தன்னடக்கக் குறிப்போடு அழகான கருத்தான கவிதை.
இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ என எனக்குத் தோன்றுகின்றது.
அழிவை நோக்கியே செல்லும் மூடா
அறிவை ஆக்கமாய்ச் செலுத்திப் பாரடா
புத்துயிர்பெற்று
பூத்து குலுங்கும் நம்முலகம்
அழிவும் அறிவும் என்பதிலும், அழிவும் ஆக்கமும் இணைந்து வருவது
மிகவும் பொருந்தி வருவதாகத் தோன்றுகின்றது.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
[QUOTE=யவனிகா;469072]புத்துலகம் தேவையில்லை
"சிறுகுடல் பெருகுடலைப்
சிறிது சிறிதாய் அமிலம்
அரித்துக்கொண்டிருக்கிறது
கஞ்சி வைத்த பாத்திரத்தை
கழுவியாவது ஊற்றுங்கள்.
எங்கள் பிஞ்சுகளின் வாயில்"
அடடா! பசியின் வேதனையை இதை விட அருமையாய் மனதில் தைக்கும் படி யாராலும் சொல்ல முடியாது. பாராட்டு யவனிகா!
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
ஆமாம் கலையரசி...
யவனிகா+அக்காவின் அழகு வரிகளுக்கிடையில், அமிலவரிகள்...
யாசகமாய்க் கஞ்சிச் சட்டி கழுவிய நீர் கேட்டு,
சூசகமாய்ச் சுடுநீர் ஊற்றும் கவிதை...
ஏழ்மையின் கொடுநிலையில், காய்ந்து வரண்டு போகும் வயிற்றின் கதறலைச் சொல்ல,
இதனை விடவும் வார்த்தைகள் தேவையில்லை...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
கவிதையில் உண்மை.., இருக்கின்றது.
கவிதையின் உண்மை.., சுடுகின்றது.
ஆனால்..,
ஒட்டுமொத்தமாக இந்நிலைகளுக்குக் காரணம் ஆண்கள் மட்டும்தானா...???
ஆண்களைக் கவிதை நேரடியாகச் சாடாவிடினும்,
ஆண்களைக் கைகாட்டித்தான் நிற்கின்றது கவிதை.
சரி... இதேவழியிலேயே சிந்தித்தால்,
பிறக்கும் கணத்தில் பேச முடிவதில்லை...
இப்படி இறக்கும் போதேனும் பேச வந்தால்,
அந்தச் சிசு சொல்லும்...
ஓர் துளி நஞ்சு தந்து,
எனக்குத் தருவது விடுதலையல்ல,
இது கொடும் கொலை...
இந்தக் கொலை வெறியைக்
கொடுங்கோலர் மீது திருப்பிவிடு...
நமக்குக் கிடைக்கும் விடுதலை...
என்னைக் கொன்று,
கொலைகாரப் பட்டம் சுமக்கவும்
தயாராக இருப்பதில் இல்லை தியாகம்...
இவற்றுக்கெதிராய்ப் போராட,
என்னைத் தயாராக்கும் தாயாக இரு...
என்னைப் புடம்போடவும்,
கொடுமைகளைச் சுட்டெரிக்கவும்,
இத்துளிநஞ்சிலிருந்து வளர்த்துவிடு
யாகத்தீ...
புரட்சி ஒன்றை
விடத்துளியில் அடக்கம் செய்யாமல்,
வடம்பிடித்துக் கூட வா...
முதலாய் இருக்கட்டும் உன் காற்தடம்...
Last edited by அக்னி; 06-05-2010 at 06:59 AM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அக்னி அவர்களே, நான் இக்கவிதையில் ஆண்களைச் சாடவும் இல்லை. பெண்சிசுக்கொலையை நியாயப்படுத்தவும் இல்லை.
மாறாக, அக்கொலையைச் செய்பவளின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்து எழுதியது. சொல்லப்போனால் சிசுக்கொலைகளின் எதிரி நான்.
கவிதைக்காக மட்டுமே என் வார்த்தைகள் கையாளப்பட்டுள்ளன. அதனோடு என் மனக்கருத்தை தொடர்புபடுத்தவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.
(அது சவலைதான். சவலை என்றால் நோஞ்சான் என்று பொருள்படும்.)
நன்றி தோழி கலை.தம்பி ஆதி,அக்னி.
கவிச்சமரில் சிவா அண்ணா,சரண்,குணமதி,கலை அனைவரின் கவிதைகளுமே நன்றாக இருக்கிறது.காதல் கவிதைகளும் சாடல் கவிதைகளும் மாறிமாறி சுவைபட இருக்கின்றன.
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
எல்லாம் அண்ணாத்த ட்ரெய்னிங் தான்.நன்றி அண்ணா.
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
இதனைச் செய்பவர்களைத்தவிர மற்றெல்லாரும் சிசுக்கொலைகளின் எதிரிகள்தான்.
இல்லாவிட்டால் மனிதர்களேயில்லை...
அப்படியெல்லாம் நான் இணைத்துப் பார்க்கவில்லை.
இந்தக் கவிதையின் மாறுபட்ட பார்வை தெளிவாகவே இருக்கின்றது.
ஆனால், ஆண்களை நேரடியாகச் சாடாமற் சுடும் வரிகள், இதற்குக் காரணமாக அமைகின்ற பெண்களுக்கும் (கவிதையின் தாயைச் சேர்க்கவில்லை) கொஞ்சம் சூடு போட்டிருக்கலாம்...
இதனைத்தான் சொன்னேனே தவிர,
மற்றும்படி எதனையும் உள்நினைக்கவில்லை...
இப்போது நினைவுக்கு வந்துவிட்டது.
(‘கவலை மாட்டுக்கு...’ என்று ஏன், எப்படிப் பொருத்தமற்று நினைத்தேன்...??? அவசர, அரைகுறை வாசிப்பை முழுமையாகத் தவிர்க்க முயற்சிக்கின்றேன்...)
மிகவும் ரசித்தேன்...
எனக்குச் சொந்தமாக்த் தந்து,
கந்துவட்டி போட்டுக் கறந்துவிட்டாய்
உன் காதலை...
நொந்து போயும் எந்தன் நெஞ்சம்
சொல்லுதில்லை உன்னிற்குற்றம்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 5 users browsing this thread. (0 members and 5 guests)
Bookmarks