும் விமர்சிக்க ஆவலாய் உள்ளேன்...
    என்னை 'அட' போட வையுங்களேன்.....
    Last edited by ஷீ-நிசி; 12-05-2007 at 04:16 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    கவிச்சமர் என்பது படக்படக்கென்று கவிதைத் தொடர்களை இடுவது. அதில் மிகப் பெரிய கவிதைகளளப் படைக்க முடியாது என்றாலும்..அவ்வப்பொழுது நல்ல கவிதைகள் எட்டிப் பார்க்கின்றன. பங்கு பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். தொடர்ந்து கொண்டு செல்லுங்கள்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    என்னவோ
    ஏதோ என கலங்காதே
    நான் கடைபிடிப்பது
    ப்ரம்மச்சாரியம்
    நீ
    ப்ரம்மத்தின் ஆச்சர்யம்

    அல்லிராணி

    உங்களின் கவிதைகளை நான் கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்.. மிக அருமையாக எழுதுகிறீர்கள் தோழி... முதலில் வாழ்த்துக்கள்....

    மேலே உள்ள வார்த்தை ஜாலம் என்னை வெகுவாய் கவர்ந்தது..... அருமை..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    முதல் நாள் எட்டிப் பார்த்ததும், அட அருமையான திரி என்று எனக்குள் சொல்லிவிட்டு முருக்கு மாவு போல் 'நைஸாக' நழுவி விட்டேன். பின் இருப்புக்கொள்ளாமல் வந்து வந்து எட்டி எட்டிப்பார்த்தேன்.....இன்று குட்டையில் ஊரிய மட்டையாகிவிட்டேன்.

    சஞ்சய் என்ற சுட்டிப்பபையன் ஆரம்பித்த திரி இவ்வலவு சிறப்பாக பீடுநடை போடுவதற்க்கு அன்னாருக்கு எமது நன்றிகள்.

    ஓவ்வொரு கவிதைகளும்
    பவளங்களைப்போல்,
    முத்துக்களைப்போல்,
    மாணிக்கங்களைப்போல்,
    கோமேதங்களைபோல்,
    வைரங்களைப்போல்,
    வைடூரியங்களைப்போல்,
    நீலங்களைப்போல்,
    மரகதங்களைப்போல்,
    புஷ்பரகங்களைப்போல்
    சிறப்பனவைகளாக இருக்கின்றன


    கவிதைகளை நேற்று அள்ளிக்குவித்தும், இன்று அள்ளிக்குவித்துக் கொண்டிருக்கும் மற்றும் நாளை அள்ளிக்குவிக்கப் போகும் மன்ற கவிமணிக்களுக்கு அடியேனின் வந்தனங்களும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், ஆசிகளும்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    இன்று இங்கே நான் விமர்சிக்கும் அனைத்து கவிதைகளும் எனக்கு பிடித்தமானவைகளே.


    முதல்க்கவிதையை கண்டிப்பாக விமர்சிக்கவேண்டும். இதோ

    Quote Originally Posted by ஆதவா View Post
    கவிதைகளைத் திருடுவதில்
    அலாதி சுகமெனக்கு.
    உனக்குப் பிடிக்கும் வரை
    பிறர் கவிதைகள் என்னுடையது.
    என்றாவது ஒருநாள்
    சொந்தமாக கிறுக்கியிருப்பேன்..
    பிடித்துவிட்டதென்று என்னை
    கவிஞனாக்கிவிட்டாயடி பாவி..
    ஒரு பெண்ணால் பல மனிதன் பிறப்பான், அது போல் ஒரு பெண்ணால் பல கவிஞனும் பிறக்கிறான்..

    முதல் கவிதையிலே ஒரு கவிஞன் எப்படி பிறக்கிறான் என்று காட்டிவிட்டாய். கவிதை அருமை ஆதவா.



    Quote Originally Posted by மனோஜ் View Post
    பாவி
    அவள் கூறினால்
    உள்ளத்தில் உள்ளவைகள்
    உருக்கி வைத்தால்
    உருகிடும் கவிஞர்கள்
    வடிப்பது நிஜமே
    உண்மையை கூறினேன்
    ரசிகன் நானே
    உண்மை பேசும் ரசிகனின் கவிதை. பலே.



    Quote Originally Posted by stselvan View Post
    பாவி யாகிப் போனேன் - நீ
    பாராது போனதாலே
    காவி யாகிப் போகும் - ஆடை
    கந்தலான மனமே
    ஆவி யிருகி அழுது - கண்ணீர்
    ஆறாகி வருமே
    தேவி எந்தன் ராகம் - உனைத்
    தேடித்தேடி அழுமே!
    இந்த பகுதியில் இன்னொரு சிறப்பு, தாமரை அண்ணாவின், 'நீ பார்க்கவிட்டால் நான் தாமரயானந்தா' என்று பாடும் அழகிய கவிதை.



    Quote Originally Posted by murthykmd View Post
    பாவியடி நான்! - உன்
    அழகை ரசிக்காமல் இருந்ததால்!
    உன் முகம் உரசியதில்
    சிராய்ப்புகள் என் இதயத்துக்கு!
    இருந்தும் மருந்து போடவில்லை.
    காரணம் என் மனதில்
    ஆறாமல் இருக்கும்
    உன் நினைப்புக்காக!
    மூர்த்தி காதலை பிழிஞ்சி கட்டறீகளே, என்ன ஆழமான வரிகள்....சூப்பர்..
    Last edited by ஓவியா; 12-05-2007 at 10:58 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    அழுமே எந்தன் கவிதைகள்
    நீ நின்று சுவாசிக்காததால்
    தொழுமே எந்தன் காதல்
    நீ நின்று நேசிக்காததால்
    விழுமே என் வியர்வைகள்
    நீ நின்று ஆசிக் காததால்
    உழுமோ காதற் பயிற்
    நீ நின்றுஇதை வாசிக்காததால்?
    இப்படியெல்லாம் எழுத்து ஜாலத்தை போட்டு கவுக்கறீகளே ஆள.



    Quote Originally Posted by சுட்டிபையன் View Post
    அழுமே எனதுள்ளம் உன்னைத்தேடி
    அதுவறிந்தும் உன்மனம் கசியவில்லை
    என் காதல் உனக்கு செல்லாக் காசு
    உன் மௌனம் எனது மரணம்
    அதை புரிந்து கொள்வாயா
    என் மனதறியா காதலியே........?
    மன்றத்து பில் கேட்சின் காதலே செல்ல காசா ஆச்சே.....அடடா போட வைக்கும் சுட்டிக்கவிதை.



    Quote Originally Posted by மனோஜ் View Post
    வாசித்துவிட்டால் என்னை
    தன் இமையாலும்

    உபதேசித்து விட்டால்
    தன் வார்த்தையால்

    நான் தான் கல்நோஞ்சன்
    நீ கூறிய வார்த்தைகளை
    மனதினில் பூட்டியதால்
    கல்நெஞ்சனுக்குள் இப்படியும் கவிதை வருமா?? அடெங்கெப்பா



    Quote Originally Posted by ஆதவா View Post
    பூட்டியதால் நெஞ்சம்
    சொன்ன சொல்லை மறுக்கிறது.
    வாட்டியதால் கண்கள்
    குருதி அடித்து ஓடுகிறது
    மாட்டியதால் இதயம்
    அலறியடிக்க மறுக்கிறது
    சூட்டினால் ஒருவேளை
    உண்டோ என் காதல் உயிர்?

    கண்களில் குருதி வடிவது காதலில் சகஜமப்பா..
    Last edited by ஓவியா; 12-05-2007 at 11:06 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan View Post
    பூட்டியதால் உன்னை இதயத்தில்
    பூத்ததே ஒரு காதல் பூ
    இருட்டிலும் மலரும்
    இனிமையாய் மணக்கும்
    உன் நினைவுகள்
    கண்கள் மூடி
    இதயம் திறந்து
    சிந்திக்கிறேன்
    பூட்டிய மனதில்
    முட்டிப் போராடிய நீ
    திறந்த இதயத்தில்
    அமர்ந்துவிட்டாய்
    அண்ணா,
    தாங்களே சொல்லிவிட்டீர்கள் காதல் இருட்டிலும் மலரும் இனிமையாய் மணக்கும்....நன்றி.


    Quote Originally Posted by stselvan View Post
    உயிரே!
    ஏன் உயரே போகிறாய்
    என்னவள் இன்னும் வரவில்லை
    அவள் முகம் காண
    உனக்குமா துணிவில்லை?
    பொண்னுங்களே கேப்பில் வாருவதே ஆண்களின் செயல்.


    Quote Originally Posted by ஆதவா View Post
    துணிவில்லை என்னிடம்
    தூறலுக்குள் ஒளிந்துறங்கும்
    உன்னிடம் வார்த்தை சொல்ல
    ஏ மழையே
    நீயாவது சொல்லிவிடு
    என் காதல் தூதை,
    இரக்கமில்லாமல்
    உன்னைக் கொல்லும்
    என் காதலியிடம்...
    ஆதவா, 'தூறலுக்குள் ஒளிந்துறங்கும் என்னவள்'' இந்த வரி மிகவும் பிரமாதம்.



    Quote Originally Posted by மனோஜ் View Post
    காதலியாய் நீ இருக்க
    காதலனாய் நானிருக்க
    காதல் உலகினில் பறந்திடலம்
    என எண்ணிடும் வேலையில்
    வந்ததடி என் முன் என் உறவுகள்
    உன் எதிரியாய்
    ஆமாம் உலகத்திலே எதிரிகள் அதிகம் நிரைந்த இடம் காதல் தேசம்தான்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan View Post
    காதலியிடம் என்ன கண்டாய்
    அம்மா குமுறினாள்
    அப்பா அடிக்க வந்தார்
    அக்காவும் அண்ணனும் பொருமித்
    தீர்த்தனர்
    ஆமாம்
    யார் இவர்கள்?
    சரியான கேள்வி...யார் இவர்கள்? காதலுக்கு காதலியும் காதலனும் காதலும்தான் முக்கியம்...



    Quote Originally Posted by Rajeshkumar View Post
    காதலியிடம் சொல்லச் சொன்னேன்
    அவள் என் காதலி என்று
    நண்பனும் சொன்னான்
    அவள் என் காதலி என்று.
    அடடா இன்னொரு மின்சாரக்கனவு....வரி தூள் மாமே


    Quote Originally Posted by stselvan View Post
    எதிரியாய் யாரோ
    என் திரியில் வருவாரோ
    உதிரியாய் இருந்தாலும்
    உறுதியாய் இருப்பாரோ
    கதிரும் பதரும்
    கல்லும் புல்லும்
    எதுவும் புரிபடாமல்
    ஆயிரம் கவிதைகள்
    தெளிக்கப்படுமோ
    அண்ணா
    உங்கள் கவி ரசனையே தனிதான்...என் திரி எதிரி அடடா



    Quote Originally Posted by ஆதவா View Post
    தெளிக்கப்படும் கவிகள் யாவும்
    ஆதவனுடைய கவியே
    விளித்து நீங்களும் எழுதுங்கள்
    அவனடி வார்த்தை பற்றியே
    குளித்து மூழ்குங்கள் என்
    காதல் கவிகளிலே - நாளும்
    களித்து மகிழுங்கள் என்
    ஒவ்வொரு வரிகளிலே
    இந்த கவிதை ஒன்றே போதும் உன் கவி'மை'க்கு யாம் அடிமை என்று. சபாஷ் தலிவா..
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by agnii View Post
    வரிகளிலே
    கவி கோர்க்க முன்னரே,
    வருகிறதே
    பல கவிதைகள்...
    புரிகிறதா நண்பர்களே
    எனது வேகம்..?
    போட்டியில் கவிதை மழை கொட்டுவதையும் கவியாக்கிய நீர் கவிஞர்தான்...



    Quote Originally Posted by ஆதவா View Post
    வேகம் உம்முடையது நன்று என்று
    மோகம் கொண்டு நானும்
    தேகம் சிலிர்க்க எழுதுகிறேன்
    சோகம் மிகுந்த கவிதை
    " மறந்திடாதே காதலியே "
    சோகத்திலும் காதலை நினைத்தால் தேகம் சிலிர்க்குமா!!!!!!!!!!!!



    Quote Originally Posted by stselvan View Post
    காதலியே
    மன்னிக்க
    காதல் வலியே
    காதல் வரலியே!
    எந்த வலியும் காதல் இருந்தால் சுகமே!!!



    Quote Originally Posted by மனோஜ் View Post
    காதலியே என் சோகத்தை
    உன்னிடம் சொல்ல நினைத்திடும்
    நேரத்தில் நான் உன்அருகில் இல்லை
    நீயும் என்னருகில் இல்லை
    அவன் அருகில் இல்லையென்பதே சோகமல்லவா!!



    Quote Originally Posted by ஓவியா View Post
    கவிதையின் தலைப்பு என்று பறக்கும் என் காதல்

    இல்லை என்று கூறுவதால்
    இருக்கும் என் காதல்
    இல்லாமல் போகாது
    இல்லையென்பதுதான் - காதலில்
    இருக்கும் என்ற வசனமாம்.
    எறும்பூர கல்லும் தேயுமாம்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan View Post

    வரலியே என்றல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்?? சரி வசனத்தில் ஆரம்பிக்கிறேன்..

    வசனமாம் என் கவிதை
    வசவுகள் வந்தன
    விமர்சனமாக
    விஷமாக
    விமர்சனங்கள் போகட்டும்
    விசனங்கள் வேகட்டும்
    சொந்த சனங்கள்
    சொல்வதென்ன
    காதலா காவியமா?
    சொந்தசனங்கள் தான் இப்ப விசயமா? காதலுக்கு கண்ணில்ல நைனா.



    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    காவியம் ஆக உதவும்
    சில காதல்கள்....
    காதல் ஆக உதவும்
    சில காவியங்கள்....
    நச்சுனு நாலு வார்த்தை.



    Quote Originally Posted by murthykmd View Post
    காவியங்கள் படைத்தேன்
    கவிதைகளால்.
    கண்மணியே
    உன்னைக் கண்ட பின்பு!
    கலைந்து போனது-என்
    காவியக் கனவு-நீ
    என்னை நீங்கி சென்றதால்!
    உண்மை காதலி நீங்கி செல்ல மாட்டாள்.....ஆனால் இப்படியும் காதலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.



    Quote Originally Posted by ஓவியா View Post
    நீ
    என்னை நீங்கிச் சென்றதால்
    நான் இன்னும் நானாகவே
    இருக்கிறேன்
    நீ என்னை வாங்கிச் சென்றிருந்தால்
    நான் நாமாக இருந்திருப்போமே!!!
    ஹி ஹி ஹி ஹி ஒரூ உண்மை.


    Quote Originally Posted by murthykmd View Post
    இருந்திருப்போம்
    இருவரும் ஒன்றாக
    என் இதயத்தில்! - அதில்
    காணவில்லையடி - உன்
    இதயத்தை!
    இணைந்திருக்கும் சமயம் இதயமும் இணைந்து ஒன்றாகிவிட்டதோ!!!!!!காணாத இதயத்தை தேட போலிஸ் கம்ப்லேன் குடுங்களேன்.


    Quote Originally Posted by ஓவியா View Post
    உன்
    இதயத்தை
    நீயே வைத்துக்கொள்
    என்
    இதயத்தை மட்டும்
    எடுத்துச் செல்
    அது என்றுமே
    உன்னுடையதுதான்.
    அதானே ஓவி, அவன் பொருள் நமக்கு எதுக்குலே...அவன்கிட்டே குடுத்துருமா!!
    Last edited by ஓவியா; 12-05-2007 at 11:28 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by murthykmd View Post
    அது
    என்றுமே உன்னுடையதுதான்!
    உனக்காக பிறந்த
    என்னுடைய இதயம் மட்டுமல்ல.
    என் உயிரும்தான்!
    அதுசரி, ஆரம்பமே இனிக்கும். காதலில் ஆரம்பமே இனிக்கும். உயிரையும் வாங்கும் காதலுக்கு ஒரூ



    Quote Originally Posted by ஓவியா View Post
    என் உயிரும்தான்
    என் உடலும்தான்
    என் உள்ளமும்தான் - அனைத்தும்
    என்னைகாக்கும்
    என் ஏசு பிரானுக்கே
    நல்லா சொல்லு ஓவி, அனைத்தும் கடவுளுக்கே!!!



    Quote Originally Posted by murthykmd View Post
    ஏசு பிரானையே
    ஏசியபோதும்
    ஏசாதிருந்தது - இந்த
    ஏழையின் திருவுள்ளம்!
    கடவுளிடம் எப்படீங்க சண்டை பிடிப்பது!!! சும்மா ஒரு கண்ணாமூச்சிதான்.



    Quote Originally Posted by stselvan View Post
    திரூவுள்ளம் இல்லையோ
    காதல்
    பெருவெள்ளம் பாய்ந்திட
    கவிதை கருவெல்லாம்
    உனைச் சூல்கொண்டு
    கற்பனையை பிரசவித்திட
    உள்ளம் இணைந்தால் தானே காதல் மலர. கவிதை மட்டும் வெள்ளமா பாய்ந்து என்ன பயன்


    Quote Originally Posted by ஆதவா View Post
    பிரசவித்திடும் ஒவ்வொரு கவிதையும்
    உன் பெயர் சொல்லியே அழுகிறது.
    ஒரு தாயாக வேண்டாம்
    ஒரு செவிலியாகவாவது
    இனிப்பூட்டு அந்த புதுக் கவிதைக்கு...
    பின்னிட்டீங்க ஆதவா!!!! சிந்தனையின் உச்சம். மாற்றாந்தாயாகவாவது வந்து என்னை விமர்சி!!!!
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 1 of 59 1 2 3 4 5 11 51 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •