Page 52 of 59 FirstFirst ... 2 42 48 49 50 51 52 53 54 55 56 ... LastLast
Results 613 to 624 of 700

Thread: கவிச்சமர் - விமர்சனம்.

                  
   
   
  1. #613
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by யவனிகா View Post
    வாய் பிளந்து இரைக்காகக்
    காத்திருக்கும் குருவிக்குஞ்சுகளுக்கோ,
    தளை அறுத்து தாய்மடிமுட்டும்
    செவலைக்கன்றுக்கோ,
    மோவாயில் பால்தடத்தோடு
    கிறங்கிக்கிடக்கும் மூன்றுமாதக்குழந்தைக்கோ,
    தெரிந்திருக்கப்போவதில்லை...,
    இன்னும் ஐந்துநிமிடத்தில்
    அங்கே கண்ணிவெடியொன்று வெடிக்குமென்று....
    லோஷன் அவர்கள்
    ‘வாய்’ என்ற சொல்லில் முடிக்க,
    தொடர எனக்கு வார்த்தைகள் சிக்கவில்லை.

    சிக்கியிருந்தால்,
    சிறப்பான கவிதை ஒன்றை இழந்திருப்போம்.

    வரிகள்,
    அந்தக் கொடிய கணத்துக்குள், அழைத்துச் சென்று காட்சிப்படுத்துகின்றன.

    யவனிகா+அக்கா வின் கவிதைகள், இன்னும், என்றும் தொடர்ந்திட வேண்டும்.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. #614
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சொல்லவந்த கருத்து ஒன்றாக இருந்தாலும்
    சொல்லிய விதம், அதை ஏந்திய சொல்வளம்..

    இவற்றில் யவனி போல் கவனம் ஈர்ப்பவர் அரிது!

    மாறா வியப்புடன் - அண்ணன்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #615
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    20 Jan 2009
    Location
    இலங்கை,கொழும்பு
    Posts
    225
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    0
    Uploads
    0
    உண்மை தான்.. இளசு,அக்னி இருவரது கருத்துக்களையும் முன்மொழிகிறேன்..
    யவனிகாவின் கவிதையில் நயமும்,சுயமும் தெரிகிறது.சமர் தொடரும்..
    A.R.V.LOSHAN

    www.arvloshan.com

    லோஷன்

  4. #616
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    20 Jan 2009
    Location
    இலங்கை,கொழும்பு
    Posts
    225
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    0
    Uploads
    0
    வாழ்க்கையில் ஜெயித்து விட்டேன் என்று
    எல்லாரும் உரக்கச் சொல்ல*
    நான் மட்டும் ஓரமாக நின்று
    நல்லவானாக இருந்தாலும்
    நல்லவன் என்று மற்றவர் சொல்ல
    ஆசைபடும் மனிதப் பொதுவிதிக்கு கட்டுப்பட்டு
    நான் வாழ்கிறேன் என்று
    சத்தமில்லாமல் சொல்லிக்கொண்டேன்
    ரவுத்திரனின் கவிதை வாசிக்கும்போது சாதாரணமாகத் தோன்றினாலும்,வாசித்தபின் ஆழமாக யோசிக்க வைத்தது.. எங்கள் பலரின் வாழ்க்கை எத்தனை போலியானது..
    A.R.V.LOSHAN

    www.arvloshan.com

    லோஷன்

  5. #617
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    20 Jan 2009
    Location
    இலங்கை,கொழும்பு
    Posts
    225
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    0
    Uploads
    0
    செத்து விட்டதாய் நினைத்துக்கொல்
    என் கவிதை தடயங்களை.
    பொட்டில் அறைந்தது போல் ஒரு சில வரிகளில் ஓராயிரம் மன வேதனைகள்.. வாழ்த்துக்கள்
    A.R.V.LOSHAN

    www.arvloshan.com

    லோஷன்

  6. #618
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    11,912
    Downloads
    4
    Uploads
    0
    லோசன்..
    சலனமற்று இருந்த சமர்களம்
    உங்கள் கவிதைகளால் அமர்களமானது.
    அத்தைகைய உங்களிடமிருந்து
    இப்படி ஒரு வாழ்த்து.
    நெகிழ்ந்தேன்.. மகிழ்ந்தேன்.

  7. #619
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    உன் துணையுடன்
    நீ பேசிக் களித்திருக்கையில்
    நானெங்கோ ஒரு ரயில் நிலையத்தின்
    புத்தகடையில் வேடிக்கை பார்த்திருக்கலாம்..

    உன் குழைந்தைக்கு
    நீ நிலாசோறு ஊட்டுகைட்யில்
    அறியாத அந்நியர்களோடு
    நான் பேசிக்கொண்டிருக்கலாம்..

    எதோ ஒரு மழையை
    நீ ரசித்திருக்கையில்
    இழுத்திப்போர்த்தி நான்
    ஆழ்ந்து உறங்கியிருக்கலாம்..

    இப்படி உனக்கும் எனக்கும்
    எந்த சம்பந்தமும் இல்லை
    என்றான பிறகும்..
    உருகும் கண்களோடும்
    இறுக்கமான இதழ்களோடும்
    அறியாதவரை போல
    நடந்து கொள்ள..
    நமக்காக ஒரு சந்திப்பு
    எங்கோ காத்திருக்கலாம்..
    ஆதியின் அக்மார்க் டச்.இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாம்.வாழ்த்துக்கள் ஆதி.

    உன் குழந்தைக்கு நீ
    சோறூட்டுகிறாய்...
    என் மகனுக்கு
    பந்து பொறுக்குகிறேன் நான்...
    உன் வீட்டிலும்
    என் தெருவிலும்
    ஒரே நேரத்தில்
    பண்பலை ஒலிக்கிறது
    நீயும் நானும் சிலவருடம்முன்
    சேர்ந்து ரசித்த பாடலை...

    கையெடுத்த கவளமும்...
    எறிய எடுத்த பந்தும்...
    தாமதிக்கும் கணத்தின் கனம்..
    இன்னும் நம் காதல்,
    எங்கோ இந்த பிரபஞ்சத்தில்
    இருப்பதை சொல்லாமல் சொல்கிறது...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  8. #620
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by poornima View Post
    சமைக்கும் கனவுகளை
    பரிமாற வார்த்தைகள்
    தேடினேன்..

    நீயே கவிதையானாய்..

    நினைத்த கவிதைகளை

    உன்னிடத்தில் பகிர
    வந்தேன்..
    நீயே மீண்டும்
    கனவுகள் ஆனாய்..
    கனவுகள் கவியாய்
    கவி நீயாகி,
    இரண்டும் பின்
    கனவாகி......

    அருமை பூர்ணிமா, நிரம்பவே இரசித்தேன்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #621
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by யவனிகா View Post
    ஆதியின் அக்மார்க் டச்.இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாம்.வாழ்த்துக்கள் ஆதி.

    உன் குழந்தைக்கு நீ
    சோறூட்டுகிறாய்...
    என் மகனுக்கு
    பந்து பொறுக்குகிறேன் நான்...
    உன் வீட்டிலும்
    என் தெருவிலும்
    ஒரே நேரத்தில்
    பண்பலை ஒலிக்கிறது
    நீயும் நானும் சிலவருடம்முன்
    சேர்ந்து ரசித்த பாடலை...

    கையெடுத்த கவளமும்...
    எறிய எடுத்த பந்தும்...
    தாமதிக்கும் கணத்தின் கனம்..
    இன்னும் நம் காதல்,
    எங்கோ இந்த பிரபஞ்சத்தில்
    இருப்பதை சொல்லாமல் சொல்கிறது...

    நன்றிங்கக்கா.. உங்க கவிதை சூப்பருங்க அக்கா..

    நீங்க சொன்னமாதிரி இன்னும் செதுக்கி இருக்கலாம் தான்.. இனி வருபவைகளில் முயற்சிக்கிறேன்..
    அன்புடன் ஆதி



  10. #622
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by வசீகரன் View Post
    எனக்கு முன் ஓடி
    கலைத்தவர்களும் அல்லர்....
    எனக்குப்பின் ஓட காத்து
    இருப்பவர்களும் அல்லர்...

    வெற்றி பெறப்போவது
    நேரங்கள்
    மட்டுமே....!!!
    அழகான கவிதை வசீகரன்...

    உங்களுக்கு முன் ஓடியவர்கள் எப்படி உங்களைக் கலைப்பார்கள்?
    அல்லது,
    கலைத்தது எதை அல்லது எவற்றை?

    மனித ஓட்டத்தைப்
    பொருட்படுத்தாத
    காலத்தின் ஓட்டம்...
    காலத்தின் ஓட்டத்தைக்
    கவனத்திற் கொண்டேயாகவேண்டிய,
    மனிதன்...

    இரண்டையும் சமப்படுத்துவது,
    என்பது கடினம்.
    சமப்படுத்தினாலோ
    எதுவுமே சுலபம்.

    பாராட்டுக்கள் வசீகரன் அவர்களே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #623
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதி View Post
    தானென்று எண்ணிநிதம் தேனென்று அலையாமல்
    வீணென்று வாழ்வதனை விட்டொதுங்கி ஏகவேண்டும்..

    தத்துவத்தின் தத்துவமாய் சித்தபொருள் உனையேந்தி
    செத்தபொருள் போலுலகில் நித்தம்நான் உலவவேண்டும்

    மிளிர்மேனி நங்கைர்மேல் மீதுரும் என்பார்வை
    தளிர்மேனி பிள்ளைகளை காண்பதுபோல் அமையவேண்டும்..

    தாயென்று தகைமைதந்து தத்தைமொழி பாவையரை
    நோயின்றி நோக்கியவர் சேயென்று பழகவேண்டும்..

    மயக்கும் ஆசைமீது மோகமின்றி என்னுயிரை
    இயக்கும் உன்நினைவில் இசைந்திசைந்து உருகவேண்டும்..
    அசத்திட்டீங்க ஆதி...

    உள்மன ஆர்வத்தையும் வெளியுலக ஈர்ப்பையும் இயல்பாக இரண்டடியில் வெளிப்படுத்தியமை உன் திறமைக்கு மற்றொரு சான்று..!!

    பள்ளியில் மனப்பாட பகுதியில் படித்த கடவுள்வாழ்த்து பாடல்களை நினைவூட்டும் வகையில் வரியமைப்பு வசீகரிக்கிறது... சுதி சுத்தமாய் இருக்கிறது உன் கவிதையில்.. வாழ்த்துக்கள் நண்பரே..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  12. #624
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    அசத்திட்டீங்க ஆதி...

    உள்மன ஆர்வத்தையும் வெளியுலக ஈர்ப்பையும் இயல்பாக இரண்டடியில் வெளிப்படுத்தியமை உன் திறமைக்கு மற்றொரு சான்று..!!

    பள்ளியில் மனப்பாட பகுதியில் படித்த கடவுள்வாழ்த்து பாடல்களை நினைவூட்டும் வகையில் வரியமைப்பு வசீகரிக்கிறது... சுதி சுத்தமாய் இருக்கிறது உன் கவிதையில்.. வாழ்த்துக்கள் நண்பரே..!!

    கண்ணிகள் எழுத வேண்டும் என்று வெகுநாளாக ஆசை சுகந்தா..

    அந்த ஆசை கவிச்சமரில் பூர்த்தியானது..

    கண்ணிகளாக இருப்பதால் தானாகவே தாளமும் ஓசைநயமும் கூடி கொண்டது..

    உன் பாராட்டுக்கள் நன்றிகள் சுகந்தா..
    அன்புடன் ஆதி



Page 52 of 59 FirstFirst ... 2 42 48 49 50 51 52 53 54 55 56 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •