Page 55 of 59 FirstFirst ... 5 45 51 52 53 54 55 56 57 58 59 LastLast
Results 649 to 660 of 700

Thread: கவிச்சமர் - விமர்சனம்.

                  
   
   
  1. #649
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by குணமதி View Post
    காய்த்துக்கனிந்து
    கையிலே விழ
    தோட்டத்துக் கொய்யாப்பழமல்ல
    விடுதலை!
    அழகாக, அற்புதமாகச் சொன்னீர்கள் குணமதி...

    பழுத்து வீழ்ந்தாலும்
    அழுகிப்போகும் வரை
    பார்த்திருந்துவிட்டு,
    அழுகியதைத் தந்துவிட்டார்களென
    அறிக்கை விடுவோர்
    பரவலாக இருக்கத்தான் செய்கின்றனர்.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. #650
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan View Post
    Note: கவிதைன்னு நெனச்சு எழுதுறேன்.. தப்ப இருந்தா கண்டுக்காம reject பண்ணுங்க...

    அழிவை நோக்கி செல்லும் மூடா
    அறிவை நோக்கி சென்று பாரடா

    புத்துயிர்பெற்று
    பூத்து குலுங்கும் புத்துலகம்!!
    தன்னடக்கக் குறிப்போடு அழகான கருத்தான கவிதை.

    இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ என எனக்குத் தோன்றுகின்றது.

    அழிவை நோக்கியே செல்லும் மூடா
    அறிவை ஆக்கமாய்ச் செலுத்திப் பாரடா

    புத்துயிர்பெற்று
    பூத்து குலுங்கும் நம்முலகம்

    அழிவும் அறிவும் என்பதிலும், அழிவும் ஆக்கமும் இணைந்து வருவது
    மிகவும் பொருந்தி வருவதாகத் தோன்றுகின்றது.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #651
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by அக்னி View Post
    தன்னடக்கக் குறிப்போடு அழகான கருத்தான கவிதை.

    இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ என எனக்குத் தோன்றுகின்றது.

    அழிவை நோக்கியே செல்லும் மூடா
    அறிவை ஆக்கமாய்ச் செலுத்திப் பாரடா

    புத்துயிர்பெற்று
    பூத்து குலுங்கும் நம்முலகம்

    அழிவும் அறிவும் என்பதிலும், அழிவும் ஆக்கமும் இணைந்து வருவது
    மிகவும் பொருந்தி வருவதாகத் தோன்றுகின்றது.
    கருத்துக்களுக்கு நன்றி அக்னி அவர்களே.
    வார்த்தைகள் தேடினேன் என் லிமிட்டுக்குள் கிடைக்கவில்லை. நீங்கள் அதை அமைத்த விதம் அருமை.

  4. #652
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    [QUOTE=யவனிகா;469072]புத்துலகம் தேவையில்லை

    "சிறுகுடல் பெருகுடலைப்
    சிறிது சிறிதாய் அமிலம்
    அரித்துக்கொண்டிருக்கிறது
    கஞ்சி வைத்த பாத்திரத்தை
    கழுவியாவது ஊற்றுங்கள்.
    எங்கள் பிஞ்சுகளின் வாயில்"

    அடடா! பசியின் வேதனையை இதை விட அருமையாய் மனதில் தைக்கும் படி யாராலும் சொல்ல முடியாது. பாராட்டு யவனிகா!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  5. #653
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஆமாம் கலையரசி...

    யவனிகா+அக்காவின் அழகு வரிகளுக்கிடையில், அமிலவரிகள்...

    யாசகமாய்க் கஞ்சிச் சட்டி கழுவிய நீர் கேட்டு,
    சூசகமாய்ச் சுடுநீர் ஊற்றும் கவிதை...

    ஏழ்மையின் கொடுநிலையில், காய்ந்து வரண்டு போகும் வயிற்றின் கதறலைச் சொல்ல,
    இதனை விடவும் வார்த்தைகள் தேவையில்லை...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #654
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    எங்கள் பிஞ்சுகளின் வாயில்
    நஞ்சினை ஊற்றுகிறோம் என்றே
    ஆர்ப்பாட்டம் செய்யும்
    அதிமேதாவிகளே, வாரும்!

    இப்பெண்குஞ்சுகளின் நிலையை
    பின்னாளிலே பாரும்!

    அவள் தாயின் மார்பகமோ
    வறண்ட பாலை நிலம்;
    அதில் பாலை எதிர்பார்ப்பது
    பைத்தியக்காரத்தனம்!

    கூழுக்கும் வழியின்றி
    குமரியானவளுக்கு
    கல்யாணமாம்!

    சவலை (சவலையா... கவலையா...) மாட்டுக்கு
    சந்தையில் இடமேது?
    தரகமர்த்தி, ஏதோவொரு விலைபேசி,
    ரெண்டாந்தாரமோ, மூணாந்தாரமோ,
    ஒரு நாலாந்தர மனிதனுக்கு
    வாழ்க்கைப்பட்டு போன இடத்திலும்
    வக்கணையாய் வாழவில்லை.

    அடியும், உதையும்
    அவச்சொல்லும் வாங்கித் தாங்கி
    மரத்துப்போன பெண்மை,
    கள்ளிப்பாலைக் கையிலெடுக்கும்,
    பெண்சிசுவைப் பெற்றகணம்!

    அந்த ஒரு துளியிலே
    ஓராயிரம் தலைமுறையின்
    தலையெழுத்தை மாற்றுகிறோம்!

    எம்மைக் கையெடுத்துக் கும்பிடவேண்டாம்;
    கூப்பாடு போடாமல் போய்
    உம் காரியத்தைப் பாரும்!
    கவிதையில் உண்மை.., இருக்கின்றது.
    கவிதையின் உண்மை.., சுடுகின்றது.

    ஆனால்..,
    ஒட்டுமொத்தமாக இந்நிலைகளுக்குக் காரணம் ஆண்கள் மட்டும்தானா...???
    ஆண்களைக் கவிதை நேரடியாகச் சாடாவிடினும்,
    ஆண்களைக் கைகாட்டித்தான் நிற்கின்றது கவிதை.

    சரி... இதேவழியிலேயே சிந்தித்தால்,

    பிறக்கும் கணத்தில் பேச முடிவதில்லை...
    இப்படி இறக்கும் போதேனும் பேச வந்தால்,
    அந்தச் சிசு சொல்லும்...

    ஓர் துளி நஞ்சு தந்து,
    எனக்குத் தருவது விடுதலையல்ல,
    இது கொடும் கொலை...

    இந்தக் கொலை வெறியைக்
    கொடுங்கோலர் மீது திருப்பிவிடு...

    நமக்குக் கிடைக்கும் விடுதலை...

    என்னைக் கொன்று,
    கொலைகாரப் பட்டம் சுமக்கவும்
    தயாராக இருப்பதில் இல்லை தியாகம்...

    இவற்றுக்கெதிராய்ப் போராட,
    என்னைத் தயாராக்கும் தாயாக இரு...

    என்னைப் புடம்போடவும்,
    கொடுமைகளைச் சுட்டெரிக்கவும்,
    இத்துளிநஞ்சிலிருந்து வளர்த்துவிடு
    யாகத்தீ...

    புரட்சி ஒன்றை
    விடத்துளியில் அடக்கம் செய்யாமல்,
    வடம்பிடித்துக் கூட வா...
    முதலாய் இருக்கட்டும் உன் காற்தடம்...
    Last edited by அக்னி; 06-05-2010 at 06:59 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #655
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by கலையரசி View Post
    Quote Originally Posted by யவனிகா View Post
    புத்துலகம் தேவையில்லை

    "சிறுகுடல் பெருகுடலைப்
    சிறிது சிறிதாய் அமிலம்
    அரித்துக்கொண்டிருக்கிறது
    கஞ்சி வைத்த பாத்திரத்தை
    கழுவியாவது ஊற்றுங்கள்.
    எங்கள் பிஞ்சுகளின் வாயில்"
    அடடா! பசியின் வேதனையை இதை விட அருமையாய் மனதில் தைக்கும் படி யாராலும் சொல்ல முடியாது. பாராட்டு யவனிகா!
    நான் சொல்ல நினச்சத அப்படியே சொல்லிடீங்க கலையரசி..

    இந்த வரிகளை படிக்கையில் மனசில் ஒரு வலி உண்டானது உண்மை.. அக்கா எப்படி இருக்கீங்க ? அடிக்கடி மன்றம் பக்கம் வாங்க..

    பாராட்டுக்கள் அக்கா..
    அன்புடன் ஆதி



  8. #656
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அக்னி அவர்களே, நான் இக்கவிதையில் ஆண்களைச் சாடவும் இல்லை. பெண்சிசுக்கொலையை நியாயப்படுத்தவும் இல்லை.

    மாறாக, அக்கொலையைச் செய்பவளின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்து எழுதியது. சொல்லப்போனால் சிசுக்கொலைகளின் எதிரி நான்.

    கவிதைக்காக மட்டுமே என் வார்த்தைகள் கையாளப்பட்டுள்ளன. அதனோடு என் மனக்கருத்தை தொடர்புபடுத்தவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    (அது சவலைதான். சவலை என்றால் நோஞ்சான் என்று பொருள்படும்.)

  9. #657
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    நன்றி தோழி கலை.தம்பி ஆதி,அக்னி.

    கவிச்சமரில் சிவா அண்ணா,சரண்,குணமதி,கலை அனைவரின் கவிதைகளுமே நன்றாக இருக்கிறது.காதல் கவிதைகளும் சாடல் கவிதைகளும் மாறிமாறி சுவைபட இருக்கின்றன.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  10. #658
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by யவனிகா View Post
    காதலர்களைக்
    எளிதில்
    கண்டுகொள்ள
    கவிமனம்

    காதலர்களை
    வலிதில்
    கண்டுகொல்லும்
    சாதிமதம்...
    அசத்தல்ம்மா. இவ்ளோ அழகான வரிகளை அனாயசியமா தெளிச்சிட்டுப் போயிட்டீங்க...

    "எளிதில் கண்டுகொள்ளும், வலிதில் கண்டுகொல்லும்..."

    வாவ்....ரொம்ப நல்லாருக்கும்மா. தங்காச்சின்னா தங்காச்சிதான். பாராட்டுக்கள் கவிதாயினியே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #659
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    எல்லாம் அண்ணாத்த ட்ரெய்னிங் தான்.நன்றி அண்ணா.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  12. #660
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    சொல்லப்போனால் சிசுக்கொலைகளின் எதிரி நான்.
    இதனைச் செய்பவர்களைத்தவிர மற்றெல்லாரும் சிசுக்கொலைகளின் எதிரிகள்தான்.
    இல்லாவிட்டால் மனிதர்களேயில்லை...

    Quote Originally Posted by கீதம் View Post
    கவிதைக்காக மட்டுமே என் வார்த்தைகள் கையாளப்பட்டுள்ளன. அதனோடு என் மனக்கருத்தை தொடர்புபடுத்தவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.
    அப்படியெல்லாம் நான் இணைத்துப் பார்க்கவில்லை.
    இந்தக் கவிதையின் மாறுபட்ட பார்வை தெளிவாகவே இருக்கின்றது.
    ஆனால், ஆண்களை நேரடியாகச் சாடாமற் சுடும் வரிகள், இதற்குக் காரணமாக அமைகின்ற பெண்களுக்கும் (கவிதையின் தாயைச் சேர்க்கவில்லை) கொஞ்சம் சூடு போட்டிருக்கலாம்...

    இதனைத்தான் சொன்னேனே தவிர,
    மற்றும்படி எதனையும் உள்நினைக்கவில்லை...

    Quote Originally Posted by கீதம் View Post
    (அது சவலைதான். சவலை என்றால் நோஞ்சான் என்று பொருள்படும்.)
    இப்போது நினைவுக்கு வந்துவிட்டது.

    (‘கவலை மாட்டுக்கு...’ என்று ஏன், எப்படிப் பொருத்தமற்று நினைத்தேன்...??? அவசர, அரைகுறை வாசிப்பை முழுமையாகத் தவிர்க்க முயற்சிக்கின்றேன்...)

    Quote Originally Posted by கீதம் View Post
    என்னிடம் கொடுத்துவைத்திருந்த
    உன் காதலை
    அன்றிலிருந்து இன்றுவரை
    சிறுகச் சிறுகத் தந்து
    தீர்த்துவிட்டேன் என் கணக்கை!

    மிகவும் ரசித்தேன்...

    எனக்குச் சொந்தமாக்த் தந்து,
    கந்துவட்டி போட்டுக் கறந்துவிட்டாய்
    உன் காதலை...
    நொந்து போயும் எந்தன் நெஞ்சம்
    சொல்லுதில்லை உன்னிற்குற்றம்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 55 of 59 FirstFirst ... 5 45 51 52 53 54 55 56 57 58 59 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 5 users browsing this thread. (0 members and 5 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •